
சூர் மறுங்கறுத்த சுடர் இலை நெடுவேல்
முருகன் என்றால் அழகன் என்று தமிழ் மொழி கூறும். அழகன் என்ற அந்த ஆண்டவன், குன்று தோறும் நின்றாடும் இளைஞன். குறிஞ்சி நிலத்திற்கு உரியவன். மலைவாழ்ப் பெண்ணான வள்ளிக் குறத்தியைக் காதல் மணம் செய்தவன்.
சிவனின் வடிவானவன். சிவனிலிருந்தே வெளிப்பட்டவன். பிரணவ மந்திரத்தின் முற்றானப் பொருளை அறிந்த முதல்வன். அதைத் தந்தைக்கே உபதேசம் செய்த சுவாமி நாதன். ஆறுபடை வீடுகள் சொல்லும் முருக தத்துவம் உள்ளீடானதும், எளியவர்களுக்கு அச்சம் தவிர்க்கும் சூர் வேலாகவும் இருக்கிறது.
தமிழ் மொழி அறிந்த பலரும் போற்றும் கந்த சஷ்டி கவசம், துதிப்போர்க்கு வல்வினை போக்கும், துன்பம் போக்கும், கதித்தோங்கும் நிஷ்டையும் கை கூட்டும் அருமந்திரம். அதைப் போலவே அவனைப் பிள்ளைத் தமிழால், நாட்டுப்புறத் தமிழால், அழகிய சந்தங்களில் அமைந்த விருத்தங்களால், யாப்பின் பல்வேறு அமைப்புகள் கொண்ட இலக்கண இலக்கியப் பாடல்களால் துதித்தவர் பலர்.
பக்தி இலக்கியத்தின் சிறப்பே அது இறைமையைக் கொண்டாடிய விதம் தான். இசை நயமும், சொற் திறனும் கொண்டு இலக்கணத்தையும் கைவிடாமல், தெய்வீக உணர்வை எழுப்பும் முருகத் துதி பாடல்கள் தமிழின் செழுமை.
அந்த முருகாமிர்தத்தைப் பருகிய பரவசத்தில் அருணகிரி நாதர் அருளிய திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தர் அனுபூதி ஆகியவை நம்மைக் கந்த கோட்டக் கடவுளிடம் சென்று சேர்க்கின்றன. அருணகிரி நாதர் ஏறக்குறைய அறு நூறு ஆண்டுகளுக்கு முன், நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் அவதரித்தவர். அவரது மொழி அபூர்வமானது. அவரது பாடல்களை, நாக்கைச் சுழற்றி நாபியிலிருந்தும், தொண்டை நாண்களின் வழியாகவும், நுனி மூக்கினாலும் பாடினால் தெய்வ அருளுடன் யோக மூச்சிப் பயிற்சி கிட்டுகிறது; அதுமட்டுமல்லாது மூளையின் ந்யூரான்கள் சரியான உயிர்வாயுவினால் சக்தி பெறுவதாகவும் சொல்கிறார்கள். தமிழ் என்றாலே முருகன் அல்லவா? முருகனோ என்றும் இளமையுடன் இருப்பவன் இல்லையா?
எடுத்துக்காட்டாக இந்தப் பாடலைப் பார்ப்போம்.
‘முருகன் றனிவேல் முனினங்குருவென்று
றருள் கொண்டரறியா றறியும் தரமோ
உருவன்றறுவன் றுளதன்று இலதன்
இருளன்று ஓளியன்றென நின்றதுவே’
இந்தக் கந்தர் அனுபூதிப் பாடலை மேலே எழுதியுள்ளவாறே இரு முறை படித்துப் பாருங்கள். மெல்லினம், இடையினம், வல்லினம் இயைந்து வரும் பாடல். இதை வாய்விட்டுப் படிக்கையில் உங்கள் நெஞ்சப் பகுதி விரிந்து சுருங்குவதை உணர்வீர்கள். அந்தப்பாடலை பிரித்து எழுதினால் இப்படி வரும்.
முருகன், தனிவேல் முனி, நம் குரு என்று
அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ
உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று,
இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே
குறிஞ்சிக் குமரனான அந்த அழகன் யார்? அவன் கை வேலே தனித்துவமானது. அது குருவாக நம்மைக் காப்பது. அதை உணர்ந்தவர்களுக்குத் தெரியும், அவன் ஒளி, அவனே இருள்; அவனே உரு கொண்டும் திகழ்வான், அவனே உருவற்றவனுமாவான். இருப்பவனாகத் திகழும் அவனே இல்லாதவனுமாக இருக்கும் விந்தையை அவனைக் குருவென்று ஏற்றுக் கொள்பவர்கள் தானறிவார்.
