வந்துவிடு! வந்துவிடு –   வளவ. துரையன்  

எங்களால் கண்டிக்கப்பட்ட இறுதிவரை மிகவும் அழிக்கப்பட்டது. கவிதை, கவிஞர்கள் பற்றி பெரிய மனிதர்கள். "ஒரு மார்பளவு என்னுடன் சுற்றித் ...

வந்துவிடு! வந்துவிடு
வளவ. துரையன்
உன்னை என்னால்
புரிந்து கொள்ள முடியவில்லை.

இக்கணம் வரமாட்டாய்
என நினைக்கையில்
வார்த்தை ஜாலத்தோடு
வந்து நிற்கிறாய்

மூன்று நான்கு நாள்கள்
காத்திருக்கும் போது
கண்ணாமூச்சி ஆடுகிறாய்

உன்னையே எண்ணியிருப்பதால்
என்னைப் பித்தன் என்கிறார்.

உனக்கும் எனக்கும் இடையே
நிலவும் பாசம் நிறைந்த பாலில்
வெண்ணெய்போல் பதுங்கியிருக்கிறது,

நினைத்தவுடன் மனம் கனத்து
வெளியே வந்துவிட்டால்
காலம் காலமாக இருந்துவரும்
மரபென்ன ஆகுமோ?

ஆனால் இப்படி
வராமலே இருந்துவிட்டால்
வழிவழி வந்தஎன்
வாய்ச்சொல்லும் பெயரும்
தேய்ந்தழிந்து போகும்.

தவழ்ந்துவரும் மழலையைத்
தாவி அணைப்பதுபோல
தளிர்க்கரம் பற்றிக்
காதலிக்குத்
தனிமுத்தம் தருவதுபோலக்
காத்திருக்கிறேன்.

வந்துவிடு வந்துவிடு!
தாளெடுத்து விட்டேன்.
வந்துவிடு!

 

Why I Write | Neuro Vantage

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.