
சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் செப்டெம்பர் 9-10 தேதிகளில் நடைபெற்றது . மாநாட்டின் மூலம் 98 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு வருகிறது’’ என்றார் அதில் பங்கு பெற்றுப் பேசிய முதல்வர் ஜெயலலிதா அவர்கள்.
தமிழக அரசு எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு முதலீடு வந்திருக்கிறது.

நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய செய்தி இது. .
மின் உற்பத்தியில் ரூ .1.07 லட்சம் கோடி .முதலீடு என்பது தமிழகத்திற்கு ஒளி மயமான எதிர்காலம் வரப்போகிறது என்பதற்கு அறிகுறி.
தமிழகம் உலகக் கார் உற்பத்தியில் முதலிடத்திற்கு வரும் என்பதில் சந்தேகமில்லை.
இதற்கு ஒரு நல்ல இணக்கமான சூழ்நிலையை உருவாக்க வேண்டியது அனைத்து மக்களின் கடமை. இந்தத் திட்டங்கள் எல்லாம் செயல் முறையில் விரைவில் வரவேண்டும். அனைத்துக் கட்சிகளும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.
இந்த இதழில் ஒரு ஜோக்கில் சொல்லியிருப்பதைப் போல அடுத்து வரும் ஆட்சிகள் முந்தைய ஆட்சியின் செயல்திட்டங்களை மாற்றி அமைப்பது என்பது நாட்டுக்கு அவர்கள் செய்யும் துரோகம்.
யார் செய்தாலும் அதைத் தொடர்ந்து செய்து அவர்கள் செய்ய நினைத்தை விடச் சிறப்பாகச் செய்ய வேண்டும். அது தான் அரசியல் நாகரீகம். பெருமை.
செய்வார்களா? செய்ய வைப்போம்!
ஆண்டு : 2 மாதம் : 9
Editor and Publisher’s office address:
S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191
email : ssrajan_bob@yahoo.com
ஆசிரியர் & பதிப்பாளர் : சுந்தரராஜன்
துணை ஆசிரியர் : விஜயலக்ஷ்மி
இணை ஆசிரியர் :அனுராதா
ஆலோசகர் :அர்ஜூன்
தொழில் நுட்பம் : ஸ்ரீநிவாசன் ராஜா
வரைகலை : அனன்யா
பக்கம் ………………………. 25