குவிகம் நவம்பர் 2015 இதழில் வழக்கம் போல 25 பக்கங்கள் இருக்கின்றன !
நீங்கள் கீழே ஸ்க்ரோல் செய்து செல்லும்போது உங்களுக்கு சில பக்கங்கள் மட்டும் தெரிந்தால் click older post என்ற அறிவிப்பைக் கிளிக் செய்யவும். மற்றப் பக்கங்களையும் பார்க்கலாம்.
பக்கத்தின் நடுவில் ” keep reading” என்று மெசேஜ் இருந்தால் அதைக் க்ளிக் செய்தால் முதலில் படித்ததன் தொடர்ச்சி கிடைக்கும்.
archieve menu இல் குறிப்பிட்ட மாதத்தைச் சொடுக்கினால் அந்த மாத இதழில் 25 பக்கங்களையும் எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம் !
“யார் மூஞ்சிலடா முழிச்சே. தினமும் என் மூஞ்சில தானே முழிப்பே ! நேத்து ஒரு நாள் நான் என் மாமா வீட்டுக்குப் போனபோது என்ன பண்ணினே ?”
“எல்லாம் அந்த HR மேடம் மூஞ்சில தான் முழிச்சேன் !”
“டேய் மாப்ளே! என்னடா சொல்லற? அப்ப ராத்திரி அவ கூட தான் படுத்துகிட்டிருந்தியா?”
“அடசே ! ரூமில நாம என்னிக்காவது முழிச்சிருக்கோமாடா? அப்படியே கண்ணை மூடிக்கிட்டே பல்லைத் தேய்ச்சுட்டு ஆபீஸ் பஸ்ஸில தூங்கி ஆபீஸ் வந்துதும் முழிக்கிறோமே அது தானேடா ரியல் முழிப்பு !”
“நான் உன்கூட தானடா பஸ்ஸில வந்தேன். ஏன் உன்னை எழுப்பலே?”
“லூசு! அது நான் கேட்க வேண்டிய கேள்வி ! அந்த மாங்கா – அவன் தாண்டா நம்ம பாஸ், யாருகிட்டேயோ போனில மாம்ஸ் அப்படின்னு பேசிக்கிட்டு இறங்கினான். நீ லூசு மாதிரி ராம்ஸுன்னு உன்னைக் கூப்பிடறதா நினைச்சுக்கிட்டு அவன் பின்னாடியே ‘யெஸ் பாஸ் யெஸ் பாஸ் ’ னு ஓடினியே ! அப்பத் தான் அந்த HR மாமி என்னைத் தட்டி எழுப்பி ’ நேத்திக்கு ஹேங்க் ஓவர் இன்னும் போகலையான்னு கேட்டுட்டுப் போறாடா? ”
“எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு மச்சி! நேத்து நான் இல்லாதபோது நிலவேம்பைக் குடிக்கிறேன்னு நினைச்சுக்கிட்டு நான் வைச்சிருந்த ‘அரிஸ்டோகிரெட்டை ’ ராவா அடிச்சிட்டியா?”
“போடா ! நேத்து ராத்திரி தூக்கத்தில ஒரு கனவு கண்ணா! ஒரு பொண்ணு என்னை டிஸ்டர்ப் பண்ணிட்டாடா?”
“அதில்லேடா! ஒரு அழகான பொண்ணு ! என்னைப் பாத்த முதல் பார்வையிலேயே ‘என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறயான்னு கேட்கிறா?”
“அப்ப இது பேய்க்கனவு தாண்டா ! அதுக தான் இப்படி அலையும் !”
“சே! சே! பேய் எல்லாம் இல்லடா ! நல்ல லட்சணமா ரெட் கலர் சாரி கட்டிட்டு வந்தா! ஆனா முகம் மட்டும் தெரியலைடா !”
“ அப்ப அது அந்த மிஸ் ஓ.எம்.ஆர். ஆக இருக்கும் !”
“யாருடா அந்த அழகு ராணி மிஸ் ஓ.எம்.ஆர். ?
வேற யாரு உன்னோட HR குவீன் தான். அவ ஒரு தடவை ரெண்டு நாள் லீவு போட்டுட்டு ஊருக்குப் போனாளா? அப்ப அங்கேர்ந்து கான்பிரன்ஸ் கால்ல கூப்பிட்டு ’ ஐ மிஸ் ஓ.எம்.ஆர். ! ஐ மிஸ் ஓ.எம்.ஆர்! அப்படின்னு நூறு தடவை சொன்னாளாம். அதிலிருந்து அவளுக்கு இன்னொரு பெயர் மிஸ் ஓ.எம்.ஆர்.”
“ போடா! அந்த லிஸ்டை சிஸ்டத்தில பத்து தடவை பாத்துட்டேன். அதில என்னை டிஸ்டர்ப் பண்ணினவ இல்லேடா”
“ ஏண்டா! ஒருவேளை இந்த பார்க்காம காதல், பேசாம காதல்,கேக்காத காதல் தொடாம காதல் இந்த மாதிரி ஏதாவது இண்டர்வியூவுக்கு வராத பொண்ணை லுக் விட்டிருப்பியோ?”
