சிற்றிதழ்கள்

Image result for சிற்றிதழ்கள்

சிற்றிதழ்கள் பற்றி இப்படிச் சொன்னார்கள் :

சுந்தர  ராமசாமி .

சிறுபத்திரிகைக்காரங்க – இப்படி ஒண்ணு நடந்ததாவே அவங்களுக்குத் தெரியாது. அவங்களுக்குனு சொந்தமா ஒரு உலகம் இருக்கு. சின்ன குட்டி உலகம். ஒரு டாய்லெட் அளவு இருக்கும். அந்த உலகத்துக்குள்ளே அவன் சின்ன சின்ன சண்டைகள் போட்டுக் கொண்டிருப்பானே ஒழிய – இந்த டாய்லெட்டைவிட – ஒரு பெரிய உலகம் இருக்கு. அங்க பல காரியங்கள் நடக்குது. அந்தக் காரியங்கள் நம்ம வாழ்க்கையைப் பாதிக்குது – நீங்க டாய்லெட்ல போய் ஒளிஞ்சிண்டாலும் உங்க வாழ்க்கையை அது பாதிக்காம இருக்காது. So, அப்படிங்கற ஒரு consciousness நம்ம சிறுபத்திரிகைக்காரங்களுக்கு என்னிக்குமே இருந்ததில்லை.

புதுமைப்பித்தன்:

“நான் ஒரு சிற்றிதழ் ஆரம்பித்தால் அதற்கு சோதனை என்று பெயர் வைப்பேன் … சோதனை என்றால் சோதித்துப் பார்த்தல் என்று பொருள், தொல்லை என்ற பொருளும் அதற்கு உண்டு.”

க.நா.சு.:

‘ஒரு பத்திரிகை தொடர்ந்து இயங்கினால், அது சிறு பத்திரிகையே இல்லை.’

பொள்ளாச்சி நசன்:  (தமிழம் )

கருத்துச் செறிவிற்காகவும், தொடர்பிற்காகவும், ஒரு குழுவினரிடமோ, அல்லது மக்களிடமோ, வணிக நோக்கமற்று, ஒன்றிரண்டு இதழ்களே வந்தாலும், தரமான, உண்மையான – மொழி, இனம், நாடு தொடர்பான வரலாற்றுக் கருத்துகளையும், நடப்பியல் நிகழ்வுகளையும் – நுட்பமாகப் பதிவு செய்கிற அச்சு வடிவங்களையே சிற்றிதழ்கள் என்ற வகைக்குள் அடக்கலாம்

ஜெயமோகன் “

பூடக மொழியில் வெகுசில பிரதிகளே அச்சிட்டு நாலுபேர் கண்ணில் படாமலேயே வினியோகிக்கப்பட்டு வரும்  இதழ்கள்

சாதாரண’ மக்கள் அறியாமல், அறிந்தாலும் வாங்க முடியாமல், வாங்கினாலும் படிக்க முடியாமல் இவற்றை நடத்த ஆரம்பித்தார்கள்.

சாதாரண இதழ்களுக்கு நேர் மாறாக இவை இருக்கவேண்டுமென்பதே விதி.

படங்களுக்குப் பதில் முன்னட்டையிலேயே அச்செழுத்துக்கள் தொடங்குதல், இளம்பெண்களுக்குப் பதில் தாடை தொங்கும் தாத்தாக்களின் படங்களை அச்சிடுதல் போன்ற பல உத்திகள் கடைப்பிடிக்கப்பட்டன. பத்திகள் இல்லாமல் மொத்தமாக அச்சிடுதல், ஒருவரியே ஒரு பக்கம் வரை நீள விடுதல், ஒவ்வொரு சொல்லையும் வேறுபொருளில் பயன்படுத்துதல் ,  விசித்திரமான புதிய சொற்களை உருவாக்கி பயன்படுத்துதல், மிக நீளமான மேற்கோள்களைப் பயன்படுத்துதல், சிலசமயம் அம்மேற்கோளை பிறமொழிகளில் அமைத்தல் போன்றவற்றுடன் மிக அதிகமான விலையும் அமைத்துக்கொண்டு இவ்விதழ்கள் தங்களை பாதுகாத்துக் கொண்டன.