மேலும் சொல்கிறார் அருணகிரியார்:
ஆனா அமுதே, அயில் வேல் அரசே,
ஞானாகரனே, நவிலத் தகுமோ?
யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே.
எத்தனை எளிமையாக அத்வைதத்தைச் சொல்லிவிடுகிறார்?
‘யானாகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நின்றது எது, அதுவும் எப்படி நிலையாய் நின்றது.? கந்தர் அலங்காரத்தில், தான் குமரனது திருமேனியில் சொக்கி நின்றதை அழகுத் தமிழில் பாடிப் பரவசமடைகிறார்:
பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த்
தித்தித் திருக்கு மமுதுகண்டேன் செயன் மாண்டடங்கப்
புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்
தத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே.’
இப்பாடலைக் கீழ்க்கண்டவாறு பிரித்துப் படிக்கலாம்.
‘பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள்களுமாய்த்
தித்தித்து இருக்கும் அமுது கண்டேன் செயல் மாண்டு அடங்கப்
புத்திக் கமலத்து உருகிப் பெருகிப் புவனம்எற்றித்
தத்திக் கரைபுரளும் பரம ஆனந்த சாகரத்தே
முருகனின் ஆறுமுகங்கள் எதைக் குறிக்கின்றன?
ஞானம், வைராக்யம், வலிமை, கீர்த்தி, செல்வம், ஐஸ்வர்யம்; அவனது ஆறுபடை வீடுகளும் இதன் குறியீடுகளே;
ஓம் என்ற பிரணவப் பொருளுரைத்த சுவாமி மலை, ஞானக் குறியீடு.
ஆண்டியின் கோலமுற்ற பழனி, அச் சிறுவனின் வைராக்யம்.
சூரன் உடல் கிழித்த திருச்செந்தூர் வலிமையல்லவா?
தெய்வானையைத் திருமணம் செய்து கொண்ட திருப்பரங்குன்றம், அவன் கீர்த்தியை, வெற்றியை, அவன் இந்திரனின் மருமகனாதைச் சொல்லும் பேறு பெற்றது.
காதலும், களவுமாகப் பேசும் தமிழ், கொண்டாடுகிறது முருகன் வள்ளித் திருமணத்தை; தெள்ளு தமிழ்க் குறத்தியை திருமகளெனக் கொண்டு மணந்து சினந்தணிந்து திருவும், அருளுமாக நின்ற இடம் திருத்தணிகை.
தங்க மயிலாடும் பழமுதிர்ச்சோலை ஐஸ்வர்யம் பொங்கும் இடம்.
மற்றுமொரு அபூர்வ செய்தியினையும் பார்ப்போம்.
மேல்கொடுமாலூர் என்ற அழகிய ஊர் பரமக்குடியிலிருந்து 22 கி மீ தொலைவில் உள்ளது. இந்தத் தலத்தில் அன்னையிடமிருந்து மழு என்ற ஆயுதத்தையும் பெற்றார் முருகன். வேல் தந்த அன்னையவள், சிவனின் மழுவையும் மகனுக்குத் தருகிறாள். சூரனை வென்ற முருகன் இவ்விடத்திற்குச் சாயுங்காலம் வருகிறார். அவ்விடத்தில் ரிஷிகள் அவரை வரவேற்று, உபசரித்து தங்கச் சொல்கின்றனர். மாலையில் அங்கே குமரன் எழுந்தருளியதால், சிறப்பு பூசனைகள் அனைத்தும் ஆதவன் மறைந்த பிறகே செய்யப்படுகின்றன. மா, பலா, வாழைப் பழங்களால் திங்கள், வெள்ளி, கிருத்திகை தினங்களில் அபிஷேகம் நடைபெறுகிறது. தேன் கலந்த தினை மாவும், பாசிப்பருப்பும், கைக்குத்தல் அரிசியும், பழங்களும் அவனுக்குப் படைக்கப்படுகின்றன. முருகையா என்று செல்லமாக விளிக்கப்படும் குமரன், சிறு மரத்துண்டினால் பல்துலக்கினாராம்; அதுவே பெரும் மரமாக வளர்ந்து தல மரமாக வணங்கப்படுகிறது.
‘திருவடியும் தண்டையும் சிலம்பும் சிலம்பு ஊடுருவப்
பொருவடிவேலும் கடம்பும் தடம்புயம் ஆறிரண்டும்
மருவடிவான வதனங்கள் ஆறும் மலர்க்கண்களும்
குருவடிவாய் வந்து என்உள்ளம் குளிரக் குடிகொண்டவே!