“ ஏய்! ரைட்டா! கையைக்கொடு! இண்டர்வியூவுக்கு வராத பொண்ணு தான் என் கனவில வந்திருந்தா! அவ தான் அந்த சிவப்பு சாரிக் காரி. ”
“ என்னடா உளர்ரே? ”
“ கண்ணா! நேத்திக்கு என்கிட்டே கொடுத்த லிஸ்டில மொத்தம் ஒன்பது பேர் இருந்தாங்க! நான் சிஸ்டத்தில ஒன்பது பேரைப் பாத்தேன். அதில ஒண்ணு தான் அந்த சிவப்பு சாரி. ஆனா இண்டர்வியூவுக்கு எட்டு பேர் தான் வந்தாங்க !. இவ மட்டும் வரலை”
“பிரதர், வராதவங்க டீடைல்ஸ் எல்லாம் HR கிட்டே தான் இருக்கும். நீ வேணுன்னா நம்ம மிஸ் ஒ.எம்.ஆர். கிட்டே போய் வாங்கிக்கோ! டேய்! என்ன சொன்னே ! ரெட் சாரியா? டேய் நானும் நேத்திக்கு அந்தப் பொண்ணை HR ரூமில பாத்தேண்டா ! ஒருவேளை உன் மூஞ்சியைப் பாத்துட்டு இந்தக் கம்பெனியே வேண்டாமுன்னு போயிட்டாளோ என்னவோ? ”
“ நீ அவ முகத்தைப் பாத்தியாடா? எப்படி இருந்தா? ”
“ சாரி மச்சி! எனக்கும் முதுகு தான் தெரிஞ்சுது. முதுகு ஓகே! முகத்தைப் பாக்கலாமுன்னு மிஸ் ஒ.எம்.ஆர். கிட்டே போனேன். என் போராத நேரம் , அப்பவும் என் கையிலே காபி கப் இருந்தது. மிஸ் ஒ.எம்.ஆர். கிட்டேயே வராதேன்னு கண்ணாலேயே மிரட்டினா! நேரா திரும்பிட்டேன்.”
“ சரி, நீ இங்கேயே இரு. நான் மிஸ் ஒ.எம்.ஆர். கிட்டே போய் அவளைப் பத்திய தகவலைப் பிடிச்சிட்டு வர்றேன்”
“ ஏண்டா! ரைட் அபௌட் டர்ன் அடிச்சு உடனே வர்ரே! எனக்குப் புரிஞ்சுது! நீ போய் அவ கிட்டே ரெட் சாரி வேணும்னு கேட்டிருப்பே ! அவ இன்னிக்கு ரெட் சாரி .கட்டியிருக்கா! பளார்னு அறைஞ்சு அனுப்பியிருப்பா? சரியா? ”
“ போடா! இடியட் ! மிஸ் ஒ.எம்.ஆர். சீட்டில காணோம். வர இன்னும் ஒன்றரை மணிக்கூர் ஆகும்னு அந்த மலையாள அசிஸ்டெண்ட் பறஞ்சுது. ”
“ ஒ! ஓமனக்குட்டியா ? தப்பா நெனைச்சுக்காதே! பேரே அப்படித் தான். அட! புரிஞ்சு போச்சு! நம்ம மிஸ் ஒ.எம்.ஆர். எங்கே போயிருக்குன்னு எனக்குத் தெரியும். இன்னிக்கு என்ன கிழமை?
” அதுக்கும் கிழமைக்கும் என்னடா சம்பந்தம்? “
” இன்னிக்கி செவ்வாய்க் கிழமை. சாயங்காலம் மூணு முதல நாலரை வரை ராகு கால பூஜை பக்கத்தில இருக்கிற துர்க்கை கோயில்ல நடக்கும். கல்யாணம் ஆகணுமுன்னு வேண்டிக்க நிறைய பெண்கள் அங்கே போவாங்க!. மிஸ் ஒ.எம்.ஆர். சிவப்புப் புடவை -ராகு காலம் – ஒண்ணும் அரையும் ஒண்ணரை.“
” உனக்கு எப்படிடா இதெல்லாம் தெரியும்? “
“நானும் அங்கே போயிருக்கேன். முறைக்காதே! அங்கே வந்திருக்கறதில ஏதாவது நமக்குத் தோதாகுமான்னு பாக்க!நம்ம மிஸ் ஒ.எம்.ஆர். வர்ரதைப் பாத்தப்புறம் அந்தப் பக்கமே போகிறதில்லே!”
“இந்த ரெட் சாரியை விடுடா? நம்ம ரெட் சாரி மேட்டருக்கு வாடா? ”
“என்ன என் ரெட் சாரியைப் பத்தி ஏதாவது காமெண்டா?” என்று கேட்டுக் கொண்டே மிஸ் ஒ.எம்.ஆர். என் கிட்டே வந்தாள். இவன் சாரின்னு இடத்தை விட்டே ஓடிட்டான்.
