சிரிப்புக் கொத்துப் போட்டி

சிரிப்பு - கவிதை - கவிதைகள் கதைக்கலாம் - Quora👑திகழ் திரு அம்மா on X: "வெட்கம் கலந்த சிரிப்பு பளிச்செனக் கவர்ந்து ஆழமாக மனதில் பதியும் அது போன்றதொரு அழகான சிரிப்பு இது :) http://t.co/aIs6Gji6ef" / Xசிரிப்பு | Latest Tamil News Updates, Videos, Photos | Vikatanதேவதை சிரிப்பு |கவிதை|ச.குமரேசன் » இனியவை கற்றல் | பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்

 

சிரிப்புக் கொத்துப் போட்டியில் கலந்து கொண்ட 51 பேருக்கும் நன்றி!

சுட்ட ஜோக்குகளையும் அனுப்பலாம் என்றதும் ஓரிருவரைத் தவிர எல்லோரும் நன்றாகச் சுட்ட ஜோக்குகளையே அனுப்பியுள்ளார்கள்.

மக்கள் கையில் கிடைத்த ஜோக்குகளை அனுப்பவதைவிட இன்னும் சிறப்பான சிரிப்புகளைத்  தேடியிருக்கவேண்டும் என்பது நடுவரின் கருத்து

பதுங்குகுழி மன்னர் ஜோக்ஸ், கணவன்-மனைவி திட்டுதல் , டாக்டர் ஜோக்ஸ், அரசியல் வாதி ஜோக்ஸ்  போன்றவற்றைத் தவிர வேறு புது மாதிரி யாரும் யோசிப்பதாகத் தெரியவில்லை.

நமக்கு வந்த ஜோக்குகள் அனைத்தும் இந்த மாதிரியே இருக்கின்றன. அவற்றுள் சில ஏற்கனவே பலமுறை படித்திருந்தாலும் மீண்டும் நம்மை கொஞ்சம் கிச்சு கிச்சு மூட்டுகிறது.

அதன்படி நடுவர் தேர்ந்தெடுத்த வெற்றியாளர்கள் பன்னிரண்டு பேர் ; அதில் பத்து பேரைத் தேர்ந்தெடுக்கக்  கூறினார்கள். பன்னிரண்டு பேருக்கும் ஆளுக்கு ரூபாய் 100 கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்தோம். 

இவர்களுக்கு நல்ல நகைச்சுவையை ரசிக்கும் எண்ணம் இருக்கிறது! வாழ்த்துக்கள் !! 

            1. மஞ்சுளா சுவாமிநாதன்
            2. தென்காசி கணேசன்
            3. ஹரிஹரன்
            4. வத்சலா
            5. திருப்பூர் வடிவேல்
            6. மு க  இப்ராஹீம் வேம்பார் 
            7. கலையரசி
            8.  இரஜகை நிலவன்
            9. பாலசுப்பிரமணியன்
            10. மாலதி சுவாமிநாதன் 
            11. சுரேஷ் ராஜகோபால்
            12. ரேவதி ராமச்சந்திரன்

இவர்களுக்கான பரிசுத்தொகை ( ரூபாய் 100) விரைவில் அனுப்பப்படும் 

சிரிப்புக் கொத்து

மஞ்சுளா சுவாமிநாதன்

😛,😛,😛,😛,

சார் சொன்னா புரிஞ்சுக்கோங்க… மன அழுத்தத்துக்கு மாத்திரை வேணும்னா டாக்டர் சீட்டு வேணும், இப்படி உங்க கல்யாண சர்டிபிகேட் எல்லாம் காட்ட கூடாது.

 

😛,😛,😛,😛,

“ஓய் வாரம் தவறினாலும், நீர் உம் சம்சாரத்துக்கு லெட்டர் எழுதற்து தவறாது போலிருக்கே! பரஸ்பரம் அவ்வளவு அன்பா உங்களுக்குள்ளே?”

அதில்லைங்காணும்! ஒரு வாரம் எழுதத் தவறினா உடனே புறப்பட்டு இங்கே வந்துடுவேன்னு                         சொல்லியிருக்கா! அதனாலேதான்!”

😛,😛,😛,😛,

பாட்டு வாத்தியார்: வாங்க… என்ன விசேஷம்?

காவல்காரர்: வேற ஒண்ணுமில்ல, தெருவிலே ஜனங்க சொல்லிகிட்டுப் போனாங்க, இந்த வூட்ல தியாகய்யரைக் கொலை பண்ணறாங்கன்னு. பார்துட்டு போலாமுன்னு வந்தேன்.

