தோட்டா : இரண்டாவது வினாடி முடிந்து விட்டது காந்தி! எலும்புத் தசையில் நுழைகிறேன் நான் இந்தக் கணத்தில். என் நுனி உன் இதயத்தைத் தொடுகிறது! வலிக்கிறதா?
காந்தி : ஆம்! மிகவும் வலிக்கிறது!
தோட்டா : மன்னித்துவிடு காந்தி! என்னால் இயன்ற அளவுக்கு மிருதுவாகவே இருக்க எண்ணினேன்! நீ அமைதியாக இருந்தால்தான் நானும் மிருதுவாக வேலை செய்ய முடியும். என்ன ஆயிற்று உனக்கு காந்தி? எல்லாம் அமைதியாக தளர்ந்து இருந்தன. உன் தசைகள் இப்போது இறுகிக் கொண்டு இருப்பதால் நான் என்னை உள்ளே நுழைத்துக் கொள்வதற்காகக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. உன் இதயத் துடிப்பினால் உன் மார்புக் கூடு எலும்புகள் மிகவும் நடுங்குகின்றன. உன் ரத்தம் ஊற்றுப்போல எனக்கு எதிராக பாய்கிறது. ஏதோ உன் மார்புக் கூட்டிலிருந்து அலம்பி என்னை வெளியேற்றிவிடுவது என்ற நோக்கத்துடன்! மன்னியுங்கள் மகாத்மா, இனி என்னால் மிருதுவாக உள்ளே நுழைய முடியாது!
பூமி : உன் தசைகளை எஃகை போல் உறுதியாக்கிக் கொள்ளவிடு காந்தி,
நதி : உன் இதயத்தை குறிபார்க்கும் தோட்டாவை பின் தள்ளிவிடும் அளவிற்கு உன் இரத்தத்தை மாபெரும் ஊற்றுபோல் ஓடி வழியவிடு.
காற்று : உன் உயிரை குடிக்க நினைக்கும் தோட்டாவிற்கு எதிராகக் சம்மட்டியால் அடிப்பதுபோன்று உன் இதயத்தைத் துடிக்கவிடு காந்தி!
பூமி : தோல்வி மனப்பான்மை வேண்டாம்!
காற்று : தொடர்ந்து ‘போராடு! நதி உயிருடன் இரு! உயிருடன் இரு காந்தி!
காந்தி : (முனகுகிறார்)
பூமி : உன் வாழ்க்கை எவ்வளவு உன்னதமானது என்று இனி நாம் பேசமாட்டோம்.
காற்று : (மிக அருகில் வந்து) புனிதமான வாழ்க்கை உன்னுடையது மகாத்மா காந்தி!
பூமி : பல செயல்களை, இனி பிறந்து உணவு உண்டு உறங்கி ஆசாபாசங்களில் ஈடுபட்டு பின்பு மரணம் அடைய வேண்டிய எந்த ஜீவனாலும் புரிந்து கொள்ள முடியாத பல செயல்களை ஆற்றியிருக்கிறாய்!
காற்று : புனிதமானது என்று உன்னுடையவர்கள் வர்ணிக்கும் செயல்களை நீ புரிந்திருக்கிறாய்.
பூமி : காந்தி, வெறுப்பிற்கு நீ அளித்த பரிசு அன்பு, கருணை.
நதி : துச்சமாக மதித்தவனுக்கு நீ அளித்த பரிசு அன்பு, கருணை.
காற்று : நீ மற்றவர்களுக்காக துன்பப் பட்டிருக்கிறாய், காந்தி. நீ அதை மறுத்துப் பேசவேண்டாம்!
பூமி : உன் மக்களிடையே மட்டும் நீ ஒரு மாபெரும் மனிதன் இல்லை . மனித இனத்தின் மாபெரும் மனிதன் நீ! காற்று நீ எல்லா மனிதர் களுக்காகவும் துன்பப்பட்டி ருக்கிறாய்.
நதி : நீ மௌனமாகத் துயர்பட்டிருக்கிறாய் என்பதால் நீ புனிதமானவன்!
பூமி : இரத்த ஓட்டத்தை இழந்துவிட்ட உன் உதடுகளால் நீ மறுத்தப் பேசவேண்டாம்!