“ என்னது? சாரியா? இது வேற சாரி மேடம்! இவன் இன்னைக்கும் காபியை என் டேபிள்ள கொட்டிட்டானாம். அதுக்குத் தான் சாரி கேட்டுட்டுப் போறான். ”
“ எப்படித் தெரியும்? ஒ! நேத்திக்கு அவ வந்து என் கிட்டே பர்மிஷன் கேட்ட போது பாத்தீங்களா? ”
“ சிஸ்டத்தில புரபைலில் பாத்தது தான்”
“ எனக்கு ஒரு அர்ஜண்டான வேலை இருக்கு. முடிச்சுட்டு வர்ரதுக்கு ஒண்ணரை மணி நேரம் ஆகும். அதனால நீங்களே சோலாவா இண்டர்வியூவை முடிச்சுட்டு ரிபோர்ட் அனுப்பிடறீங்களா? ”
“ஓகே மேடம்!”
“என்னை மிஸ் ஒ.எம்.ஆர்.என்றே கூப்பிடலாம் . அது எனக்குப் பிடிச்ச பட்டப் பெயர் தான்.” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.
நானும் வழிந்து கொண்டே என்னை டிஸ்டர்ப் செய்த பெண்ணை இன்டர்வியூ செய்ய ஆவலுடன் சென்றேன்!
இன்றைக்கும் அவள் சிவப்பு சாரியில் தான் வந்திருந்தாள். ‘சிவப்பு தான் இவளுக்குப் பிடிச்ச கலரோ?’ இல்லே இருப்பது ஒரே ஒரு சிவப்பு கலர் சாரி தானா என்று நினைத்துக் கொண்டே கேட்டேன்.
கமல் என்ற யானையை வைத்துக் கொண்டு யானைப் படையே அமைக்கலாம். அல்லது பட்டத்து யானையாகவோ கோவில் யானையாவோ அலங்கரித்திருக்கலாம். இல்லையென்றால் தேக்கு மரக் காட்டையே இழுக்கச் சொல்லியிருக்கலாம். .
அதையெல்லாம் விட்டுவிட்டு செல்வா யானையை வைத்துக் கொண்டு ரோட்டில வித்தை காட்டுகிறார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. ஸ்கிரீன் பிளே கமல் தான். யானை தன் தலையிலேயே ……..
ஒரு ராத்திரியில நடக்கிற ஸ்பீட் படம் இது சந்தேகமேயில்லை.(அது தான் சாமி தூங்காவனம்!) ‘இங்கிலீஷ் படம் படம் மாதிரி போகுதில்லே’ என்று பக்கத்தில் இருந்தவர் சொல்லும் போது படமே இங்கிலீஷ் ( இல்லே பிரேஞ்சோ?) படத்தின் ரீமேக் என்ற பாணியில் அவர்களே டைட்டிலில் போட்டது நினைவுக்கு வந்தது.
பட ஆரம்பத்திலேயே கமலின் வயித்தில ஒரு வில்லன் கத்தியாலே கீசிடறான். அவர் படம் முழுதும் வயித்தைப் பிடித்துக் கொண்டே ஓடறார்.. குதிக்கிறார்… முத்தம் கொடுக்கிறார்…(சாரி திரிஷாவுக்கு இல்லே)… சண்டை போடறார்.(திரிஷா கூட ) ..சென்டி டயலாக் கொடுக்கிறார்-.. ஜோக் அடிக்கிறார்… கார் ஒட்டறார்…
இயற்கையா இருக்கணும்னு நிறைய சொதப்பறார். நிறைய அடி வாங்குகிறார். திட்டு வாங்குகிறார்.கொஞ்சம் மச மசன்னு இருக்கார். அவருடைய படங்களில் ஒரு சின்ன புத்திசாலித்தனம் இருக்கும் அதுக்காக அவர் படம் பாக்கப் பிடிக்கும். அது இதிலே மிஸ்ஸிங் . ஒருவேளை அது தான் அவருடைய புத்திசாலித் தனமோ?
பாபநாசத்தில அடி வாங்கலாம். ஆக் ஷன் ஹீரோ அடி மேல் அடி வாங்கலாமா?
மற்றவர்களைப் பற்றி – கதையைப் பற்றி சொல்லப் பெருசா ஒண்ணும் இல்லை.
“ டாக்டர்..
என்ன சொல்றீங்க..?
என்று கேட்டான் நாவரசு பதற்றத்துடன். அவன்
மனைவி மேகலை கவலையோடு அருகில் நின்றிருந்தாள்.
அந்த ஐந்து
மாடிக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்தது டாக்டர் செல்வராகவனின் கிளினிக்.
“ ஐ ஆம் ஸாரி..
மிஸ்டர் நாவரசு.. காயம் என்னவோ சின்னக் காயம்தான். பட்.. ஓபன் வூண்ட்.. உங்க வைஃப் நன்றாகக் கழுவி
ரெண்டு நாளா காயத்தை டிரஸ் செய்து கொண்டிருந்தது வாஸ்தவம்தான். ஆனா காயம் இன்ஃபெக்ட் ஆயிருக்கு. அது எத்தனை தூரம் புரையோடி இருக்குன்னு பார்க்கறதுக்கு
சில டெஸ்டுகளுக்கு எழுதித் தரேன். செக் பண்ணி ரிப்போர்ட் கொண்டு வாங்க.. அப்புறம்
அதன்படி மருந்து கொடுக்கலாம். இப்போ பெயின் கில்லரும் ஜெனரல் ஆன்டிபயாடிக்கும்
எழுதித் தரேன். இட் வில் டேக் கேர் ஃபார்
தி டைம் பீயிங்..” என்று கூறியபடியே ஒரு பேப்பரில் அரைப் பக்கத்துக்கு டெஸ்டுகளும், இன்னொரு பேப்பரில் சில மருந்துகளும் எழுதிக் கொடுத்தார்
டாக்டர்.
