விட்டுப் போக வேண்டும் !
ஓடி ஓடி உற்ற செல்வம்
ஓங்கு கல்வி யாவையும்
வாடிச் சோரும், மேவும் நோயும்
வந்து சேரும் மூப்புமே.
வீடி ருந்தும், மாடி ருந்தும்
விட்டுப் போக வேண்டுமே
நாடி இன்றே ஈசன் தில்லை
நாதன் பாதம் நண்ணுவோம்
. தொடரும் பயணம்
பிறந்து, தவழ்ந்து, நடந்து, வளர்ந்து
பெரிய கலைகள் பலவுமே
அறிந்து, புரிந்து, தெளிந்து பணியில்
அமர்ந்து, சிறந்து, பொருளினைப்
பறந்து தெரிந்து, மணந்து மகவைப்
பரிந்து வளர்த்து மகிழ்ந்தபின்
துறந்து கடையில் உயிரும் பிரிந்து
தொடரும் பிறிதோர் பயணமே !
முதல் பாடலின் ஒவ்வொரு அடியிலும் மெய் எழுத்து நீங்கலாக 15 எழுத்துக்கள் உள்ளன.
இரண்டாம் பாடலின் ஒவ்வொரு அடியிலும் மெய் எழுத்து நீங்கலாக 22எழுத்துக்கள் உள்ளன.
Very nice, enjoyed the ways words are organized
LikeLike
NICE WRITE UP
VEEDU IRUNDHUM MAADI IRUNDHUM
ANUBHAVAM PESUGIRADHU
LikeLike
அருமையான சந்தப் பாடல்கள்! இன்னும் ஆழமான கருத்துருக்களையும், நிகழ்வுகளையும், குருங்கதைகளையும் அமைத்து எழுதுக! எழில் தமிழ் ஓவையங்கள்! வாழ்த்துக்கள்!
LikeLike