எதிரிச் சிற்றிதழ் இல்லாத சிற்றிதழ் சிற்றிதழே அல்ல

தகவல், பின்னணி, வரலாறு

♦ எழுத்து சிற்றிதழ் சி.சு செல்லப்பா அவர்களை ஆசிரியராகக் கொண்டு , ஜனவரி 1959 முதல், புதுமை இலக்கிய மாத ஏடு என்ற அறிவிப்புடன் 50 பைசா விலையில் வெளிவரத் தொடங்கியது.

♦ க.நா.சு நடத்தி வந்த சூறாவளி , சந்திரோதயம் பத்திரிகைகளில் துணையாசிரியராகப் பணிபுரிந்த அனுபவம் சி.சு செல்லப்பாவுக்கு உண்டு.

♦ சுதேசமித்திரன் இதழ் செல்லப்பா எழுதிய கட்டுரை ஒன்றை வெளியட மறுத்த பொழுது எழுந்த கோபத்தில் எழுத்து இதழைத் தொடங்கினார் .

♦ ந.பிச்சமூர்த்தி எழுத்து இதழின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார் .

♦ எழுத்து நின்றவுடன் சிறிது காலத்திற்குப் பிறகு சுவை என்ற மாத இதழை செல்லப்பா தொடங்கினார் , அதுவும் முதல் இதழோடு நின்று விட்டது.

♦ க.நா.சு இலக்கிய வட்டம் ( நவம்பர் 1963 ) என்ற சிற்றிதழைத் தொடங்கினார்.

 

பெயர்கள், பட்டியல் ( நன்றி பொள்ளாச்சி நசன் – தமிழம் )

பொள்ளாச்சி நசன் என்கிற நடேசன் அவர்களை எப்படிப்பாராட்டினாலும் தகும்.

அவரது தமிழ்ப்பணிகளுக்கு பணிவான வணக்கணக்கள் !

எண்ணற்ற  சிற்றிதழ்களின் மாதிரிகளையும் அலகிட்டு வைத்திருக்கிறார்.

கிழே  குறிப்பிட்ட சிற்றிதழ்களை சொடுக்கி அவற்றின் வடிவத்தைப் பார்க்கலாம்.

(http://www.thamizham.net/)

பழைய சிற்றிதழ்கள்


1903 [ விவேக பாநு ]
1905 [ விவேகசிந்தாமணி ]
1906 [ விவசாய தீபிகை ]
1910 [ ஜனாபிமானி ]
1912 [ தமிழ் ]
1915 [ விவேக போதினி ]
1915 [ சற்குரு ]
1916 [ ஆனந்த போதினி ]
1916 [ வேதாந்த தீபிகை ]
1917 [ கல்ப தரு ]

1918 [ பேராசிரியன் ]
1918 [ ஜனோபகாரி ]
1918 [ வைத்திய கலாநிதி ]
1921 [ செந்தமிழ் ]
1924 [ செந்தமிழ்ச் செல்வி ]
1925 [ ஆரோக்கிய தீபிகை ]
1930 [ ஸ்ரீ சுஜன ரஞ்சனி ]
1931 [ சுதந்திரச் சங்கு ]
1932 [ குலாலமித்திரன் ]
1932 [ கலைமகள் ]

1932 [ ஆனந்த போதினி ]
1932 [ சித்திரக்குள்ளன் – சிறுவர் இதழ் ]
1933 [ பிரமலைச் சீர்திருத்தன் ]
1933 [ ஆரம்ப ஆசிரியன் ]
1933 [ நவசக்தி ]
1933 [ தமிழரசு ]
1934 [ காந்தி ]
1934 [ மணிக்கொடி ]
1934 [ குமார விகடன் ]
1936 [ தமிழ் மணி ]

