மீனங்காடி (தொடர்)

மீனங்காடி

 

( உலகப் பிரசித்தி பெற்ற ‘ THE FISH’ என்ற Stephen C Lundin , Harry Paul and John Christensen எழுதிய புத்தகத்தின் தமிழ் வடிவம். தமிழ் வாசகர்களுக்காக இடம் ,பெயர்,மேற்கோள் எல்லாம் மாற்றப்பட்டுள்ளது)

 

image

 கோவாவில் அது ஒரு மோசமான மழைக்காலம். வானம் மப்பும் மந்தாரமாக இருந்தது.  ஈரமான, குளிரான, தயக்கமான மயக்கம் தரும் திங்கட்கிழமை அன்று. மதியத்துக்கு மேல் மேக மூட்டம் விலகலாம்  என்கிறது வானிலை அறிக்கை.  இது மாதிரி நாட்களில் தான் மேரிக்கு சென்னையின் அருமை தெரியும்.

‘என் வாழ்க்கை எப்படி மாறிவிட்டது?’ மேரி தனது மூன்று வருடங்களை மனதில் மெல்ல வருடிப்பார்த்தாள். அவள் கணவன் ஜானுக்கு கோவாவில்  ஐ டி கம்பெனியில் வேலை கிடைத்டதும்  எவ்வளவு சந்தோஷத்துடன் வந்தார்கள். பழைய வேலைக்கு நோட்டீஸ் கொடுத்து, வீட்டை காலி செய்து, புது ஊரில் புது வீடு பிடித்து, குழந்தைகளுக்கு காப்பகம் கண்டுபிடித்து எல்லாவற்றையும் ஒரே மூச்சில் செய்தார்கள். அவளுக்கும் கோவாவில் ‘முதல் நிதிக் கம்பெனியில்’  வர்த்தகப் பிரிவில் வேலை கிடைத்தது.

 

ஜானுக்கு இந்த ஐ டி கம்பனி மிகவும் பிடித்திருந்தது. சாயங்காலம் வீ ட்டுக்கு வரும் பொது மிகவும் சந்தோஷத்துதுடன் வருவான். கம்பெனியில் செய்யும் வேலை மற்றும் அங்கு நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகள்  எல்லாவற்றையும் மேரியிடம் சொல்லி மகிழ்வான். ஜானும்  மேரியும்   குழந்தைகளைச்  சீக்கிரம் தூங்கப்பண்ணிவிட்டு வெகுநேரம் சிரித்து மனம் விட்டு பேசி விளையாடிக்கொண்டே இருப்பார்கள். மேரியுடைய நிதிக் கம்பெனியைப் பற்றியும் மற்ற உடன் வேலை பார்ப்பவர்களைப் பற்றியும் ஆர்வத்தோடு கேட்பான். பார்ப்பவர்கள் கண்  படும் அளவிற்கு இருவரும் நல்ல நண்பர்கள் போல – காதல் பறவைகள் போலப்  பறந்து திரிந்தனர். ஒருவரை ஒருவர் பார்க்கும் போது அவ்வளவு துள்ளல் மகிழ்ச்சி.

                            image

எல்லாவற்றையும் அழகாகத் திட்டம் போட்டிருந்தனர் மேரியும் ஜானும் – ஒன்றே ஒன்றைத் தவிர. ஒரு வருடம் ஆன பிறகு  ஜான் அடி வயிற்றில் ஏதோ ரத்தப் போக்கு என்று ஆஸ்பத்ரிக்குப் போனான். ரத்தப் போக்கு அதிகமாகி அதிலேயே  அவன் திடீரென்று  இறந்து  போனான். சொல்லிக் கொள்ள, அழ, விடை பெற எதற்கும் அவனுக்கு நேரமில்லை.

அது இரண்டு வருடம் முன்பு. ஊருக்கு வந்து முழுவதுமாக ஒரு வருடம் கூட ஆகவில்லை அந்த சமயம். அதை நினைக்கும் பொழுது மேரியின் உள்ளம் சுக்கு நூறாக

வெடித்தது. தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டாள் . ‘எனது சொந்தக் கவலைபற்றி நினைக்க இப்போது நேரமில்லை.

திங்கட்கிழமையில்  ஆபீசில் ஏராளமான வேலை இன்னும் பாக்கி இருக்கிறது’.   

(தொடரும்)

 

 

பழைய பேப்பர்

பழைய பேப்பர்

உத்தரகண்டின் கோர இமாலய சுனாமிக்கு இயன்ற அளவு உதவி செய்வோமே?

இலவசத்தில் இன்னொன்று! பாரத கைபேசி திட்டத்தில்  கிராமத்தில் வீட்டுக்கு ஒரு மொபைல் இலவசம்!