😛,😛,😛,😛

“எந்த தைரியத்தில் இரண்டாயிரம் ரூபா கடன் கேக்குற?”

“ வாக்காளர் பட்டியல்ல என் பெயர் இருக்குங்க!”

 

😛,😛,😛,😛

“என் வாளை வெளியே எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டதா… என்ன சொல்கிறீர் அமைச்சரே…”

“சாணை பிடிக்கிறவன் வந்திருக்கிறான் மன்னா!”

 

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

தென்காசி கணேசன்

😛,😛,😛,😛

டாக்டர்: கவலைப்படாதீங்க, ஆபரேஷனுக்கு பிறகு உங்க சொந்தம் பந்தம் எல்லாரையும் பார்ப்பீங்க.

நோயாளி : என் சொந்தம் பந்தம் யாரும் இப்போ உயிரோட இல்ல டாக்டர்.

டாக்டர் : எனக்குத் தெரியும்.

😛,😛,😛,😛

மனைவி ‘ பக்கத்து வீட்டுக்காரி உங்களுக்கு சபல புத்தி இருக்குன்னு சொல்றா…..

கணவன் : இப்போ என்ன சொல்ற ?  நீ எனக்கு புத்தியே இல்லன்னு சொன்னியே!   இப்போ என்ன சொல்ற ?

😛,😛,😛,😛

நீதிபதி: கடைசியாக உங்கள் கணவர் என்ன சொன்னார்?

குற்றவாளி: குடிக்கத் தண்ணி கொண்டு வா ஜோதி என்றார்.

நீதிபதி: அதுக்காகவா அவரைக் கொன்றீர்கள்?

குற்றவாளி: என் பெயர் ராதிகா யுவர் ஆனர்.

நீதிபதி: !!!

😛,😛,😛,😛

பல் டாக்டரை பாக்கப் போனிங்களே, ஏன் வந்துட்டீங்க  ?

அங்க  போனா பெண் டாக்டர் இருந்தாங்க – நாம எந்தப் பொண்ணுட்டயும்          பல்லைக் காட்டினோம்நு பேர் வரக்கூடாது

😛,😛,😛,😛

என்னம்மா தனியா வந்திருக்க – மாப்பிள்ளை வரலியா

அவரோட சண்டை போட்டேன் – தனியாக வந்துட்டேன். சரிப்பா அம்மா எங்கே?

இப்பத்தான் அவ என்னோடு சண்டைபோட்டுண்டு, அவங்க வீட்டுக்கு    போயிருக்கா

😛,😛,😛,😛

கல்லூரிக்கு வந்த சிறப்பு விருந்தினர், மாணவர் தலைவனிடம்:

என்னப்பா இது CO-ED காலேஜ் தானே ! சுமாரா எத்தனைப் பொண்ணுங்க          இருக்காங்க ?

எல்லாப் பொண்ணுமே சுமார் தான் சார்

😛,😛,😛,😛

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஹரிஹரன் C R

😛,😛,😛,😛

ஆபரேஷன் முடிஞ்சா என்ன சாப்பிடலாம் டாக்டர்?

எமலோகத்துல என்ன சாப்பிடத் தருவாங்கன்னு எனக்குத் தெரியாதே!

😛,😛,😛,😛

ரவுடிகளையெல்லாம் போலீஸ் பிடிக்கப் போறாங்கன்னு கேட்டு ஏன் தலைவரே கவலையா இருக்கீங்க?

இனிமே நம்ம கட்சி இருக்குமோன்னு தான்யா!

😛,😛,😛,😛

போர்ஜரி பண்ணி மாட்டிக்கிட்ட தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பாப் போச்சு!

என்னாச்சு?

இப்ப சர்ஜரி பண்ணியும் மாட்டிகிட்டார்!

😛,😛,😛,😛

பிளஸ் டூ ரிசல்ட் என்ன ஆகுமோன்னு கவலையா இருக்கு!

யார் பரீட்சை எழுதியிருக்காங்க சிஸ்டர்?

நம்ம டாக்டர் தான்!

😛,😛,😛,😛

அரண்மனைக்கு ஒரு நிதி அமைச்சரை தேடிக்கொண்டு இருக்கிறேன்  மகாராணி!

இதுக்கு  முன்னால ஒரு நிதி அமைச்சர் இருந்தாரே மன்னா?

