Related image

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு –                                                                           நாம்  எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு  

நாம் எல்லோரும் சமமா? 

இரவிலே வாங்கினோம் விடியவே இல்லை 

அவ்வளவு மோசமா?

சுபாஷ் சந்திர போஸின் வீரம்,  காந்தியின் அகிம்சை , நேருவின் பெருமிதம், சாஸ்திரியின் விவேகம், இந்திரா காந்தியின் தைரியம், மோடியின் பெருமை  எல்லாம் நமது நாட்டை எங்கே எடுத்துச்  சென்றிருக்கிறது ?  

இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சியும் வளர்ச்சியும் பற்றி கேம்ப்ரிட்ஜ் பேராசிரியர்  அங்குஸ் மாடிசன் கூறுகிறார் :

கி பி 1000 வது ஆண்டில் உலகப் பொருளாதரத்தில் இந்தியாவின் பங்கு 27 சதவீதம். சீனா  மற்றும் ஐரோப்பா எல்லாவற்றையும் பின் தள்ளிவிட்டு முன்னணியில் இருந்தது.    அதே நிலை தான்  கி பி 1500 லும். அப்போது உலக அளவில் நமது பங்கு  25  சதவீதம்.  

விடுதலைக்குப்பிறகு     இந்தியாவின் பங்கு  வெறும் 2 சதவீதம் மட்டுமே !

இந்தியா எவ்வளவு சுரண்டப்பட்டிருக்கிறது  என்று தெரிகிறதா? 

ஆனால் நேரு , இந்திரா காந்தி காலத்தில் நாம் கடைப்பிடித்த பாதுகாக்கப்பட்டச் சந்தை முறையால் நாம் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருந்தோம். 

ஆனால் 1991 இல் உலக மயமாக்கப்பட்டவுடன் இந்தியா முன்னேற்றப் பாதையில் நடக்க ஆரம்பித்தது.  

2005இல்  9 வது இடத்தில் இருந்த நமது நாடு  2011இல்  மூன்றாவது இடத்துக்கு உயர்ந்திருக்கிறது. நமக்கு மேலே சீனாவும் அமெரிக்காவும் தான் இருக்கின்றன.

கேம்ப்ரிட்ஜ்  கருத்துப்படி 2040 இல்  சீனா முதல் இடத்திலும் , இந்தியா இரண்டாவது இடத்திலும் இருந்து உலகை  ஆளும்.

எனவே நாம் சீனாவைத் தோற்கடிக்க வேண்டியது டோக்லாமில் மட்டுமல்ல;  பொருளாதாரத் துறையிலும் கூட.

Related image

 

டிட்பிட்ஸ் : 

நம்முடன் காங்கோவும், பஹ்ரைனும், தென் கொரியாவும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றன. 

நமது இந்தியக்  கொடியை வடிவமைத்தவர் பிங்கலி  வெங்கையா என்பவர். 

செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே” என்ற  பாரதியார் பாடல் ஒரு  போட்டியில்   மூன்றாவது  பரிசைப் பெற்றதாம்.

இந்த வருடம்,  சுதந்திர நாளில்,  நாம் , நமது நாட்டைப் புதிய இந்தியாவாக மாற்றும் உறுதியை எடுத்துக் கொள்ளப்போகிறோம்.

மோடி சொல்கிறார் என்பதற்காக அல்ல.

இது நமது நாட்டுக்கு நாம் செய்ய வேண்டிய  கடமை.