நதி : கண் இமைகளை அசைப்பதன் மூலம் நீ மறுத்துப் பேசத் தேவை இல்லை. நீ எப்படி எல்லாம் மனத்துயர் பட்டிருக்கிறாய் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும்.
பூமி : டர்பன் நகரில் ஒருநாள் பஸ் நடத்துநர் ஒருவர் உன்னை அடித்தது. ஞாபகம் வருகிறதா காந்தி? உன் முகத்தில் கைகளால் குத்தி அடித்தது, நீ ஒரு வெள்ளைத் தோல் இல்லாத இந்தியன் என்பதால் அவன் அடிப்பதிலிருந்து உன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயலவில்லை நீ! அமைதியாக அடிகளை வாங்கிக் கொண்டு இருந்தாய்!
நதி : தென் ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் பிரிட்டிஷ் நீதிபதிகள் உன்னை ஜெயிலில் தள்ளினார்களே, உன் ஆயுட்காலத்தில் பாதிக்குமேல் ஜெயிலில் தள்ளினார்களே, அதை எல்லாம் மறந்து விட்டாயா? அப்போதும் நீ உன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயலவில்லை! உன் நீதிபதிகளின் முன் குனிந்து அவர்களை வணங்கி நீ கூறினாய், “அதுவும் நல்லதற்கே” என்று.
காற்று : தென் ஆப்பிரிக்காவில் உன்னை அவர்கள். எப்படி அடித்து உதைத்து வீழ்த்தினார்கள் என்பது கூடவா மறந்துபோய் விட்டது காந்தி? ஒரு நாயை அடிப்பது போல் பொது இடத்தில்! அப்போதும் நீ அதை தடுக்க முயலவில்லை! பிரக்ஞை அற்று மரணம் அடைந்தவன் போல நீ தரையில் விழ்ந்துகிடந்தாய்!
பூமி : உனக்கு ஞாபகமில்லை – – .
காந்தி : உங்களை கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன் என் நண்பர்களே! வாயை மூடிக்கொள்ளுங்கள். பேசாமல் அமைதியாக இருங்கள். என் உடம்பில் பலமில்லை. என் கைகளைப்போன்று என் ஆன்மாவும் பலமிழந்துவிட்டது. மேலும் எல்லா கதவுகளும் திறந்து இருக்கின்றன. அமைதியாக இருங்கள் என்று உங்களை வேண்டிக் கொள்கிறேன்.
காற்று : தெரியுமா உனக்கு . . . கடலில் செல்லும் எல்லா கப்பல்களிலும் எல்லா ரயில் வண்டிகளிலும், இந்தியாவின் மீது சென்று கொண்டிருக்கும் எல்லா விமானங்களிலும் இருக்கும் மனிதர்கள்.
பூமி : நீ உயிருடன் இருக்கிறாயா அல்லது மரணம் அடைந்து விட்டாயா என்று கோடிக்கணக்கான மனிதர்கள் உன்னை எண்ணிப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள் காந்தி!
நதி : காந்தி, தெரியுமா உனக்கு? ஆசியாவில்.
காற்று : . . . உன்னை நேரில் பார்த்திராத உன் மொழியை பேசாத உலகநாடுகள் பலவற்றில் உள்ள மனிதர்கள் – – –
பூமி : தெரிந்து கொள் . . . நீ உயிருடன் இருக்கிறாய் என்று தெரிந்தால் உலகமக்கள் திம்மதியுடன் வாழமுடியும் என்று – – –
நதி : காந்தி என்ற மனிதர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்று அவர்களுக்குத் தெரிந்தால் – .
காற்று : அவர்களுக்குத் தெரிந்தால் . . .
காந்தி : என் குரலே, என்னைக் காப்பாற்று!
பூமி : நாங்கள் சொல்வதை கேள், காந்தி!
மெல்லிய குரல் ஒன்று : காந்தி – . .!
காந்தி : நான் ஒரு புதிய குரலைக் கேட்டேனே? நண்பர்களே! நீங்கள் இந்தக் குரலைக் கேட்கவில்லையா?
பூமி : இல்லை! எந்தக் குரலையும் நாங்கள் கேட்கவில்லை.
காற்று : தன் இரைக்காக காத்துக் கொண்டிருக்கும் கழுகு ஒன்று ஆகாயத்தில் மிக உயரத்தில் சத்தியிருக்கலாம்.
