இந்திய பெண்கள் மாதவிடாய் காலங்களில் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்த ஆவணப் படத்திற்கு விருது கிடைத்துள்ளது.
கோவையைச் சேர்ந்த நாப்கின் உற்பத்தியாளர் முருகானந்தம் , மலிவு விலையில் நாப்கின்களை அறிமுகப்படுத்தினார். பல இடங்களுக்குச்சென்று பெண்களிடையே கலந்துரையாடி விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றார்.
இவரது மலிவு விலை நாப்கின்கள் மற்றும் இந்தியப் பெண்கள் மாதவிடாய் காலத்தில் படும் அவதிகளை எடுத்துச்சொல்வதை மையமாகக்கொண்டு ஆவணக் குறும்படமாக ‘பீரியட்- எண்ட் ஆஃப் சென்டன்ஸ்’ எனும் பெயரில் கடந்த ஆண்டு வெளியானது. இப்படத்தினை குனேட் மோங்கா தயாரித்திருந்தார்.
இப்படம் இந்த ஆண்டிற்கான சிறந்த ஆவணக் குறும்படமாக ஆஸ்கர் விருது விழாவில் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மலிவு விலை நாப்கின் உற்பத்தியாளர் முருகானந்தம் கூறுகையில், ‘இந்தப் படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைப்பதன் மூலம் சர்வதேச அளவில் மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு ஏற்படும்’ எனக் கூறினார்.
இப்படத்தில் முருகானந்தம் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது