கல்யாண மண்டபத்தில், பெரிய பவானி ஜமக்காளத்தின் மேலே, ஒரு தனியறையில், தனியாகச் சீட்டுக் கச்சேரி நடந்து கொண்டிருந்து அன்று அதிகாலை முகூர்த்தமானதால், எல்லா களேபரங்களும் முடிந்து மண்டபம் அமைதியாக இருந்தது. எல்லோரும் கொஞ்சம் நிதானமாக இருந்ததால் இது சாத்தியப் பட்டது.. அங்கங்கே பலர் ஒய்வு எடுத்துக் கொண்டிருந்தனர்.
அடுத்து நலங்கு, அப்பறம் மாலை சுவீட் காரம் காபி, அதற்குப் பிறகு தடபுடல் வரவேற்பு,மெல்லிசைக் கச்சேரி பவ்வே விருந்து … ஹும்ம், நிறைய வேலை, சடங்குகள் இருக்கின்றன அதில் எதைப் பற்றியும் கவலை இல்லாமல் மணமகளின் தந்தையும் சீட்டுக்கச்சேரியில் லயித்து விட்டார், வேறு வேலையில்லை சீட்டுக்கச்சேரிக்கு அடிமை, வழியில்லை.
சீட்டு விளையாடுவார் அப்பப்ப.. ஆனால் இன்று அதிர்ஷ்டம் இவர் பக்கமே இல்லை… ஒரு மணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் தோற்றுப் போய் விட்டார். கையில் இருந்ததெல்லாம் முதலிலேயே இழந்து விட்டார்.
கூட விளையாடியவர்கள் அனைவரும் பந்தியில் பரிமாறுபர்கள்.
நாதன், அவரைத் தேடி அவர் மகன் “ஜிம்பிளி” . தேடி வந்தான், “அப்பா உன்னைத் தேடிக் கொண்டிருக்காங்க , நீ இங்கே ஆனந்தமா விளையாடிட்டு இருக்கே, ஏம்ப்பா இப்படி?'”
“ஏ ஜிம்பிளி, ஒரு கை குறையுது, நீ வந்து உக்காரு”
“போப்பா எல்லோரும் போங்கு ஆட்டம் ஆடறவங்க, மூஞ்சியைப் பார்த்தாலே தெரியுதே” அப்படினு சொல்லிக்கொண்டே அம்மாவிடம் இதைப்பற்றி சொல்லிவிட போய்விட்டான்.
நாதன் நினைத்தது, அவர் மகன் விளையாடினால் தான் தோற்ற பணத்தை அவனை விட்டுக் கட்டச் சொல்லலாம் , ஆனால் அது நடக்கலை .
நாதன் மனைவி சித்ரா கோபத்துடன் வந்தாள் . “என்ன நீங்க செய்யறது நல்லாவே இல்லையே, இப்ப சீட்டாட்டம் ஒரு கேடா, ஏப்ப பாரு சீட்டு விளையாடி எல்லாத்தையும் தொலைத்துக் கொண்டிருக்கீங்க, மண்டபத்தில் எல்லோரும் உங்களைத் தான் தேடறாங்க,” அவர் தோளைத் தட்டி கூப்பிட்டாள் .
அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஒருவன், “அதெப்படி, தோத்துப் போயிருக்காரு, பணத்தை கொடுக்கணும் இல்லை விளையாடி ஜெயிக்கணும், இப்படி பாதியில் போக முடியாது”
இந்தக் திருமணமே நாங்க தான் நடத்தறோம், நீங்கச் சமையல் வேலைக்குக் கூலி வாங்கித்தான் வந்திருக்கிறீர்கள் , துட்டு எல்லாம் கொடுக்கமாட்டோம்”
“அதெப்படி உழைப்புக்குக் கூலி அது தனி, இங்க ஆட்டத்தில் தோத்ததிற்கு பணம் கொடுக்க வேண்டியது தனி”
“இங்க தோத்தப் பணத்தைத் தந்துவிட்டு அழைத்து போங்க” அவனே தொடர்ந்தான்
“அப்படியா இதோ வரேன்” என்று வெளியே போனாள்.
கச்சேரி தொடர்ந்தது.
ஒரு காவல்துறை ஆய்வாளர், காவல்துறை உடையில் வந்து நின்று கதவை அதிரடியாகத் திறந்தார். பின்னால் சித்ரா வந்தாள் சத்தமாகவே “இங்கே காசு வச்சி விளையாடறாங்க சார்”
காலுக்கு அடியில், வேட்டி சீட்டுகளுடன் அப்படியே அள்ளிக் கொண்டு போட்டதை விட்டபடியும், விட்டதைப் போட்டபடியும் எல்லோரும் ஓடினார்கள்.
காவலர் தாவி ஒரு சமையல் காரனைப் பிடித்தார்.
“மத்தவங்களையும் கூப்பிடு, உங்க முதலாளியை நான் இப்ப பாக்கணும் ” பிடித்தவனை ஒரு அரை விட்டு இழுத்துக் கொண்டே போனார், “இனிமே இந்த மாத்தி ஜனம் கூடுமிடத்தில் காசு வச்சு விளையாடுவீங்களா?”.
“மாட்டேங்க” கேவலுடன் அழுதான்.
#
நாதனுக்குக் கொஞ்சம் கேவலமாக இருந்தாலும் இப்ப தப்பித்தோம் அப்படினு ஒரு பெரிய மூச்சு விட்டான்.
சித்ரா நாதனைப் பார்த்து ” ஏன் என் மானத்தை இப்படி வாங்கின ?”, “ஏம்பா நீதானே பொண்ணோட அப்பா கொஞ்சம் பொறுப்பா இன்னிக்கு ஒருநாள் கூட பொறுப்பா நடந்துக்க மாட்டியா?”
“ஏன் போலீஸ் அளவுக்கு இதைப் போய்க் கொண்டு போனே? என் மானத்தை நீதான் வாங்கின? எங்கிட்ட ஏன் எப்படி நடத்துகிற?”
“அந்த காவல் ஆய்வாளர் என் அலுவலக தோழி சுகுமாரியின் கணவர், வேலை நடுவிலே இங்க திருமணம் விசாரிக்க வந்திருக்கிறார், அவரைத் தான் நான் உங்க கச்சேரிக்கு அழைத்து வந்தேன், அதுவே ரொம்ப நல்லதாப்போச்சு, அந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் அப்படினு அடம் பிடிச்சியே, அதுனாலத் தான் எனக்கு வேறு வழி தெரியல, அதான் உங்க கூட்டத்தை கலைக்க அந்த வழியை பயன் படுத்தினேன்”
“அப்படியா செய்தி, அவரு என்னைத் தேடி மறுபடி வரமாட்டாருல்ல…? அப்பாடி!”
சித்ரா தன் கணவரை இளக்காரமாகப் பார்த்தாள். “திருந்த மாட்டியா நீ?
“திருமணம் விசாரிக்க நிறையப் பேர் வருவாங்க, தெருஞ்சுக்கப்பா”
அருமையான கதை. ஆனால் சமையல்காரர்கள் ஏமாற்றப் பட்டது தான் போங்கு ..பாவம்.
LikeLiked by 1 person
Reception buffet la Mann dhan
LikeLike