“ ஆனால் எப்படி
டாக்டர்… இதோ பாருங்க இந்த பஞ்சாலதான் அவனுடைய காயத்தைக் க்ளீன் பண்னினேன்”
என்று ஒரு பஞ்சு ரோலை எடுத்து நீட்டினாள் மேகலை.
அதைப் பார்த்த
டாக்டரின் கண்களில் ஒரு மின்னல்.
“ ஒரு
நிமிடம்.. இங்கே வாருங்க நாவரசு..” என்று அழைத்தபடியே அந்த கிளினிக்கின் ஒரு
மூலைக்குச் சென்றார் டாக்டர். அங்கு ஒரு
மேஜையில் ஒரு மைக்ரோஸ்கோப்பும்,
டேபிள் லாம்பும் இருந்தன.
அந்த டேபிள்
லாம்ப் ஸ்விட்ச்சை ஆன் பண்ணிய டாக்டர், அந்த பஞ்சு ரோலின் ஒரு பகுதியைப் பிய்த்து அந்த விளக்கு வெளிச்சத்தில் காட்டியபடி
உன்னிப்பாகப் பார்த்தார்.
அதைப்
பார்த்துக் கொண்டிருந்த நாவரசு, “
பாருங்க டாக்டர்.. இட் ஈஸ் வெரி க்ளீன்.. பாக்டீரியா ஒன்றும் தென்படவில்லையே.”
என்றான்.
“ ஒன் மினிட்..”
என்றவர் அந்த பஞ்சை மைக்ரோஸ்கோப் லென்ஸின் அடியில் வைத்துப் பார்த்தார்.
சாதாரணக் கண்
பார்வைக்குத் தெரியாத பாக்டீரியாக்கள், வைரஸ்கள் நர்த்தனமாடிக் கொண்டிருந்தன.
“ கம் ஆன்..
இப்பப் பாருங்க” என்று நாவரசையும் அழைத்துக் காட்டினார்.
மைக்ராஸ்கோப்
வழியாகப் பார்த்தவன் திடுக்கிட்டுப்போய் நின்றான். “ எப்படி.. டாக்டர்.. இந்தக் கம்பெனி, நல்ல கம்பெனி
ஆச்சே.. இது எப்படி சாத்தியம்” என்றான் நாவரசு.
“ எனக்கு வர
கேசஸ்லே திஸ் ஈஸ் நாட் தி ஃபஸ்ட் கேஸ்.
காலம் ரொம்பக் கெட்டுப் போச்சு.
திஸ் ஈஸ் எ ராக்கெட்..
ஆஸ்பத்திரியிலே உள்ள அஸிஸ்டென்டுகளைக் கையிலே போட்டுக் கொண்டு, அங்கு டாக்டர்கள் யூஸ் பண்ணிய பஞ்சை மலிவாக வாங்கிக்கிறாங்க இந்த கூட்டம். அந்த அஸிஸ்டென்டுகளும் விளைவு தெரியாம, ‘ என்ன ஆயிடப் போறது.. அவர்கள் சுத்தம் செய்துதானே விற்கப் போறாங்க’ என்று சில சில்லரைக் காசுக்கு ஆசைப்பட்டுக் கொடுத்திடறாங்க.
இவங்க அந்தப் பஞ்சை மேல்வாரியா சுத்தம் செய்து பெயர் பெற்ற கம்பெனியின் பெயரில்
டியூப்ளிகேட் பேக் செய்து விற்றுடராங்க. ஏதோ, ஒரிஜினலாக, அதிகம் வீரியம் இல்லாத பாக்டீரியாக்கள், வைரஸ்களை க்ளீன் செய்த பஞ்சாக இருந்தால் இந்த டியூப்ளிகேட்
பஞ்சு யூஸ் பண்ணறவங்களை அதிகம் பாதிப்பதில்லை… பட், வீரியம் மிக்க வைரஸும்,
பாக்டீரியாக்களும் உள்ள பேஷன்டை க்ளீன் பண்ணிய பஞ்சு என்றால் … மை காட்.. ஐ
கான்ட் இமாஜின்..”
நாவரசின்
தண்டுவடத்தில் ஜிலீரென்றது.
“ இன்னொரு
விஷயம் தெரியுமா? இந்த வைரஸ் ஆர் பாக்டீரியாக்கள் இன்னொருத்தருக்குப்
போகக் கூடாதென்றுதான் டிஸ்போஸபிள் ஸிரிஞ்சை யூஸ் பண்ணறோம். ஆனா, அதிலே கூட இந்த ஆஸ்பத்திரியில் உள்ள அசிஸ்டென்டுகள் செய்யும் கொடுமை இருக்கே…
நார்மலி, ஆஸ்பத்திரியில் உள்ள டாக்டர்ஸ், நியூ ஸிரிஞ்சை எடுத்து மருந்தை நிறைத்து இஞ்செக்ஷன்
கொடுப்பதற்கு அசிஸ்டென்ட் ஹெல்ப் எடுத்துக்கறாங்க. ஆனா அந்த அசிஸ்டென்ட்ஸ்
ஸிரிஞ்சை மாத்தறது இல்லே. ஒருத்தருக்கு யூஸ் பண்ணிய ஸிரிஞ்சையே இன்னொருத்தருக்கும்
யூஸ் பண்ணிடறாங்க. ஆனால் நியூ ஸிரிஞ்சை
எடுத்து யூஸ் பண்ணியதா கணக்கில் எழுதிடறாங்க.
சில சில்லரைக் காசின் மீதுள்ள ஆசைக்காக, பட்.. அட்.. வாட்.. காஸ்ட் .. என்னுடைய கிளினிக்கில் இது நாலாவது கேஸ். ஆல் ரெடி போலீஸிலே ரிப்போர்ட் பண்ணி
இருக்கேன். தே ஷூட் ஹாவ் ஃபௌண்ட் அவுட்
ஸம்திங்க் பைதிஸ் டைம்..” என்று கூறியபடியே நாவரசன் மகன் காயத்துக்கு மருந்து
போட்டு டிரஸ் செய்ய ஆரம்பித்தார்.
தலை சுற்றியது
நாவரசுக்கு. அரசாங்க ஆஸ்பத்திரியில்
அசிஸ்டென்டாக வேலை பார்க்கும் அவன் டாக்டர் கூறியபடி, பேஷண்ட்ஸுக்கு யூஸ் பண்ணிய பஞ்சை வித்திருக்கிறான். ஒரு பேஷண்டுக்கு யூஸ் பண்ணிய ஸிரிஞ்சை இன்னொரு
பேஷண்டுக்கு யூஸ் பண்ணுவதும்,
புது ஸிரிஞ்ச் யூஸ் பண்ணியதாகக் கணக்குக் காட்டுவதும் அவன் விஷயத்தில் சர்வ
சாதாரணம்.
இதைத்தான் ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்று சொல்வார்களோ..?
நான் செய்து வந்த அநியாயம்,
என் பையைனையே, சுற்றி விட்ட ‘பூமராங்’ துவங்கிய இடத்துக்கே வருவது போல், பாதித்து விட்டதோ’ என்ற கலவரத்தோடு அந்தக் கிளினிக்கின் ஜன்னல் பக்கத்தில் இருந்த நாற்காலியில்
அமர்ந்தான். ஜன்னல் வழியே அந்தக் கட்டிடத்தின் மெயின் கேட்டைத் தற்செயலாகப்
பார்த்தான்.
போலீஸ் வான்
அந்தக் கட்டிடத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தது.
கம்ப்யூட்டர் , இன்டர்நெட் இவற்றை எல்லாம் தங்கள் பையன்கள் -பெண்களிடமிருந்து தெரிந்து கொள்ளத் துடிக்கும் ஆர்வக் கோளாறுள்ள அப்பா ஒருவரின் கதை. அவர் தன் பையனுடன் நடத்தும் உரையாடலைக் கேளுங்கள்! உங்கள் வீட்டிலும் நடப்பது போலத் தெரிகிறதா? வீட்டுக்கு வீடு வாசப்படி!
ஹிந்தியில் இருக்கிறதே என்று கவலைப்படாதீர்கள்! நன்றாகவே புரியும் !!
நான் வெங்கட் சாமினாதன். வெசா என்று அழைப்பார்கள் என்னை. விமரிசனாகவும் அறியப்படுகிறேன்.
கடந்த 40 வருடங்களாக தமிழ் நாட்டின் கலை மற்றும் இலக்கிய நடப்புகளைப் பற்றி மனதுக்குப் பட்டதை கஷ்ட நஷ்டங்களைப் பற்றி நினைப்பின்றி எழுதி வந்திருக்கிறேன். ஈஸ்வரோ ரக்ஷது.
ஆனால் ஈஸ்வரனும் ரக்ஷித்ததாகத் தெரியவில்லை. நான் நானாகத்தானே இருக்க முடியும்!
அன்புடன், வெசா
இப்படித் துவங்குகிறது அவருடைய பிளாக் (BLOG )
http://www.vesaamusings.blogspot.com/
இவரைப்பற்றிச் சிலர்:
என் மற்ற நண்பர்களுக்கு எரிச்சலூட்டும்
அளவுக்கு, நான் வெங்கட் சாமிநாதனின்
அபிப்ராயங்களை மதிக்கிறேன். – க.நா.சு
சாமிநாதனது பேனா வரிகள் “புலிக்கு
தன் காடு பிற காடு வித்தியாசம் கிடையாது” என்றபடி சகலத்தையும் பதம்
பார்க்கும் – சி. சு. செல்லப்பா
தமிழ் கலைத் துறைகள் மீது வெ.சா
கொண்டிருக்கும் ஆவேச ஈடுபாடு, வெகு அபூர்வமானது. தமிழ் இனத்தோடு
தன்னைப் பிணைத்துக் கொண்டிருக்கும் தன்மையில் இவரை பாரதியுடன் மட்டுமே ஒப்பிட
முடியும். – சுந்தர ராமசாமி
எந்த மேல் நாட்டு விமரிசன பாணியையும்
கைக் கொள்ளாமல் தன் சுவைக்கு உட்பட்டதை, படைப்பின்
கலாச்சாரப் பின்ணணியோடு பார்க்கும் தனி ரகம், இவரது
விமரிசனம் – கோமல் சுவாமிநாதன்.
, “வெங்கட் சாமிநாதன்: தமிழ் இலக்கியவெளியில் ஒரு காட்டுக் குதிரை” என்ற கட்டுரையில் திருமாவளவன், “வெங்கட் சாமிநாதனுக்கு முன் “விமர்சனமரபு” என்று சொல்லும்படியான ஒன்று இருந்ததா என்பது இன்றைய வாசகன் எதிர்கொள்ள வேண்டிய முதற் கேள்வி,
வெங்கட் சாமிநாதன் நவீன தமிழின் மிக முக்கியமான ஆளுமைகளுள் ஒருவர். 1950 களில் “எழுத்து” இதழ் மூலமாக தமிழ் கலை-இலக்கியச் சூழலுக்குள் அடியெடுத்து வைத்தவர்
வெங்கட் சாமிநாதன் ஒரு கலை விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம்,
திரைப்படம், நாட்டார் கலைபோன்ற பல்வேறு துறைகளிலும்
ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். நாட்டாரியல் சார்ந்த ஆய்வுகள் தமிழில் உருவாகவும் நவீன நாடகம் உருவாகவும்
முன்னோடியாக இருந்தார். இலக்கியத்துக்கு இசை, திரைப்படம்,
நாடகம் போன்ற பிற கலைகளுடன் இருக்கவேண்டிய உறவை வலியுறுத்தியவர்.
மார்க்ஸீய எழுத்தாளர்களும் , திராவிட எழுத்தாளர்களும் தமிழ் எழுத்துலகை ஆக்கிரமித்துக் கொண்ட போது , அவர்களுக்கு எதிராகக் குரல் எழுப்பிய ஒரே குரல் இவருடையது தான். அதற்காக இவர் CIA ஏஜண்ட் என்றும் , முதலாளித்துவத்தின் கைக்கூலி என்றும் திட்டப்பட்டவர்.
இவர் திரைக்கதை எழுதி, ஜான் ஆபிரகாம் இயக்கத்தில் வெளிவந்த அக்ரஹாரத்தில் கழுதை என்ற
திரைப்படம், தமிழ் திரையுலக வரலாற்றின் ஒரு
மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
அவருடைய புத்தகங்களான கலை அனுபவம் , வெளிப்பாடு இரண்டும் விமரிசனத்துக்கு விளக்கம் கூறும் அனுபவங்கள்.
கனடாவில் உள்ள டொரண்டோ தமிழ் இலக்கியத் தோட்டம்
வழங்கும் 2003ஆம் ஆண்டுக்கான இயல்விருது சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது.
அவரது வெளியீடுகள்:
இலக்கிய விமர்சனம்: (கட்டுரைத் தொகுப்புகள்)
1. பாலையும் வாழையும்: அன்னம் பதிப்பகம், (1976) 2. எதிர்ப்புக் குரல், அன்னம் பதிப்பகம்(1978) 3, என் பார்வையில், அன்னம் பதிப்பகம் (1982) 4. என் பார்வையில் சில கவிதைகள்: கலைஞன் பதிப்பகம் (2000) 5. என் பார்வையில் சில கதைகள், நாவல்கள்: கலைஞ்ன் பதிப்பகம்(2000) 6. சில இலக்கிய ஆளுமைகள்: காவ்யா பதிப்பகம் (2001) 7. பான்ஸாய் மனிதன்: கவிதா பதிப்பகம், (2001) 8. இச்சூழலில்: மதி நிலையம் (2001) 9. விவாதங்கள், சர்ச்சைகள்: அமுத சுரபி பிரசுரம்(2003) 10, ஜன்னல் வழியே: சந்தியா பதிப்பகம் (2005) 11. புதுசும் கொஞ்சம் பழசுமாக: கிழக்கு பதிப்பகம்(2005) 12. யூமா வாசுகி முதல் சமுத்திரம் வரை: எனி இந்தியன் பிரசுரம் (2006) 13. க்டல் கடந்து: விருட்சம் பிரசுரம்: (2006) 14. இன்னும் சில ஆளுமைகள்; எனி இந்தியன் பிரசுரம் (2006)
நாடக விமர்சனம்:
15. அன்றைய வரட்சியிலிருந்து இன்றைய முயற்சி வரை: அன்னம் பதிப்பகம், (1985) 16. பாவைக் கூத்து அன்னம் பதிப்பகம்.(1986) 17. இன்றைய நாடக முயற்சிகள்: தமிழினி பிரசுரம்(2004)
திரைப்படம்
18. அக்கிரகாரத்தில் கழுதை {திரைப்பட பிரதி} (இரண்டாம் பதிப்பு: காவ்யா பதிப்பகம்(1997) 19. திரை உலகில் (திரை விமர்சனங்கள்) காவ்யா பிரசுரம்(2003)
கலை விமர்சனம்
20. கலைவெளிப்பயணங்கள்: அன்னம் பதிப்பகம், இரண்டாம் பதிப்பு (2003) 21. கலை உலகில் ஒரு சஞ்சாரம்: சந்தியா பதிப்பகம்(2004) 22. சில கலை ஆளுமைகள், படைப்புகள்: சந்தியா பதிப்பகம் (2004)
தொகுப்புகள்
23. தேர்ந்தெடுத்த பிச்சமூர்த்தி கதைகள்: சாகித்ய அகாடமி (2000) 24. பிச்சமூர்த்தி னைவாக: மதிலையம்(2000) 25. யாத்ரா இதழ் தொகுப்பு: பாகம் ஒன்று, : சந்தியா பதிப்பகம்(2005) 26. யாத்ரா இதழ் தொகுப்பு: பாகம் இரண்டு: சந்தியா பதிப்பகம்(2005)
மொழி பெயர்ப்புகள்
27. A Movement for Literature: Ka.Naa.Subramaniam: சாகித்ய அகாடமி(1990) 28. தமஸ்: (நாவல்: ஹ’ந்தி மூலம்: பீஷ்ம சாஹ்னி) சாகித்ய அகாடமி(2004) 29. ஏழாம் முத்திரை: (Ingmaar Bergman’s filmscript); (தமிழில்) : தமிழினி, (2001)
வாழ்க்கை விமர்சன குறிப்புகள்
30. வியப்பூட்டும் ஆளுமைகள்: தமிழினி (2004).
