![]()
ஒரு பட்டுப்புடவை செலக்ட் பண்ண பத்துகடை ஏறி இறங்கறீயே,ஞாயமா?
ஒரு பெண்டாட்டியை செலக்ட் பண்ண நீங்க மட்டும் முப்பது வீடு ஏறி இறங்கினேன்னு பீத்திக்கலை!
வெ. சீதாராமன்.
😍 என்ன சார்! நீங்க கூட பொம்பளை மாதிரி சீரியல் பார்த்து அழுவுறீங்க!
நல்லாப்பாருங்க! இது சீரியல் இல்லை! என் கல்யாண சி.டி ஓடுது!
எஸ். எஸ். பூங்கதிர்.
😍 உங்க கடை இட்லி மல்லிப் பூ மாதிரி இருக்கு!
அவ்ளோ மெத்துன்னு இருக்கா?
சைஸை சொன்னேன்!.. கொஞ்சம் பெரிசா போட்டுத் தொலைங்க!
கே. அனந்தன்.
😍 உங்க நாய் ஏன் என்னை அமைதியா பார்க்குது?
குரைக்கிற நாய் கடிக்காதுனு அது காது பட சொல்லிட்டேன்!
அம்பை தேவா.
😍 கடைக்காரன் நல்லா ஏமாத்திட்டான்! தரைச்சக்கரம் சுத்தமாட்டேங்குது!
முதல்லே கண்ணாடியை மாட்டுங்க! அது கொசுவர்த்தி சுருளு!
தஞ்சை தாமு.
😍 தீபாவளிக்கு நீங்களே பலகாரம் செய்யப்போறதா உங்க ஹஸ்பெண்ட் கிட்ட சொன்னீங்களா?
ஆமா டாக்டர் அதனாலே என்ன?
அதிர்ச்சியான செய்தி எதுவும் அவர்கிட்டே சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்கேனா இல்லையா?
எஸ்.எஸ் பூங்கதிர்.
😍 புலவரே! இவ்வளவு புகழ்ச்சிக்கு நான் தகுதியானவன் இல்லை!
கொடுக்க காசு இல்லைங்கறதை நாசூக்கா சொல்றீங்களா மன்னா!
வசந்தி வள்ளுவன்.
😍 இது ரயில்வே வேலைக்கான தேர்வுதானே சார்?
சரிதாம்ப்பா.. அதுக்காக இப்பவே ஒரு மணி நேரம் தாமதமா வர்ற உன்னை பரிட்சை எழுத அனுமதிக்க முடியாது!
வசந்தி வள்ளுவன்.
😍 என்ன டாக்டர் ஆபரேஷனை பண்ணிட்டு இன்னும் தையல் போடாம போறீங்க?
அடப்பாவி! இன்னும் நீ உயிரோடத்தான் இருக்கியா?
அறந்தாங்கி. ஷக்தி ஷரவணன்.
😍 என் தலைவர் டென்சனா இருக்காரு ?
பின்னே ! பட்டி மன்றத்தில தேர்தலுக்குப் பிறகு தலைவர் புகழ் பெறுவாரா புழல் பெறுவாரா அப்பிடின்னு தலைப்பு வைச்சா அவர் என்ன பண்ணுவார்?
பர்வீன் ஈரோடு
😍 ஆஸ்பத்திரி வாசல்ல குடை ராட்டினம் நிறுத்தி வைச்சிருக்கீங்களே! எதுக்கு டாக்டர்?
திடீர்னு மயக்க மருந்து தீர்ந்துட்டா பேஷண்டை அதுல உட்கார வைச்சு சுத்திவிடத்தான்!
ஜெயா பிரியன்
😍 மச்சான் ! ரெண்டாவது பக்கத்தில ஒரு பத்து மார்க் கேள்வியை விட்டுட்டேன்
என்னது கேள்வித்தாள்ல இரண்டாவது பக்கம் இருந்துதா?