1937 [ பிரசண்ட விகடன் ]
1938 [ குடியரசு ]
1939 [ சூறாவளி ]
1941 [ ஆற்காடு தூதன் ]
1941 [ தமிழ் மருத்துவப் பொழில் ]
1944 [ நந்தவனம் ]
1944 [ கிராம ஊழியன் ]
1946 [ மங்கை ]
1946 [ பாப்பா – சிறுவர் இதழ் ]
1947 [ சக்தி ]

1947 [ சுதர்மம் ]
1947 [ கலை உலகம் ]
1947 [ வெண்ணிலா ]
1947 [ குமரி மலர் ]
1947 [ தமிழ் ஹரிஜன் ]
1947 [ தாய்நாடு ]
1948 [ டமாரம் – சிறுவர் இதழ் ]
1948 [ கலாமோகினி ]
1948 [ தேனீ ]
1948 [ திராவிட நாடு ]

1948 [ பாரிஜாதம் ]
1948 [ மன்றம் ]
1948 [ தமிழ்த் தென்றல் ]
1948 [ அருணோதயம் ]
1948 [ காதம்பரி ]
1948 [ அமுதசுரபி ]
1949 [ தமிழ்ப்படம் ]
1949 [ நாட்டியம் ]
1949 [ சந்திர ஒளி – சிறுவர் இதழ் ]
1949 [ பாலர் மலர் – சிறுவர் இதழ் ]

1949 [ தம்பீ – சிறுவர் இதழ் ]
1949 [ மான் – சிறுவர் இதழ் ]
1949 [ பாபுஜி – சிறுவர் இதழ் ]
1949 [ மானசீகம் ]
1949 [ முன்னணி ]
1950 [ திருப்புகழமிர்தம் ]
1950 [ குங்குமம் ]
1950 [ தமிழ் முரசு ]
1951 [ ஜிங்லி – சிறுவர் இதழ் ]
1951 [ விடிவெள்ளி ]

1952 [ பாபு – சிறுவர் இதழ் ]
1952 [ திருவள்ளுவர் ]
1952 [ கோமாளி – சிறுவர் இதழ் ]
1952 [ மிட்டாய் – சிறுவர் இதழ் ]
1952 [ சாக்லெட் – சிறுவர் இதழ் ]
1952 [ அமுது ]
1953 [ நாவரசு ]
1953 [ பாலர் கல்வி ]
1953 [ வெண்ணிலா ]
1954 [ திரட்டு ]

1954 [ அல்வா – சிறுவர் இதழ் ]
1954 [ மேழிச் செல்வம் ]
1955 [ சுதந்திரம் ]
1955 [ கலாவல்லி ]
1955 [ தமிழ் முழக்கம் ]
1955 [ தமிழன் குரல் ]
1955 [ விந்தியா ]
1956 [ தினத் தபால் ]
1956 [ சாட்டை]
1956 [ கரும்பு – சிறுவர் இதழ் ]

1956 [ சர்வோதயம் ]
1957 [ தென்றல் ]
1957 [ போர்வாள் ]
1957 [ தென்றல் ]
1958 [ கிராம ராஜ்யம் ]
1958 [ கண்ணன் – சிறுவர் இதழ் ]
1958 [ குயில் ]
1958 [ செந்தமிழ் ]
1959 [ மஞ்சரி ]
1959 [ அருள்மாரி ]

1960 [ வைத்திய சந்திரிகா ]
1960 [ டாக்கி ]
1960 [ தமிழணங்கு ]
1960 [ கண்ணன் – சிறுவர் இதழ் ]
1961 [ செந்தமிழ்ச் செல்வி ]
1961 [ குடும்பக் கலை ]
1961 [ எழுத்து ]
1962 [ சாரணர் ]
1962 [ அறப்போர் ]
1962 [ குமரகுருபரன் ]

1962 [ அமிர்தவசனி ]
1962 [ இயற்கை ]
1962 [ தமிழ்ப் பொழில் ]
1963 [ மதுர மித்திரன் ]
1964 [ குத்தூசி ]
1965 [ பரிதி ]
1965 [ பாரதி ]
1965 [ குத்தூசி ]
1965 [ நாடக முரசு ]
1966 [ கலைப்பொன்னி ]