உரையாடல்கள்:
31. உரையாடல்கள்: விருட்சம் வெளியீடு, (2004)
விருது:
டோரண்டோ பல்கலைக் கழகமும் கனடா இலக்கியத் தோட்டமும் இணைந்து அளிக்கும வாழ்நாள் சாதனைக் கான இயல் விருது 2003.
வெங்கட் சாமிநாதன் 80 வயது பாராட்டு விழாவும் , வம்சி பதிப்பகம் வெளியிட்ட, வெங்கட் சாமிநாதன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான “சினிமா என்ற பெயரில்” நூல் வெளியீட்டு விழாவும் 2013 இல் நடைபெற்றது. இந்திரா பார்த்தசாரதி, வெளி ரங்கராஜன், கணையாழி ராஜேந்திரன், சச்சிதானந்தம், பாரதி மணி, சுகா, சீனு ராமசாமி, செங்கதிர், திலிப் குமார், க்ரியா ராமகிருஷ்ணன் ஆகியோர்
நிகழ்விற்கு வந்திருந்து சிறப்பித்தவர்கள்.
அக்கிரகாரத்தில் கழுதை:
ஒரு பார்ப்பனப் பேராசிரியர் ஓய்வுபெற்றுத் தன்கிராமத்திற்கு ஒரு கழுதைக் குட்டியோடு வருகிறார். அதனால் அவருக்கும் அக்கிரகாரத்துப் பார்ப்பனர்களுக்கும் இடையில் தகராறு வருகிறது. ஆனால் பேராசிரியர் வீட்டில் வேலைபார்க்கும் தலித்பெண் லட்சுமி கழுதை மீது மிகுந்த பிரியத்தோடு இருக்கிறாள். பேராசிரியர் ஊரில் இல்லாதபோது கழுதை கோயிலில் கட்டப்படுகிறது. இந்த இடைவெளியில் லட்சுமி யாராலோ ‘கெடுக்கப்பட்டு’ கர்ப்பமாகிறாள்.
லட்சுமியின் குழந்தை இறந்து பிறக்கிறது. அதற்குக் காரணம் கழுதைதான் என்று முடிவுகட்டிக் கழுதையைக் கொன்று விடுகின்றனர் . ஊர் திரும்பிய பேராசிரியர் சுடுகாடு சென்று கழுதையின் மண்டையோட்டை லட்சுமியிடம் கொடுக்கிறார். லட்சுமி ஒரு மரண நடனம் ஆடி அதை அங்கிருக்கும் தலித்துகளிடம் கொடுக்கிறாள். மண்டையோட்டில் தீ பற்றியெரிகிறது, அந்த தீ அக்கிரகாரத்திற்கும் பரவுகிறது.
“ The Walk “ என்ற படத்தைத் தவற விடாமல் பாருங்கள். டிரைலர் மேலே! விமர்சனம் கீழே!
கயிற்றில் நடந்து வித்தை காட்டும் ஒருவனுக்கு நியூயார்க் நகரத்திலிருக்கும் 100 மாடிகள் உயரம் கொண்ட WORLD TRADE CENTER இன் இரு கட்டடத்துகளுக்கிடையே கயிற்றில் நடக்க வேண்டும் என்பது கனவு.
சட்டப்படி முடியாது என்றாலும் சட்டத்தை மீறி நாலைந்து நண்பர்களின் உதவியால் இரவில் கயிற்றைக் கட்டிவிட்டுவிடுகிறான். காலைப் பொழுது விடிந்ததும் ஆயிரக்கணக்கான மக்கள் பார்க்கும் போது ஒரு டவரிலிருந்து இன்னொரு டவருக்குக் கையில் குச்சியுடன் நடக்கிறான். போலீஸ் ஒரு டவரின் முனைக்கு வந்து அவனைப் பிடிக்கக் காத்திருக்க முனை வரைக்கும் வந்த அவன் திரும்ப அடுத்த முனைக்குச் செல்கிறான். இப்படி நாலைந்து முறை நடக்கிறான். நடுவில் பார்க்கும் மக்களுக்கு நன்றி வணக்கம் தெரிவிக்கிறான். கயிற்றிலேயே சற்று நேரம் படுக்கவும் செய்கிறான்.
