மனிதனாக இரு! – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன் 

Man – Social Animal or just Animal? Part 1 – A Thought Blog – By Prateek  Devta
சுடர் விளக்காக இரு
அது முடியாவிடில்
பரவாயில்லை
இரவில் சுடர் விடும்
மின் மினி பூச்சிகளை
கொன்று குவிக்காதே !

பள்ளி செல்வதற்கு
மனம் இல்லையா ?
பாதகமில்லை
பள்ளி செல்லும்
பிள்ளையின் புத்தகங்களை
மறைத்து வைக்காதே!

உண்மை பேச உனக்கு
உள்ளம் இல்லையா
அது தவறு இல்லை
அரிச்சந்திரன் வரலாற்றை
குற்றம் குறை கூறி
பொய்யின் உதடுகளுக்கு
சாயம் பூசி மகிழ்ந்து
அழகு பார்க்காதே!

கொடுமைகளைக் கண்டு
மனம் குமுறவில்லையா
குற்றமில்லை
கொடுமை கண்டவுடன்
தடுக்க ஓடும் கால்களை
வெட்டி வீழ்த்தாதே!

மனித நேயமிக்க
மனிதர்கள் மீது
மலர்களை உன்னால்
தூவ முடியாவிடில்
முட்களை வீசி
காயப்படுத்தாதே !

எவ்வுயிரும்
தம் உயிர்போல் நினை
முடியாவிடில்
வாழும் வரையாவது
மனிதனாக இரு !

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.