😍 இந்தக் கூட்டணியில் இருந்த நமக்கு ஓட்டே கிடைக்காது தலைவரே! பேசாம அந்தக் கூட்டணிக்கு தாவி வாங்க!
அட போய்யா ! நாம தாவினோம்னா அமலாக்கத் துறை நம்ம வீட்டு காம்பவுன்ட தாண்டி வரும்.
😍 பிரண்டை துவையல் செஞ்சு சாப்பிடா நல்லதுன்னு சொல்றாங்கபாய் பிரண்டா கேர்ல் பிரண்டான்னு சொல்லலை
😍 நாம இந்த அஞ்சு வருஷமா என்ன்ன சாதிச்சோம்னு பட்டியல் போட்டு பிரஸ்சுக்கு அனுப்பினோமே ! சரியா போட்டாங்களா?
மிகச் சிறந்த தமாஷ்னு பத்து ரூபாய் மணி ஆர்டர் அனுப்பிட்டாங்க தலைவரே !
😍 குருஜி ! என் வியாதி குணமாக கந்த சஷ்டிக் கவசம் படிக்கச் சொன்னிங்க இல்லையா?
அதைப் படிச்சப்பறம் அதில சொல்லியிருக்கிற அத்தனை வியாதியும் எனக்கு இருப்பதுபோல தோணுது குருஜி!
😍மச்சான் ! ரெண்டாவது பக்கத்தில ஒரு பத்து மார்க் கேள்வியை விட்டுட்டேன்
என்னது கேள்வித்தாள்ல இரண்டாவது பக்கம் இருந்துதா?
😍 இந்தக் கூட்டணியில் இருந்த நமக்கு ஓட்டே கிடைக்காது தலைவரே! பேசாம அந்தக் கூட்டணிக்கு தாவி வாங்க!
அட போய்யா ! நாம தாவினோம்னா அமலாக்கத் துறை நம்ம வீட்டு காம்பவுன்ட தாண்டி வரும்.
😍 பிரண்டை துவையல் செஞ்சு சாப்பிடா நல்லதுன்னு சொல்றாங்க! பாய் பிரண்டா கேர்ல் பிரண்டான்னு சொல்லலை
😍 நாம இந்த அஞ்சு வருஷமா என்ன்ன சாதிச்சோம்னு பட்டியல் போட்டு பிரஸ்சுக்கு அனுப்பினோமே ! சரியா போட்டாங்களா?
மிகச் சிறந்த தமாஷ்னு பத்து ரூபாய் மணி ஆர்டர் அனுப்பிட்டாங்க தலைவரே !
😍 குருஜி ! என் வியாதி குணமாக கந்த சஷ்டிக் கவசம் படிக்கச் சொன்னிங்க இல்லையா? அதைப் படிச்சப்பறம் அதில சொல்லியிருக்கிற அத்தனை வியாதியும் எனக்கு இருப்பதுபோல தோணுது குருஜி!
😍 😍 😍
1933 ஆம் ஆண்டு பெளதிக நோபல் பெற்ற பிரிடிஷ் விஞ்ஞானி பால் டிராக் (Paul Dirac). அணுவியல் துறையில் க்வாண்டம் கோட்பாடிற்காக மிகவும் அறிவார்ந்த முயற்சியாளர்களில் இவரும் ஒருவர். இவருக்கு மதம், கவிதை யாவுமே வீண் உதவாக்கரை சமாச்சாரம். அதுவும் இவருக்கு
நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி பால் டிராக்க்கு (Paul Dirac) கவிதை என்றாலே மிகவும் கிண்டல். இவரின் கவிதை பற்றிய கருத்து மிகவும் பிரபலமானது.
“இதுவரை யாருக்குமே புரியாத புதிய விஷயத்தை விளக்கி எல்லோருக்கும் தெளிவாக புரியும்படி செய்வது விஞ்ஞானம். இதுவரை எல்லோருக்குமே புரிந்த விஷயத்தை குழப்பி எவருக்குமே புரியாதபடி செய்வது கவிதை”.😍 😍 😍 😍 😍 😍 😍
