வரலாற்று அறிவியல்: மழை காலங்களில் ...

 

ஒரு மழைக்கால நள்ளிரவு

வீதியில் நடக்கையில்

பாதங்கள் குளிர்ச்சியடைந்து

மகிழ்ச்சி அடைகின்றன

 

இருளும் குளிரும் உடலை

ஆடையாய்ப் போர்த்த

மனமெங்கும்

மத்தாப்புச் சிதறல்கள்

 

படைவீர்ர் இறங்குவது போல

வீதிவிளக்கு வெளிச்சத்தில்

சரமாரியாய்த் தூறல்கள்

 

வந்துவந்து போகும்

அவளின் புன்னகையாய்

மின்னல் வெடிப்புகள்

 

கொட்டு மேளச் சத்தமாய்

இடைவிடாமல் வரும்

லேசான இடிஒலி

 

குளிர அடக்க

முடங்கி முடங்கிப் படுக்கும்

பிச்சைக்காரர்

 

சரியான இடம் தேடி

அலைகின்ற தெருநாய்

 

தம்மை விருந்துண்ணத்

தாமே அழைக்கும்

தவளைச் சத்தம்