ஜன்னலுக்கு வெளியேயும் மழை – எஸ் எஸ்

My window of Hope – Twin Quill

நாட்டின் பாராளுமன்றத்தில் மழைக்காலக்  கூட்டத் தொடர் 

நம் சென்னையில் மேலடுக்குச் சுழற்சிப் பெரு மழை 

என் இல்லத்திலும் இடியுடன் கூடிய கன மழை 

நான் தயாரானேன் 

‘இந்த நேரத்தில் எங்கே ‘ இடி முழங்கியது 

நான் இடிதாங்கி பதில் அளிக்கவில்லை 

இந்த மழையில் அழைத்தது யார் ?

நான் தலை வாரிக் கொண்டேன் 

நான் சொன்னால் கேட்கக் கூடாது என்று  குதர்க்கம். அப்படித்தானே ?

‘ஆம்’ என்று சொல்ல எத்தனை வினாடிகள் பிடிக்கும். 

எங்கே போகிறேன்  என்று சொன்னால் குறைந்தா போய்விடுவீர்கள்? 

சட்டை செய்யாமல் சட்டை போட்டுக்கொண்டேன் 

ஜன்னலுக்கு வெளியேயும் இடி மின்னல் மழை 

கொட்டும் மழையில் கூப்பிட்டவர் யார்  என்று சொல்லிவிட்டுப் போகலாமே ? 

நான் முக்கியமில்லை;  யார்  முக்கியம்

மடிக்கணிணியை எடுத்துக் கொண்டேன். 

கடைசி முறையாகக் கேட்கிறேன். வருந்தி அழைத்தது யார் ? சொல்வீர்களா மாட்டீர்களா? 

நந்தி வழி மறிப்பது போல இருந்தது. 

என் மௌனம் கலைய இது கடைசி வைக்கோல் !

சொன்னேன் 

இருவரும் சிரித்துவிட்டோம். 

ஜன்னலுக்கு வெளியே இன்னும் மழை பெய்கிறது.  

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.