நதி : ஒருக்கால் “தீண்டத்தகாதவர்கள்” அதோ அந்த குன்றுகளில் உட்கார்ந்து கொண்டிருக்கும் கண்டத்தகாதவர்கள் பெருமூச்சு விட்டிருக்கலாம்.
குரல் : (கொஞ்சம் அருகில் வந்து “தாந்தி காந்தி என் குரலாயிற்றே! நான் அந்தக் குரலைக் கேட்டிருக்கிறேனே!
பூமி : காந்தி, நீ ஏதோ கனவு காண்கிறாய்!
நதி : நீ ஏதோ ஜுரத்தில் உளறுகிறாய் காந்தி
காற்று : உன் மூளைப்பகுதியில் ரத்தம் வெகு வேகமாக பாயந்து கொண்டிருக்கிறது. காந்தி நீ கேட்டதாகக் சொல்லும் எந்தக் குரலையும் காங்கள் கேட்கவில்லை.
குரல் : காந்தி! என் குரல் உன் காதில் விழுகிறதா?
காந்தி : உன் குரல் கேட்கிறது. என் குரலே! ஆனால் நீ என்னிடமிருந்து வெகுதூரத்தில் இருக்கிறாய்!
குரல் : அப்படி ஆளால் என்னிடம் நீ வந்து விடு!
காந்தி : வழக்கமாக நீதானே என்னிடத்தில் வருவாய்
குரல் : ஆனால் நீ என்னிடத்தில் வரவேண்டிய நேரம் வந்து விட்டது. காந்தி!
காந்தி : எனக்குப் பாதை தெரியாதே!
குரல் : உனக்குத் தெரியும் காந்தி!
காந்தி : புரிகிறது தியானத்தின் மூலம் ஞானம்! ஞானத்தின் மூலம் பொறுமை! பொறுமையின் மூலம் பேரமைதி!
குரல் : பாதை தெரியும் என்றால் என்னிடம் வந்துவிடு!
காந்தி : எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது, இந்தியா என்னை “தேசப்பிதா” என்று அழைக்கும்போது, நான் உயிருடன் இருக்க வேண்டியது அவசியம் தானே!
குரல் : அது ஒரு வெறும் பாதை தான்! உனக்கும் உன் மக்களுக்கும் அது வெறும்பாதையே! உனக்குத் தான் தெரியுமே!
காந்தி : ஆம்!
குரல் : அதைப் புரிந்து கொண்டிருக்கிறாய் என்றால் என்னிடம் வந்து விடு!
(இடைவெளி)
காந்தி : என்னால் நடந்து வர முடியாது. என் கால்கள் மரத்து விட்டன.
குரல் : (அருகே வந்து) இப்போது உன்னால் நடக்கமுடியும்.
காந்தி : நீ என்னைத் தொட்டாயா?
குரல் : (லேசாகச் சிரித்துவிட்டு) தொடுவதா? அப்படி என்றால் என்ன?
காந்தி : எல்லாமே திடீர் என்று மாறிவிட்டதே. வலி என்பதே இல்லை. உடல் கனமாக இல்லை . நான் பறந்து கொண்டு இருக்கிறேனோ?
குரல் : பறப்பது என்றால் என்ன?
காந்தி : நான் பறந்து கொண்டிருக்கிறேன்!
பூமி : (வெளியேறிக் கொண்டு) நீ உயிர் வாழவேண்டும், காந்தி!
நதி : (அவ்வாறே) போராடு காந்தி!
காற்று : நித்யம் நிரந்தரமானது என்று கூறி உன்னை ஏமாற்ற அனுமதிக்காதே!
காந்தி : நீயே பார்! நான் மேல்நோக்கி பறக்கிறேன். என்னைக் குழப்பத்தில் ஆழ்த்திய தரல்கள் எனக்கு கீழே தற்போது!
குரல் : உண்மை . காற்று ஒன்று மட்டும்தான் உன் மீது மூச்சு விட்டு கொண்டிருக்கிறது, பேராசையுடனும் முழு உயிர்துடிப்புடனும்.
காந்தி : ஏன் அவ்வளவு உயரத்தில் இருக்கிறேன்! அதோ அந்தச் சிட்டுக்குருவி. இன்னும் அப்படியே ஆகாயத்தில் ஆடாமல் அசையாமல் தொங்கிக் கொண்டிருக்கிறது, நான் உயிருடன் இருப்பதற்காக.