அவரையும் தேடிக்கொண்டு இருக்கேன் மகாராணி!

 

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஆர். வத்ஸலா

😛,😛,😛,😛

சர்வர்: சார், கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி உங்க எடத்திலெ ஒக்காந்து ஒருத்தர் மசால் தோசெக்கு ஆர்டர் கொடுத்தாரெ அவரெங்கே?

தாடி ஆசாமி: நான்தாம்பா அது.

சர்வர்: அவருக்கு தாடி இல்லே சை சார்.

தாடி ஆசாமி: தோசை  வர்றத்துக்குள்ள  வளந்துடுச்சுப்பா!

😛,😛,😛,😛

சர்வர் ஒரு ப்ளேட்டில் ஒரு ஸ்பூனும் ஒரு மிகச் சிறிய கிண்ணத்தில் சட்னியும் வைத்துவிட்டு போய் விட்டார். வெகு நேரம் காத்திருந்து பின் சர்வரை அழைத்த

கஸ்டமர்: இட்லி எப்பப்பா வரும்?

சர்வர் : ஸ்பூனெ தூக்கி பாருங்க சார், இருக்கு.

😛,😛,😛,😛

புக் ஃபேரில் ஒரு கடையில் ஒருவர் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார்.

அந்த கடைக்காரரிடம் அடுத்த கடைக்காரர்: அவருக்கு என்னாச்சுப்பா?

அவர்: ஒண்ணுமில்லெப்பா, அவர் எழுதின கவிதைப் புத்தகம் ஒண்ணு வித்து போச்சுப்பா.

😛,😛,😛,😛

‘எப்படியோ’ எம்.பி.பி.ஸ். பட்டம் பெற்று விட்ட டாக்டருடைய க்ளினிக் வாசலில் போர்டில் எழுதி இருந்தது:

”இங்கு ஒருவர் அப்பெண்டிக்ஸ் ஆபரேஷன் செய்துக் கொண்டால் அடுத்த முறை அவருக்கு இலவசமாக  அப்பெண்டிக்ஸ் ஆபரேஷன் செய்யப்படும்.”

😛,😛,😛,😛

 அப்பப்பா! என்ன வெக்கெ! வேர்த்து கொட்றது! இத்தனெக்கும் எனக்கு வேர்க்காதுன்னு பேரு!

 ஒங்க பேரு ராமசாமின்னு சொன்னாங்களெ யாரோ!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

திருப்பூர் செ.ந.வடிவேல்.

😛,😛,😛,😛 

“சரக்கு வாங்கியிருக்கீங்க, “சைடு டிஷ்” ஏதும் வாங்கலையா?”

“வீட்ல கொலு” வைச்சிருக்காங்க, எப்படியும் “சுண்டல்” கிடைக்கும்!”

😛,😛,😛,😛

“மகாராஜா, தாங்கள் “பதுங்கு குழிகள்” தோண்டியதை தவறாக நினைத்துக் கொண்டு, மணல் சுரண்டுவதாக எதிரி உங்கள் மீது குற்றம் சுமத்தி உள்ளான்!”

😛,😛,😛,😛

“கள்ள நோட்டு அடிச்ச நம்ம தலைவர் போலீஸ்ல மாட்டிக்கிட்டாரா, எப்படி?”

“ஆர்வக் கோளாறுல தன்னுடைய போட்டோவையும் சேர்த்து ரூபாய் நோட்டில்  “பிரிண்ட்” பண்ணியிருக்கார்!”

😛,😛,😛,😛

“எனக்கு உடம்பு நல்லாயிருக்கும் போது, எதற்கு டாக்டர் ஆப்ரேசன் பண்னனும்னு சொல்றீங்க?”

“எனக்கு சர்வீஸ் முடியப் போகுது, அதனால கடைசியாக ஒரு தடவை ஆப்ரேசன் செய்திடலாம்னு இருக்கேன்!”

😛,😛,😛,😛

“பூரிக்கட்டை “வெயிட்”ங்கிறது கடையில் வாங்கும் போது தெரியல!”

“என்னடி சொல்ற?”

“என் புருசன், மண்டை உடையும் போது தான் தெரிஞ்சுது!”

திருப்பூர் – 641604

செல் : 9080259025

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

மு.க.இப்ராஹிம் வேம்பார்

😛,😛,😛,😛

“ஹலோ டியர் ..நைட் போன் போட்டேன். தொலைத் தொடர்புக்கு அப்பால் உள்ளாருன்னு வந்துச்சே எதுக்கு இளவரசி..?”