இதெல்லாம் நடக்கிற கதையா என்று கேட்கிறீர்களா ?
உண்மையில் ஒருவன் நடந்ததைத் திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். அவன் கயிற்றின் நுனிக்கு வரும் போது நாமும் சீட்டின் நுனிக்குப் போகிறோம்.
அது தான் படத்தின் வெற்றி. அருமையான படம். விடா முயற்சிக்கு இதை விடச் சிறந்த படம் இல்லை.
(அந்த WORLD TRADE CENTER தான் பிற்பாடு செப்டம்பர் 11, 2002 இல் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டது. இன்று அதே இடத்தில் அதை விடச் சிறந்த 102 மாடி டவர் – FREEDOM TOWER என்ற பெயரில் கட்டியிருக்கிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் பார்த்து மகிழ்ந்து வருகிறார்கள்,)
இந்தியாவின் சரித்திரம் சரியான ஆதாரப் பூர்வமான விவரங்கள் கிடைக்கப்படாத காரணத்தால் மிகவும் தடுமாற்றத்துடனேயே எழுதப்பட்டுள்ளது. பதின்மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னால் எழுத்து வடிவான சரித்திர ஆதாரங்கள் எதுவும் அகப்பட்டதாகத் தெரியவில்லை. இஸ்லாமிய ஆதிக்கத்துக்குப் பின்னால் பாரசீக எழுத்தாளர்கள் எழுதியவை இந்திய வரலாற்றை ஓரளவு நேர்த்தியாகக் கோர்க்க உதவியுள்ளன.
இருப்பினும் சென்ற நூற்றாண்டில் நடைபெற்ற சரித்திர ஆய்வுகள் பெரும் தகவல்களைத் தந்துள்ளன. நாணயங்கள், பிரகடனங்கள், கல்வெட்டுகள், காப்பியங்கள், மத நூல்கள் என்று பல்வித சான்றுகள் கிடைத்துள்ளன.
மன்னர்கள் எழூப்பிய அரண்மனைகள், கட்டிடங்கள், கோவில்கள், பல சரித்திரக் குவியல்களாகும். பதினொன்றாம் நூற்றாண்டில் சோழமன்னன் ராஜராஜன் எழுப்பிய தஞ்சைப் பெரியகோயில் ஒரு மாபெரும் சரித்திரச் சுரங்கம். அந்தக் காலத்து வாழ்வுமுறை, மன்னர்களின் படையெடுப்பு, அரசுமுறை போன்றவை அதன் மூலம் அறியமுடிகிறது.
மௌர்யர், குப்தர், ஹர்ஷவர்த்னர் என்று பெரும் வம்சாவளிகள் இந்தியாவில் மாபெரும் சாம்ராஜ்யத்தை நிறுவி ஆண்டு வந்தனர். இவர்கள் ஆண்ட காலத்தில் பெரும் நகரங்களாகத் திகழ்ந்தவை பாடலிபுத்ரம் மற்றும் கன்னோசி. இவற்றைப் பற்றிய முழு ஆதாரமும் நமக்குக் கிடைக்கவில்லை. ஒவ்வொரு படையெடுப்பினாலும், குறிப்பாக இஸ்லாமியப் படையெடுப்பினால், பல நகரங்கள், ஆலயங்கள் , கோட்டைகள் ,கட்டடங்கள் அழிந்தன என்றாலும் இன்றும் அழியாமல் எத்தனையோ சின்னங்கள் இருக்கின்றன. எனினும் அவைகள் அந்த சாம்ராஜ்யங்களைப் பற்றிய தகவல்கள் எவற்றையும் தரவில்லை.
இவற்றைக் கூறுவதின் நோக்கம் இந்த இந்திய சரித்திரச் சித்திரம் கிடைத்த ஆதாரங்களை வைத்தே சில ஊகங்களுடன் வரையப் பட்டுள்ளது. எதிகாலத்தில் வேறு பல ஆதாரங்கள் கிடைக்கக்கூடும். அவை வரலாற்றின் போக்கையே மாற்றவும் கூடும்.
இந்தத் தொடர் கட்டுரைகள் இணைய தளம் , சரித்திர ஆராய்ச்சி நூல்கள் பலவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படுகிறது. ஒவ்வொரு கட்டுரையும் இந்திய வரலாற்றின் ஒரு காலப் பகுதியை விளக்கும். சிந்து சமவெளிமுதல் நேற்றைய இருபதாம் நூற்றாண்டு வரை நிகழ்வுகள் தொகுக்கப்படும்.
இந்த வரலாற்றுப் பதிகத்தின் முக்கியக் குறிக்கோள்கள்:
காலக்கிரமமாக நடந்தவற்றைச் சுருக்கமாகக் கூறுவது
சுவாரஸ்யமான நிகழ்வுகளைத் தருவது
சொந்த சரக்கைச் சேர்க்காமல் சரித்திர அறிஞர்கள் கூற்றை அப்படியே பிரதிபலிப்பது