பூமி : (மிகவும் தூரத்திலிருந்து வரும் குரல்) பறந்து போகாதே, காந்தி.
நதி : (அவ்வாறே) எல்லோருக்கும் கிடைப்பது உரு பிறவி மட்டும்தான் காந்தி!
காற்று : (அங்கிருந்து நகர்ந்து போய்க்கொண்டு) எல்லோருக்கும் ஒரு பிறவிதான். அதன்பின் வாழ்க்கை முற்றுபெற்று விடுகிறது.
காந்தி : அந்த குரல்கள் மிக ஆழத்திலிருந்து வருகின்றன. அவை சொல்வது தெளிவாகக் கேட்கவில்லை.
மூன்று குரல்களும் : (மிகவும் தூரத்திலிருந்து) மகாத்மா காந்தி!!
காந்தி : ஏன் இப்படி என்ன செய்வது என்று தெரியாமல் கூச்சலிடுகின்றன இந்த குரல்கள். அவை மிக்க சக்தி படைத்தவையாக யுகயுகமாக வாழ்ந்து கொண்டிருப்பவை ஆயிற்றே!
குரல் : பொய் கூறுவதையே தொழிலாகக் கொண்டவை! உன் உடலில் குடியிருப்பவை. உன் தசைகளில் உன் மூச்சில், உன் உடலில் ஓடும் ரத்தத்தில், ஒவ்வொருவரும் மரணம் அடையும்போது அவற்றின் வாழ்வும் முடிவடைய வேண்டும் என்பது நியதி!
காந்தி : அந்த குரல்களை நான் அவ்வளவாக கேட்கமுடியவில்லை. ஆனால் என் அருகில் உள்ள மேகத்தின் குளிர்ச்சியை என்னால் உணர முடிகிறது. அவ்வளவு உயரத்திற்கு நான் வந்து விட்டேனா?
குரல் : கீழ்நோக்கிப் பார்!
காந்தி : நதியையும், குன்றுகளையும் காண்கிறேன். சோலைகள் மரங்களுக்கு இடையே அரைக் கோளங்களாக இருக்கின்றன. அதோ, அங்கே என்ன அது? நதிக்கரையில் மூன்று குன்றுகளுக்குக்கருகில் என்ன இருக்கிறது? சமவெளிப்பகுதிகளும் குன்றுகளின் சரிவுகளும் ஏன் இப்படி வெண்மை நிறத்தில் காட்சி அளிக்கின்றன? பால்போல் வெண்கடல்! மாபெரும் உறைபனி ஆறு! யமுனா நதிக்கரையில் டெல்லிக் கருகே பெரிய உறைபனி ஆறு போல என்ன அது?
குரல் : காந்தி, அது காத்துக் கிடக்கும் மக்கள் வெள்ளம்!
காந்தி : எதற்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள்? வெண்நிறப் போர்வையின் நடுவில் ஒரு கருவட்டம், எரிமலைவாய் போல் இருண்டுபோன எரிமலையின் வாய்போல்!
குரல் : அந்த இடத்திலிருந்து வெள்ளை மனிதர்கள் (வெள்ளை உடை மனிதர்கள்) பின் நகர்ந்து சென்று நின்றிருக்கின்றனர்!
காந்தி : பயந்து போயா! அந்தக் கருநிற எரிமலையின் வாயில் புள்ளி, சிறிய பூச்சி ஒன்றுபோல, ஒரு வெள்ளை எறும்பு போல ஒன்று இருக்கிறதே! அது என்ன, என் குரலே!
குரல் : அது யார் என்று உனக்குத் தெரியுமே!
மூன்று குரல்களும் : (சரியாக காதில் விழாத ஹீனஸ்வரத்தில்) காந்தி! மகாத்மாகாந்தி!
காந்தி : நானா அது?
குரல் : நீயேதான்!
காந்தி : அது நான் என்றால் – எப்படி அங்கும் இங்குமாய் இருக்க முடியும்?
குரல் : நீ அங்கும் இருக்கிறாய், இங்கும் இருக்கிறாய்!
காந்தி : என் குரலே, உண்மையை கூறு! நான் மரணம் எய்தி விட்டேனா?
(மணி ஓசை)
தோட்டா : மூன்றாவது வினாடி முடிந்துவிட்டது,