சூர் மறுங்கறுத்த சுடர் இலை நெடுவேல்
முருகன் என்றால் அழகன் என்று தமிழ் மொழி கூறும். அழகன் என்ற அந்த ஆண்டவன், குன்று தோறும் நின்றாடும் இளைஞன். குறிஞ்சி நிலத்திற்கு உரியவன். மலைவாழ்ப் பெண்ணான வள்ளிக் குறத்தியைக் காதல் மணம் செய்தவன்.
சிவனின் வடிவானவன். சிவனிலிருந்தே வெளிப்பட்டவன். பிரணவ மந்திரத்தின் முற்றானப் பொருளை அறிந்த முதல்வன். அதைத் தந்தைக்கே உபதேசம் செய்த சுவாமி நாதன். ஆறுபடை வீடுகள் சொல்லும் முருக தத்துவம் உள்ளீடானதும், எளியவர்களுக்கு அச்சம் தவிர்க்கும் சூர் வேலாகவும் இருக்கிறது.
தமிழ் மொழி அறிந்த பலரும் போற்றும் கந்த சஷ்டி கவசம், துதிப்போர்க்கு வல்வினை போக்கும், துன்பம் போக்கும், கதித்தோங்கும் நிஷ்டையும் கை கூட்டும் அருமந்திரம். அதைப் போலவே அவனைப் பிள்ளைத் தமிழால், நாட்டுப்புறத் தமிழால், அழகிய சந்தங்களில் அமைந்த விருத்தங்களால், யாப்பின் பல்வேறு அமைப்புகள் கொண்ட இலக்கண இலக்கியப் பாடல்களால் துதித்தவர் பலர்.
பக்தி இலக்கியத்தின் சிறப்பே அது இறைமையைக் கொண்டாடிய விதம் தான். இசை நயமும், சொற் திறனும் கொண்டு இலக்கணத்தையும் கைவிடாமல், தெய்வீக உணர்வை எழுப்பும் முருகத் துதி பாடல்கள் தமிழின் செழுமை.
அந்த முருகாமிர்தத்தைப் பருகிய பரவசத்தில் அருணகிரி நாதர் அருளிய திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தர் அனுபூதி ஆகியவை நம்மைக் கந்த கோட்டக் கடவுளிடம் சென்று சேர்க்கின்றன. அருணகிரி நாதர் ஏறக்குறைய அறு நூறு ஆண்டுகளுக்கு முன், நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் அவதரித்தவர். அவரது மொழி அபூர்வமானது. அவரது பாடல்களை, நாக்கைச் சுழற்றி நாபியிலிருந்தும், தொண்டை நாண்களின் வழியாகவும், நுனி மூக்கினாலும் பாடினால் தெய்வ அருளுடன் யோக மூச்சிப் பயிற்சி கிட்டுகிறது; அதுமட்டுமல்லாது மூளையின் ந்யூரான்கள் சரியான உயிர்வாயுவினால் சக்தி பெறுவதாகவும் சொல்கிறார்கள். தமிழ் என்றாலே முருகன் அல்லவா? முருகனோ என்றும் இளமையுடன் இருப்பவன் இல்லையா?
எடுத்துக்காட்டாக இந்தப் பாடலைப் பார்ப்போம்.
‘முருகன் றனிவேல் முனினங்குருவென்று
றருள் கொண்டரறியா றறியும் தரமோ
உருவன்றறுவன் றுளதன்று இலதன்
இருளன்று ஓளியன்றென நின்றதுவே’
இந்தக் கந்தர் அனுபூதிப் பாடலை மேலே எழுதியுள்ளவாறே இரு முறை படித்துப் பாருங்கள். மெல்லினம், இடையினம், வல்லினம் இயைந்து வரும் பாடல். இதை வாய்விட்டுப் படிக்கையில் உங்கள் நெஞ்சப் பகுதி விரிந்து சுருங்குவதை உணர்வீர்கள். அந்தப்பாடலை பிரித்து எழுதினால் இப்படி வரும்.
முருகன், தனிவேல் முனி, நம் குரு என்று
அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ
உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று,
இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே
குறிஞ்சிக் குமரனான அந்த அழகன் யார்? அவன் கை வேலே தனித்துவமானது. அது குருவாக நம்மைக் காப்பது. அதை உணர்ந்தவர்களுக்குத் தெரியும், அவன் ஒளி, அவனே இருள்; அவனே உரு கொண்டும் திகழ்வான், அவனே உருவற்றவனுமாவான். இருப்பவனாகத் திகழும் அவனே இல்லாதவனுமாக இருக்கும் விந்தையை அவனைக் குருவென்று ஏற்றுக் கொள்பவர்கள் தானறிவார்.