“மன்னர் கூட பதுங்கு குழிக்குள்ளே இருந்தேன் டார்லிங்..!”

😛,😛,😛,😛

மாப்பிள்ளைக்கு அரிசிக் கொம்பன்னு காட்டு யானையோட பேரை வச்சிருக்கீங்களே எதுக்கு..?”

“சோறு,கஞ்சியைப் பார்த்திட்டா, அவ்வளவு சீக்கிரம் டைனிங் டேபிளை விட்டு எழுந்திரிக்கமாட்டாரு..!”

😛,😛,😛,😛

“நம்ம கட்சியோட ஆலோசனைக் கூட்டத்துக்கு எவ்வளவு  சாப்பாடு  சொல்லிருக்கேய்யா.?”

“நீங்களும் நானும்தானே..ஒரே ஒரு பார்சல் சாப்பாடே போதுமின்னு நினைக்கிறேன் தலைவரே..!”

😛,😛,😛,😛

“தலைவரே..மதுரை..திருச்சி..சென்னை..!”

“நம்ம கட்சிக்கு ஒதுக்கின தொகுதிகளா..?”

“காமெடி பண்ணாதீங்க..அங்கெல்லாம் உங்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடக்காம் தலைவரே.!”

😛,😛,😛,😛

மன்னர் அரண்மனைக்கு வரும் பாதைக்கு ஹெல்த் வாக் சாலையின்னு பேரு வச்சிருக்கே…தினமும் வாக்கிங் போவாரா..?”

“ம்ஹும்..இடையூறு இல்லாமல் போர்க்களத்திலிருந்து புறமுதுகிட்டு ஓடி வரும் பாதையாம்..!”

 

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

கலையரசி முருகன் M 

 

(சொந்த ஜோக்) 

😛,😛,😛,😛

’மன்னரை அதிகாரிகள் எதுக்கு விசாரிக்கறாங்க..’’

‘’வீரத்துக்கு அதிகமா ஆயுதங்கள் சேர்த்து வெச்சிருந்தாராம்..’’

😛,😛,😛,😛

“தலைவரை வாழ்த்துகிற இந்த பேனரை சீனியர் சிட்டிசன்கள்தான்  வெச்சிருக்கணும்னு எப்படி சொல்ற..”

“வாழ்த்த வயதிருக்கு வாழ்த்துகிறோம்னு போட்டிருக்கே..”     

😛,😛,😛,😛

  ‘’வெற்றி அல்லது வீரமரணம் அமைச்சரே..’’

‘’மகாராணியோடு சதுரங்கம் ஆட போவதற்கெல்லாம் இந்த டயலாக் தேவையா மன்னா..’’

😛,😛,😛,😛

‘’படியில விழுந்து காலை உடைச்சிகிட்டதுக்கு எதுக்கு டாக்டர் நான் கார் வெச்சிருக்கேனா பைக் வெச்சிருக்கேனான்னு கேட்கறீங்க..’’

‘’பைக் வெச்சிருந்தா எக்ஸ்ரே எடுக்க சொல்வோம், கார் வெச்சிருந்தா ஸ்கேன் எடுக்க சொல்வோம்..’’

😛,😛,😛,😛

‘’தலைவர் ஜெயிச்சதும் தன்னை நம்பிய எல்லோருக்கும் கட்சியில பொறுப்பு 

கொடுக்கிறதா சொன்னாரே..’’

‘’அத்தனைப் பேருக்கும் உறுப்பினர் அட்டையைக் கொடுத்து ‘தொண்டர்’ங்கிற 

பொறுப்பு கொடுத்திருக்கிறதா சொல்லிட்டார்..’’

எம்.கலை,சேலம் 

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இரஜகை நிலவன்

🎯 சிரிக்க மட்டும்  ~மஞ்ச கயிறு   எடுத்து கையில   கட்டுனா அது “காப்பு”..  அதுவே ஒரு   பொண்ணு கழுத்துல கட்டுனா  அது நமக்கு நாமே வச்சுக்குற “ஆப்பு”..!

🎯  மாமா பொண்ணும், உப்புமாவும் ஒன்னு!! வேற எதுவுமே கிடைக்காத பட்சத்துல நம்மளோட தலையில கட்டப்படும்!!