1966 [ வான்மதி ]
1966 [ சுடர் ]
1966 [ முப்பால் ஒளி ]
1966 [ அகல் ]
1967 [ சிவகாசி முரசு ]
1967 [ ஆராய்ச்சி மணி – சிறுவர் இதழ் ]
1967 [ புதிய தலைமுறை ]
1967 [ பாரதிதாசன் குயில் ]
1967 [ அருள் ]
1967 [ கனிரசம் ]

1967 [ தமிழ்த்தேன் ]
1967 [ மேகலை ]
1967 [ முதல் சித்தன் ]
1968 [ நெப்போலியன் ]
1969 [ மாணாக்கன் ]
1969 [ அறிவு ]
1969 [ நடை ]
1969 [ பூச்செண்டு ]
1969 [ நந்தி ]
1970 [ முருகு ]

1970 [ செவ்வானம் ]
1970 [ பைரன் ]
1970 [ நாடகக்கலை ]
1970 [ எழிலோவியம் ]
1971 [ தமிழகம் ]
1971 [ கைகாட்டி ]
1971 [ பூஞ்சோலை ]
1971 [ மல்லி ]
1971 [ முதன்மொழி ]
1971 [ மலர் மணம் ]

1972 [ தமிழம் ]
1972 [ தியாக பூமி ]
1972 [ அஃக் ]
1972 [ வலம்புரி ]
1972 [ திருவிடம் ]
1972 [ மயில் ]
1972 [ மாலா ]
1972 [ நாரதர் ]
1973 [ ஏன் ]
1973 [ ஜயந்தி ]

1973 [ சிவாஜி ]
1973 [ மதமும் அரசியலும் ]
1973 [ வல்லமை ]
1973 [ விவேகசித்தன் ]
1973 [ வாசகன் ]
1973 [ முல்லைச்சரம் ]
1973 [ உதயம் ]
1974 [ முயல் ]
1975 [ தமிழோசை ]
1975 [ கசடதபற ]

1975 [ தமிழ் உறவு ]
1975 [ ஏடு (மும்பாய்) ]
1975 [ புதிய வானம் ]
1975 [ இளவேனில் ]
1975 [ தமிழ்க்குரல் ]
1975 [ உரிமை வேட்கை ]
1976 [ பாலம் ]
1976 [ நயனதாரா ]
1977 [ கஙய ]
1977 [ அஞ்சுகம் ]

1977 [ மர்மம் ]
1977 [ மேம்பாலம் ]
1978 [ ழ ]
1978 [ புத்தகவிமர்சனம்]
1978 [ அணில் மாமா – சிறுவர் இதழ் ]
1978 [ அறைகூவல் ]
1978 [ இளைஞர் முழக்கம் ]
1978 [ இசையருவி ]
1978 [ சுவடு ]
1978 [ மூலிகை மணி ]

1978 [ தர்சனம் ]
1978 [ மகாநதி ]
1979 [ குமரி ]
1979 [ பரிதி ]
1979 [ பிரபஞ்சம் ]
1979 [ சுதந்திரப் பறவைகள் ]
1979 [ சிகரம் ]
1979 [ இளங்கோ ]
1979 [ தண்டனை ]
1979 [இலக்கிய வெளி வட்டம் ]

1980 [ விழிப்பு ]
1980 [ 1/4 (கால்) ]
1980 [ தமிழியக்கம் ]
1980 [ ஸ்வரம் ]
1980 [ கோவை குயில் ]
1980 [ நிர்மாணம் ]
1980 [ இளம் விஞ்ஞானி ]
1980 [ இங்கும் அங்கும் ]
1980 [ உழைக்கும் வர்க்கம் ]
1981 [ படிமம் ]

1981 [ தமிழன் குரல் ]
1981 [ கருவேப்பிலை ]
1981 [ சுட்டி ]
1981 [ முனைவன் ]
1982 [ பார்வைகள் ]
1982 [ பாட்டாளி தோழன் ]
1982 [ இளைய கரங்கள் ]
1982 [ கவியுகம் ]
1982 [ கவிப்புனல் ]

1982 [ மாலை நினைவுகள் ]
1982 [ உதயக்கதிர் ]
1982 [ மயன் ]
1983 [ ஆக்கம் ]
1983 [ ப்ருந்தாவனம் ]
1983 [ சுகந்தம் ]
1983 [ அறிவுச் சுடர் ]
1983 [ நூதன விடியல் ]
1983 [ கலாச்சாரம் ]
1983 [ சத்யகங்கை ]

1983 [ மக்கள் பாதை மலர்கிறது ]
1983 [ வண்ணமயில் ]
1984 [ ராகம் ]
1984 [ தமிழின ஓசை ]
1984 [ குறிக்கோள் ]
1984 [ ஏணி ]
1984 [ தென்புலம் ]
1984 [ நம்நாடு ]
1984 [ உயிர் மெய் ]
1984 [ அன்னம் விடுதூது ]

1985 [ விடுதலைப் பறவை ]
1985 [ அறிவியக்கம் ]
1985 [ த்வனி ]
1985 [ திருநீலகண்டன் ]
1985 [ உயிர் ]
1985 [இயற்றமிழ் ]
1985 [ எழுச்சி ]
1985 [ உங்கள் நூலகம் ]
1985 [ சிந்தனை ]
1986 [ பூபாளம் ]

1986 [ மனசு ]
1986 [ தளம் ]
1986 [ தென்புலம் ]
1986 [ மாணவர் ஒற்றுமை ]
1986 [ மக்கள் குறளமுதம் ]
1986 [ ஞானரதம் ]
1986 [ லயம் ]
1986 [ யாத்ரா ]
1986 [ இன்று ]
1986 [இலட்சியப்பெண் ]

1986 [ஏழையின் குமுறல் ]
1986 [ உழவன் உரிமை ]
1986 [ உதயம் ]
1987 [ ஓடை ]
1987 [ திராவிட சமயம் ]
1987 [ தமிழ் நிலம் ]
1987 [ நாத்திகம் ]
1987 [ நாய்வால் ]
1987 [இசைத் தென்றல் ]
1987 [ஏர் உழவன் ]

1987 [ ஏப்ரல் ]
1987 [ உணர்வு ]
1988 [ அஸ்வமேதா ]
1988 [ ஆக்கம் ]
1989 [ திசை நான்கு ]
1989 [ முன்றில் ]
1990 [ தமிழன் ]
1990 [ இளைய அக்னி ]
1990 [ மெய்த்தமிழ் ]
1990 [ நிறப்பிரிகை ]

1992 [ ங் ]
1992 [ நீலக்குயில் ]
1993 [ தலைநகரில் தமிழர் ]
1993 [ எரிமலை ]
1994 [ அன்றில் ]
1995 [ எழுச்சி ]


தொடர்புக்கு : pollachinasan@gmail.com – 890 300 2071,

 

  • பாடலாசிரியர் யுகபாரதி ‘படித்துறை’ என்ற பெயரில் தனியே ஒரு சிற்றிதழ் தொடங்கினார்.
  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலிருந்து ‘கூட்டாஞ்சோறு’ என்ற இலக்கிய இதழ் ஆரம்பம்.
  • பெண்களுக்கான சினிமா பற்றி பேசும் ‘கண்ணாடி’ என்ற சிற்றிதழ் கொண்டு வந்தார்  குட்டிரேவதி 
  1. கசடதபற
  2. கணையாழி
  3. மனிதன்
  4. சுபமங்களா
  5. சரஸ்வதி
  6. மணிக்கொடி
  7. சக்தி
  8. இலக்கியவட்டம்
  9. சூறாவளி
  10. சதங்கை
  11. வண்ணமயில்
  12. படிகள்
  13. வைகை
  14. பிரக்ஞை
  15. புதியதலைமுறை
  16. நிகழ்
  17. அ·
  18. ‘ழ’
  19. காலச்சுவடு
  20. தீராநதி
  21. உயிர்மை

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.