எழுத்தாளர் சிவசங்கரி பற்றிய தகவல்களை தரமுடியுமா? - Quora

குவிகம்- எழுத்தாளர் சிவசங்கரி சிறுகதைத் தேர்வு

குவிகம் குழுமத்தின் மற்றுமொரு பரிசுத் திட்டம் !

ஓர் ஆண்டில் வெளிவந்த  சிறுகதைகளில் சிறந்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்குப்  பரிசுகள் வழங்குவது!   

அச்சில் மற்றும் இணையத்தில் வரும் வார /மாத /காலாண்டு போன்ற இதழ்களில் வெளியாகும் சிறுகதைகளில் சிறந்த ஒரு சிறுகதையினை ஒவ்வொரு மாதமும் தேர்ந்தெடுத்து அவற்றிலிருந்து மிகச் சிறந்த ஒரு  சிறுகதையை ஆண்டுச் சிறுகதையாக அறிவிக்க குவிகம் திட்டமிட்டிருக்கிறது.

  • அச்சிலும் இணையத்திலும் பருவ இதழ்களில் இடம்பெறும் சிறுகதைகளில் சிறந்ததாக ஒருசிறு கதையை ஒவ்வொரு மாதமும் (ஜூலை 1, 2022 முதல் ஜூன் 30, 2023 வரை) ஒரு நடுவர்  தேர்ந்தெடுப்பார்.

  • அப்படி தேர்ந்தெடுக்கப்படும் 12 சிறுகதைகளில் சிறந்த ஒன்றை ஆண்டுச் சிறுகதையாக ஒரு நடுவர் தேர்வு செய்வார்.

  • அந்த 12 கதைகளும் நடுவரின் முன்னுரையோடு புத்தகமாக வெளியிடப்படும்.

  • ஒவ்வொரு மாதமும் தேர்ந்தெடுக்கப்படும் கதைக்கு ரூ. 1000 மற்றும் ஆண்டுச் சிறுகதைக்கு ரூபாய் ரூ5000/ பரிசளிக்கப்படும்.

  • சின்னஞ்சிறு கதைகளும் நீண்ட சிறுகதைகளும் தேர்வில் இடம்பெறாது.

  • தேந்தெடுக்கப்பட்ட மாதச் சிறுகதை குறித்த அறிவிப்பு அடுத்தமாதம் குவிகம் மின்னிதழில் அறிவிக்கப்படும்.

  • குவிகம் குழுமத்தின் முடிவே இறுதியானது.

இந்த முயற்சிக்கு இந்த வருடத்தின்  அனைத்து செலவினங்களுக்கான முழுத் தொகையினையும் எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள் குவிகத்திற்கு அளித்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.!  

எழுத்தாளர் சிவசங்கரி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!

இந்தத் திட்டம் தொடர்ந்து வெற்றி பெற இலக்கிய அன்பர்கள்  அனைவரது ஆதரவையும்   வேண்டுகிறோம்! 

– குவிகம்