·        image

  • பெட்ரோல் டீசல் விலையை அடிக்கடி உயர்த்துகிறார்களே ! விலை ஏற்றத்தை எப்படி சமாளிக்கப் போகிறார்கள்?·       முல்லைப்பெரியார் அணையின் உயரத்தை உயர்த்த த மிழ்நாடு கோரிக்கை -கேரளா மறுப்பு – கோர்ட் தான் தீர்மானிக்கவேண்டும்.

சரிந்து வரும் ரூபாயின் மதிப்பைப் பற்றி  (  1 USD = Rs.60.75) ரிசர்வ் வங்கி கூட கவலைப்படுவதாகத்  தெரியவில்லை.

தெலுங்கானா இந்தியாவின் 29 வது மாநிலமாக உதயமாகிறது.

சும்மா கிடச்சா சித்தப்பாவுக்கு ஒண்ணு என்பது போல நிறைய மாநிலங்கள் கேட்டு போராடப்போகிறார்களாம்- அவத் பிரதேஷ், பூர்வாஞ்சல், பூந்தெல்கண்ட், பச்சிமாஞ்சல், பிராஜ் பிரதேஷ், போஜ்பூர், விதர்பா, கோர்காலண்ட் , போடோலாண்ட், மிதிலாஞ்சல், சௌராஷ்ட்ரா, டிமாலாண்ட்,, கொங்கு நாடு, கூர்க், கோசல், துளு நாடு , கூகிலாண்ட், கொங்கன், காமத்பூர், கரோலண்ட், கிழக்கு நாகாலண்ட், லடாக் யூனியன் பிரதேசம் . இந்தியா பழையபடி 56 தேசங்கள் ஆகிவிடுமோ?

2015 கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தானுடன் முதல் சுற்றில்  மோதப் போகிறதாம்!

2014 ல் நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் – எந்தக் கட்சி வெற்றிபெறும்? ஹிந்து பத்திரிகை சொல்கிறது: இழுபறி நிலை மை தான். யார் பிரதமர்? மோடி? ராகுல்? மூன்றாவது மற்றும் நாலாவது அணி? பொறுத்திருந்து பார்ப்போம்!

பி.ஜே. பி யிலிருந்து டிவோர்ஸ் செய்து கொண்ட நிதிஷ்குமார் என்னவானார்  ?

உணவுப் பாதுகாப்பு சட்டம் வருமா? காலித்தட்டை வைத்துக் கொண்டு காத்திருக்குது பசியில் துடிக்கும் வயிறுகள்.

கிரிமினல் வழக்கு இருக்கும் உறுப்பினர்கள் பதவி ரத்தாக்கும் உச்ச நீதி மன்ற தீர்ப்பை அனைத்துக் கட்சிகளும் எதிர்க்கிறார்கள்!  வேற்றுமையில் ஒற்றுமை என்பது இது தானா? ஆனால் சுப்ரீம் கோர்ட் மரண அடி அடித்திருக்கிறது !

ஆதார் அடையாள அட்டை வாங்கிவிட்டீர்களா?

விண்டோஸ் 8 -நாயகன் பாணியில்- நல்லதா? கெட்டதா ?

தனுஷுக்கு மச்சம் தான்! ஹிந்தி ‘ராஞ்சனா’ 100 கோடி கிளப்பில் சேர்ந்து விட்டதாம்! மரியான்?

தமிழில் அடுத்த மேஜர் எதிர்பார்ப்புகள்: ரஜினியின் கோச்சடையான் – கமலின் விஸ்வரூபம் –2 – விக்ரமின் (ஷங்கரின்) ‘ஐ’ – அஜித்தின் ஆரம்பம் 

சந்தானம் தான் காமெடி சூப்பர் ஸ்டார் !கொட்டாவி விட்டால் கூட ரசிகர்கள் சிரிக்கிறார்களாம்!

நாலு வரிக் கதைகள்

நாலு வரிக் கதைகள் 

 

பசி       சைட்       மதம்      சாமி      கீதை

பாட்டு   நெருடல்    அப்பா

பசி   

பசி வயிற்றைக்  கிள்ளியது! முந்தா நாள் கிராமத்தை விட்டு ஓடி வந்தவனுக்கு பட்டணத்தில்  என்ன கிடைக்கும்? மாடசாமி பசியின்  கொடுமையில் துடித்தான். அவன் அதிர்ஷ்டம் குப்பை லாரியிலிருந்து காஞ்சு போன பிரட் பாக்கெட் அவன் கிட்டே விழுந்தது. ஆசை தீர பிரிச்சு சாப்பிடப் போகும் போது எதிரே நாலு வயசு பொண்ணு அண்ணே! சாப்பிட்டு நாலு நாளாச்சு அண்ணே !!

 

சைட்

 

ரவிக்கு பெரியவர் மீது கோபம் கோபமாய்  வந்தது. பின்னே என்ன ஒரு நாளைப்போல தினமும் சாயங்காலம் ஆறே காலுக்கெல்லாம் வீட்டுக்குத்  திரும்பணுமாம் 1 அந்த நேரத்திலே பீச்சிலே எத்தனை அழகு  சுந்தரிகள்! வயசாயிடிச்சு பெரியவருக்கு! கொஞ்சம் கூட இங்கிதம் தெரியலே!