மேலும் சொல்கிறார் அருணகிரியார்:
ஆனா அமுதே, அயில் வேல் அரசே,
ஞானாகரனே, நவிலத் தகுமோ?
யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே.
எத்தனை எளிமையாக அத்வைதத்தைச் சொல்லிவிடுகிறார்? ‘யானாகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நின்றது எது, அதுவும் எப்படி நிலையாய் நின்றது.?
கந்தர் அலங்காரத்தில், தான் குமரனது திருமேனியில் சொக்கி நின்றதை அழகுத் தமிழில் பாடிப் பரவசமடைகிறார்:
பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த்
தித்தித் திருக்கு மமுதுகண்டேன் செயன் மாண்டடங்கப்
புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்
தத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே.’
இப்பாடலைக் கீழ்க்கண்டவாறு பிரித்துப் படிக்கலாம்.
‘பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள்களுமாய்த் தித்தித்து இருக்கும் அமுது கண்டேன் செயல் மாண்டு அடங்கப்
புத்திக் கமலத்து உருகிப் பெருகிப் புவனம்எற்றித்
தத்திக் கரைபுரளும் பரம ஆனந்த சாகரத்தே
முருகனின் ஆறுமுகங்கள் எதைக் குறிக்கின்றன?
ஞானம், வைராக்யம், வலிமை, கீர்த்தி, செல்வம், ஐஸ்வர்யம்; அவனது ஆறுபடை வீடுகளும் இதன் குறியீடுகளே;
ஓம் என்ற பிரணவப் பொருளுரைத்த சுவாமி மலை, ஞானக் குறியீடு.
ஆண்டியின் கோலமுற்ற பழனி, அச் சிறுவனின் வைராக்யம்.
சூரன் உடல் கிழித்த திருச்செந்தூர் வலிமையல்லவா?
தெய்வானையைத் திருமணம் செய்து கொண்ட திருப்பரங்குன்றம், அவன் கீர்த்தியை, வெற்றியை, அவன் இந்திரனின் மருமகனாதைச் சொல்லும் பேறு பெற்றது.
காதலும், களவுமாகப் பேசும் தமிழ், கொண்டாடுகிறது முருகன் வள்ளித் திருமணத்தை; தெள்ளு தமிழ்க் குறத்தியை திருமகளெனக் கொண்டு மணந்து சினந்தணிந்து திருவும், அருளுமாக நின்ற இடம் திருத்தணிகை.
தங்க மயிலாடும் பழமுதிர்ச்சோலை ஐஸ்வர்யம் பொங்கும் இடம்.
மற்றுமொரு அபூர்வ செய்தியினையும் பார்ப்போம்.
மேல்கொடுமாலூர் என்ற அழகிய ஊர் பரமக்குடியிலிருந்து 22 கி மீ தொலைவில் உள்ளது. இந்தத் தலத்தில் அன்னையிடமிருந்து மழு என்ற ஆயுதத்தையும் பெற்றார் முருகன். வேல் தந்த அன்னையவள், சிவனின் மழுவையும் மகனுக்குத் தருகிறாள். சூரனை வென்ற முருகன் இவ்விடத்திற்குச் சாயுங்காலம் வருகிறார். அவ்விடத்தில் ரிஷிகள் அவரை வரவேற்று, உபசரித்து தங்கச் சொல்கின்றனர். மாலையில் அங்கே குமரன் எழுந்தருளியதால், சிறப்பு பூசனைகள் அனைத்தும் ஆதவன் மறைந்த பிறகே செய்யப்படுகின்றன. மா, பலா, வாழைப் பழங்களால் திங்கள், வெள்ளி, கிருத்திகை தினங்களில் அபிஷேகம் நடைபெறுகிறது. தேன் கலந்த தினை மாவும், பாசிப்பருப்பும், கைக்குத்தல் அரிசியும், பழங்களும் அவனுக்குப் படைக்கப்படுகின்றன. முருகையா என்று செல்லமாக விளிக்கப்படும் குமரன், சிறு மரத்துண்டினால் பல்துலக்கினாராம்; அதுவே பெரும் மரமாக வளர்ந்து தல மரமாக வணங்கப்படுகிறது.
‘திருவடியும் தண்டையும் சிலம்பும் சிலம்பு ஊடுருவப்
பொருவடிவேலும் கடம்பும் தடம்புயம் ஆறிரண்டும்
மருவடிவான வதனங்கள் ஆறும் மலர்க்கண்களும்
குருவடிவாய் வந்து என்உள்ளம் குளிரக் குடிகொண்டவே!