ஹெமிங்க்வே எழுதிய உலக பிரசித்தி பெற்ற ஆறு வார்த்தை கதை! மிகச் சிறந்த சின்னஞ் சிறுகதை (சிசிறு கதை)
” விற்பனைக்கு: குழந்தையின் செருப்பு – ஒருமுறை கூட அணியவில்லை.”
குழந்தை பிறக்குமுன் வாங்கி வைத்த செருப்பு – குழந்தையின் மரணம் ? – செருப்பை விற்கும் அவலம் ? –
ஆறு வார்த்தைகளில் ஒரு கண்ணீர் கதை!
இன்னொரு திகில் சிசிறு கதை – பிரெடெரிக் பிரௌன் எழுதியது:
தலைப்பு : சத்தம்
“உலகத்தின் கடைசி மனிதன் தன் அறையில் தனியே அமர்ந்திருந்தான். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது…!”
நம்ம பாரதியார் கூட இது மாதிரி சிசிறு கதை எழுதியிருக்கிறார் ( அவர் தொடாத விஷயமே இல்லை)
கடவுள் கேட்டார் – “பக்தா ! இது தான் பூலோகமா?”
இந்தப் பாணியில் நாமும் எழுதுவோமே என்று யோசித்ததின் விளைவு:
- விற்பதற்கு குழந்தை வந்தது
- பால் கசந்தது – பக்கத்தில் பாட்டில் !
- கத்தியால் குத்தியவன் துடித்தான் – துடித்த உடல் நின்றது!
- பசிக்கு விலை உடல் என்றாள்.
- அடுத்த தடவை என்னை கனவில் தான் காண்பாள்!
- பால் பொங்கியது- அணைத்தேன்!
- நாணத்தோடு நின்றேன்- வரையத் தொடங்கினான்!
- மனதில் அவளைப் பூட்டிவிட்டு சாவியைத் தொலைத்து விட்டேன்!
- பிறந்த பெண் குழந்தை மரணம் . பெற்றோர் கண்களில் ஆனந்தக் கண்ணீர்!
- திருவிழாவில் நான் தொலையவில்லை – தொலைத்தார்கள்!
- ” என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் ..! ” போஸ்ட் மார்ட்டம் செய்ய வந்த டாக்டர் திணறினார்!