🎯  தப்பை மன்னிக்கிறவன் மனுஷன்.. தப்பே பண்ணாம மன்னிப்பு கேட்குறவன் புருஷன்

🎯  ~ஆட்டக்காரிக்கும் வீட்டுக்காரிக்கும் என்ன வித்தியாசம்..? ஒரு பாட்டுக்கு ஆடுனா அவ ஆட்டக்காரி.. அவபாட்டுக்கு ஆடுனா அவ வீட்டுக்காரி..!!

🎯  திருமண   மேடையில்   மணமகனுக்கு கொடுக்கப்படும்   கடைசி வார்னிங் “பொண்ண   கூப்பிடுங்க..  நல்ல நேரம் முடியப் போகுது”..

🎯  ~வாக்கிங் கூட்டிட்டு போகாத நாய்க்கும், ஷாப்பிங் கூட்டிட்டு போகாத பொண்டாட்டிக்கும் கண்டிப்பா ஒரு நாள் வெறி பிடிச்சுடும்.

🎯

அப்பா : என்னடா…உன் அம்மா காலைல இருந்து பேசாம இருக்கா?”

பையன்:அம்மா ‘lipstick’ எடுத்து தர சாென்னாங்க…நான் தெரியாம ‘fevistick’ எடுத்துக் காெடுத்துட்டேன்பா.”

 அப்பா:நீ என் மகன் இல்லடா என் குல சாமிடா…!” 💐💐💐💐💐

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பாலசுப்பிரமணியன் 

💐💐💐💐💐

“தலைவர்களோட சிலைகளுக்குக் கீழே ‘தோற்றம், மறைவு’ன்னுத் தானே போட்டிருப்பாங்க!உங்க தலைவர் சிலைக்குக் கீழே மட்டும் ‘தோற்றம், தலைமறைவு’ன்னு போட்டிருக்கீங்களே?”

“எங்க தலைவர் கட்சிக்குக் கணிசமாகப் பணம் திரட்டியதும் எல்லாத்தையும் சுருட்டிட்டு தலைமறைவாயிட்டாரு…!”

💐💐💐💐💐

“சார்! ஒரு ஆயிரம் ரூபாய் கைமாத்தா தர முடியுமா?”

“நீங்க யாருன்னே எனக்குத் தெரியாதே சார்!  அதான் யோசிக்கறேன் கொடுக்கறதுக்கு.”

“ஏனக்குக் கூடத்தான் நீங்க யாருன்னே தெரியாது.  நான் யோசிச்சேனா கேட்கிறதுக்கு?!”

💐💐💐💐💐

“மனைவி காணாமல் போனதுக்கு பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்ததுக்கா போலீஸ் அவரைக் கைது செஞ்சிருக்கு?!”

“மணமகள் தேவைன்னுன்னா விளம்பரம் கொடுத்திருந்தாரு!”

💐💐💐💐💐

என் மருமகளை மாதிரி மோசமானவளை நீ பார்த்தே இருக்க முடியாது!”

“ஏன்?  என்ன செய்தாள்?”

“நேத்து ராத்திரி நம்ம லேடீஸ் கிளப்பின் டின்னருக்கு நான் போகறதா இருந்தேன். அதுக்கு முன்னாடி என் பல்செட்டை எடுத்து எங்கேயோ ஒளிச்சு வெச்சுட்டா!”

💐💐💐💐💐

“எங்க தாத்தா எங்க பாட்டியைக் கல்யாணம் செஞ்சுட்டப்ப அவருக்கு பதினாலு வயசு தானாம்!”

“அத்தனைச் சின்ன வயசுல அவர் ஏன் போயும், போயும் ஒரு பாட்டியைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டாரு?!”

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

மாலதி சுவாமிநாதன்

💐💐💐💐💐

அப்பா நீ எங்க பிறந்த?

 ஜெய்ப்பூர்

அம்மா எங்க பிறந்தாங்க?

ஹைதராபாத்

நான் எங்க பிறந்தேன்?

பாட்னா

அப்போ நான் நீ அம்மா எங்கே சந்திச்சோம்?

💐💐💐💐💐

இங்கு, யாரால் ப்ரெஞ்ச் படிக்கமுடியும்?

“என்னால் முடியும், அது ஆங்கில எழுத்துகள் வச்சுதான எழுதறாங்க.”

💐💐💐💐💐

சென்னை வாசி :  ஆஹா! எவ்வளவு மான்கள் அங்கே!!

காட்டு வழிகாட்டி:  132

சென்னை வாசி : அது எப்படி கரெக்டா எண்ண முடியறது உங்களால்?

காட்டு வழிகாட்டி: அதற்கென்ன? கால்களை எண்ணிட்டு, நாலாலே வகுக்க வேண்டியதுதானே!

💐💐💐💐💐

சிறுவன்: டாக்டர் மூக்குக் கண்ணாடி வேண்டும்.  என் டீச்சருக்கு

டாக்டர்: ஏன்?

சிறுவன்: பாவம் அவங்களுக்குக் கண் தெரியல ,  என்ன எப்போதும் கழுதைன்னு  கூப்பிடறாங்க

💐💐💐💐💐

அப்பா ட்ரம்ஸ் வாங்கிக்கொடு

 முடியாது. நாள் பூரா அடித்துக் கொண்டு தொந்தரவு பண்ணுவே

 பிராமிஸா மாட்டேன்‌. எல்லாரும் தூங்கின பிறகு ப்ரெக்டிஸ் செய்யறேன்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

 

சுரேஷ் ராஜகோபால்

💐💐💐💐💐

 ஒருத்தி: உங்கள் வீட்டுக்காரருக்கு மறதி இருக்கிறது நல்லதாப்போச்சு.

எதிர் வீட்டுக்காரி ;:ஏன் ?

ஒருத்தி : எங்க வீட்டுவாசலில் அடிக்கடி கோலம் போடறாரு…!

💐💐💐💐💐

 ரகு: இந்த டாகடர் அதி தீவிர சினிமா ரசிகர் போல இருக்கு…

சோமு : எப்படி சொல்லற?

ரகு : ஆபரேஷன் தியேட்டர் முன்னே, தினசரி மூன்று ஆபரேஷன், சனி ஞாயிறு மற்றும் திருவிழா நாட்களில் நான்கு அப்படியென்று போஸ்டர் வச்சிருக்காரு..!

💐💐💐💐💐

 அவன்: நாம போகும் போது குறுக்கே பூனை போனா என்ன அர்த்தம்?

இவன்: அதுவும் எங்கேயோ போகுதுன்னு அர்த்தம் !

💐💐💐💐💐

அவள்: என் பிறந்த நாள் அன்னைக்கு நிறைய கேக், ஐஸ் கிரீம், பெரிய சாக்லேட் எல்லாம் வந்தன…. ஆனால் என்னால்தான் சாப்பிட முடியலை

இவள் : ஏன் ?

அவள் : எல்லாம் வாட்சப் செய்தியா  வந்தன.

💐💐💐💐💐

 பெண் : ஏன் உன்னை முதலாளி திட்டிவிட்டுப் போறாரு?

சக தொழிலாளி : அவர் வீட்டு நாயை காணோம் அப்படியென்று விளம்பரம் கொடுக்கச் சொன்னார், “நான் முதலாளி நாயை காணோம்” அப்படிக் கொடுத்துவிட்டு இவர் படத்தையும் போட்டுவிட்டேன்… அதனால் தான்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ரேவதி ராமச்சந்திரன் 

💐💐💐💐💐

ஒரு பாம்பு ரொம்ப நேரம் அழுதுகிட்டே இருந்துச்சாம்

ஏன்?

அது எடுத்த படம் பிளாப் ஆயிடுச்சாம்

💐💐💐💐💐

எல்லா லெட்டரும் வர மாதிரி ஒரு வேர்டு சொல்லுங்க

போஸ்ட் பாக்ஸ்

💐💐💐💐💐

தேர்வில் கேள்வி எல்லாமே ஈஸியா இருந்துச்சு பா

அப்புறம் எப்படி மார்க் கம்மியா ஆச்சு?

கேள்வி தானே ஈசியா இருந்துச்சு

💐💐💐💐💐

சூதாட்டம் ஆடக்கூடாது ஒரு நாள் ஜெயிப்ப ஒரு நாள் தோப்ப

அப்ப ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஆடலாமா?

💐💐💐💐💐

எது நடந்தாலும் நாம கவலைப்படுவது வீண்! ஏன்னா எது நடக்கிறதோ அதற்கு தானே கால் வலிக்கும்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

2 responses to “சிரிப்புக் கொத்துப் போட்டி

  1. உண்மையிலேயே பல துணுக்குகள் நன்றாக இருந்தன. கலையரசி முருகன் அவர்களின் முதல் இரண்டு துணுக்குகள் மிகப் புதுமை!

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.