எம்ஜிஆர், சிவாஜி, கமல், மணிரத்னம் ஆகியோர் முயற்சி செய்து முடியாமல் போனது பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாகக் கொண்டுவருவது !


மணிரத்னம் அவர்கள் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க மீண்டும் முயற்சி செய்கிறார் என்பது தற்போதைய சுடும் செய்தி!

தமிழ் ஹிந்து செய்தி:
விஜய், விக்ரம் மற்றும் சிம்பு ஆகியோரை வைத்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் மணிரத்னம்
மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் ‘செக்கச்சிவந்த வானம்’. மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைகா இணைந்து இப்படத்தை தயாரித்தது.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் நிஜமான மல்டி ஸ்டாரர் படம் என்று கொண்டாடினார்கள். தற்போது தனது நீண்ட நாள் கனவான ‘பொன்னியின் செல்வன்’ படத்தை மீண்டும் கையில் எடுத்திருக்கிறார் மணிரத்னம்.
கடந்தமுறை விஜய் மற்றும் மகேஷ் பாபு ஆகியோரை வைத்து முதலில் பேச்சுவார்த்தை தொடங்கினார். ஆனால், எதிர்பார்த்ததைவிட பட்ஜெட் அதிகமானதால் அந்த முயற்சியைக் கைவிட்டார்.
இப்போது விஜய், விக்ரம் மற்றும் சிம்பு ஆகியோரை அணுகியிருக்கிறார் மணிரத்னம். இந்த முறை படமாக்குவதில் தீவிரம் காட்டுவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள். விஜய்யை தன் அலுவலகத்துக்கு அழைத்து, போட்டோ ஷூட் ஒன்றையும் முடித்திருக்கிறார் மணிரத்னம். கதாபாத்திர வடிவமைப்பு எப்படியிருந்தால் அவருக்குப் பொருந்துகிறது என்பதை இதில் முடிவு செய்ததாகத் தெரிவித்தனர்.
விக்ரம் மற்றும் சிம்பு இருவரையும் வைத்து இதே போன்றதொரு போட்டோ ஷூட்டும் விரைவில் நடக்கும் எனத் தெரிகிறது. இப்படத்தையும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தை அவருடன் இணைந்து தயாரித்த லைகா நிறுவனமே தயாரிக்கவுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இம்முறை தனது ‘பொன்னியின் செல்வன்’ முயற்சியில் வெற்றி பெறுவாரா என்பது, இனிமேல் நடைபெறப்போகும் சம்பவங்களைவைத்துத் தெரிந்துவிடும் என்கிறார்கள் சினிமா ஆர்வலர்கள்.

எழுத்துப்பிழை. தமிழ் தவறாக தமில் என்று எழுதப்பட்டிருக்கிறது.
LikeLike
திருத்திவிட்டோம் . சுட்டிக்காட்டியதற்கு நன்றி !!
LikeLike