
இலக்கிய சிந்தனையின் நிகழ்வும் குவிகம் இலக்கிய வாசலின் நிகழ்வும் இணைந்து வருகிற ஆகஸ்ட் 26, சனிக்கிழமை ஸ்ரீனிவாச காந்தி நிலையம் , அம்புஜம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டையில் நடைபெற இருக்கின்றன.
இலக்கிய சிந்தனையின் சார்பில் திரு தேவராஜ சுவாமிகள் ‘ ஸ்ரீ ராமானுஜர்’ என்ற தலைப்பில் பேசுகிறார் !
குவிகம் இலக்கியாவாசல் சார்பாக திரு சதுர்புஜன், திரு சிந்தாமணி சுந்தரராமன் , டாக்டர் பாஸ்கரன் ஆகிய மூவரும் , “எனக்குப் பிடித்த கதை” என்ற தலைப்பில் பேச இருக்கின்றார்கள்.
இத்துடன் குவிகம் பதிப்பகத்தின் இரண்டாவது பதிப்பாக சுரேஷ் ராஜகோபாலின் ” நான் என்னைத் தேடுகிறேன்” என்ற கவிதைத் தொகுப்பு வெளிவருகிறது.
அதன் வெளியீட்டு விழாவும் நடைபெறும் .
அனைவரும் வருக!
குவிகம் இலக்கியவாசலின் 28வது நிகழ்வாக கண்ணன் அவர்கள் ” “தமிழில் விஞ்ஞான எழுத்துக்கள் ” என்ற தலைப்பில் ஜூலை 29ஆம் தேதி பேசினார்.
அதே சமயம் இலக்கிய சிந்தனையின் சார்பில் புதுவை ராமசாமி அவர்கள் “கவிக்கோ அப்துல் ரஹ்மான்’பற்றிப்பேசினார்.