 ‘ம் ! ம் !  நடையைக் கட்டு !’ பெரியவர் உத்தரவு போட்டார்.

கண்கள் சிவக்க அழுதுகொண்டே அடி வானத்தில் மறைந்தான் ரவி – சூரியன்.

 

மதம்

 

ராமசாமிக்கு மதம் பிடித்துவிட்டது! அவன் யானை இல்லை!மனுஷன்!

சாமி

 

சாமிக்கு பூர்வாசிரமம் எங்கே?

கும்பகோணம் பக்கத்திலே குடவாசல் ஊரு! ஒரு மாத  சோத்துக்கு என்னை வித்திட்டாரு எங்க அப்பா ! அதுக்கப்புறம் ஆடுதுறையிலே ஆடு மேய்ச்சேன் ! மாயவரத்திலே மாடு மேய்ச்சேன் ! ஏ. வி. எம் மிலே ஏணி தூக்கினேன்! அதிர்ஷ்டம் அடிச்சுது! நடிகனானேன்! காரு, பங்களா, தோட்டம்,ஆளு, படை,பந்தா எல்லாம் வந்தது. படம் ஒண்ணு எடுத்தேன். சாமியானேன்!

 

 

கீதை

கிருஷ்ணா? இந்த துச்சாசனன் கிட்டேர்ந்து காப்பாத்த வர மாட்டியா? பாஞ்சாலி போல அஞ்சலை கத்தினாள். கிருஷ்ணன் கொஞ்சம் லேட்டா வந்தான். அதுக்குள் துச்சாசனன் ரேப்பு செய்துவிட்டு போயி விட்டான். கிருஷ்ணா? இது நியாயமா? அஞ்சலை கேட்டாள்.  அந்தப் பாவாத்மாவுக்குத் தான் எய்ட்சை  கொடுத்திட்டியே ! போகட்டும் கண்ணனுக்கே! தத்துவம் பேசினான். 

பாட்டு 

 

அம்மா சாப்ட்வேர் . அப்பா  ஹார்ட்வேர் . அகிலா ஹார்டு வேரும்  சாஃப்ட்வேரும் சேர்ந்து செய்த லிட்டில்வேர் – ரெண்டு வயசு பொண்ணு. அதில் என்ன ப்ராப்ளமோ? குழந்தை எப்போதும் ஒரே அழுகை! பாட்டியின் லேப்டாப்பில்   இருந்தால் தான் சிரிக்கும். இந்த ரெண்டு வேரைக் கண்டால்  கத்தும். பாட்டி ஒரு நாள் ஊரில் இல்லை. ஒரே கத்தல் நிலாப்பாட்டு பாடு என்று.  ஹார்ட்வேர் அடிக்க வந்தது. அம்மா சாப்ட்வேர் பாடியது. “ மூனே மூனே ஓடி வா! கம்ப்யூட் டர் மேலே தவழ்ந்து வா! பேஸ் புக்கிலே  நடந்து வா!இண்டெர்நெட்டிலே ஏறி வா!” குழந்தை அழுகையே தேவலை.

 

நெருடல்

“தொழிலாளர் வர்க்கம் ஓங்குக! தொழிற்சங்கம் ஓங்குக!”  ஆவேசமாகக் குரல் கொடுத்தான் ஆராவமுதன். கூட்டத்தில் காம்ரேட்  காலை மிதிக்க செருப்பு வாயைப் பிளந்தது. பக்கத்தில் இருக்கும் செருப்புத் தைக்கும்  சிறுவனிடம் ஓடினான். “மூணு ரூபாய் கொடு சார் . இன்னிக்கு காலேயி லிருந்து பட்டினி.” “ அதெல்லாம் முடியாது. ஒரு ரூபாய் தான்.” சிறுவன் தைத்துக்  கொடுத்தான். காசை விட்டெறிந்துவிட்டு ஊர்வலத்தின் முன்னணிக்கு ஓடி ஸ்லோகன் எழுப்பினான். “ தோற்றதில்லை தோற்றதில்லை தொழிலாளர் வர்க்கம் தோற்றதில்லை!”

 

அப்பா

                                                           

டீ   அக்கா ! எனக்கு இந்த அப்பாவைப் பிடிக்கவே இல்லை!

ஏண்டா?

பின்னே என்ன ! நம்ம அம்மாவை நாம தான் கட்டிப்போம். அவர் ஏன் கட்டிக்கிறார்?

போடா மண்டு! அப்பா அம்மாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்கார்.

அதனால?

அதனால அவா கட்டிக்கலாம்!

அது சரி! சித்திக்கு கல்யாணம் ஆயிடிச்சா?

இல்லையே! ஏண்டா?

ஒண்ணுமில்லை – என்றான் பொடியன்.