ஒரு கூழாங்கல்லை ஊதியபடி அகன்ற பாறையின் உச்சியிலேறி அமர்ந்திருக்கிறேன். எங்களூரில் மழை வரக்கூடுமா இல்லையா என்பதை இங்கமர்ந்து தான் பூட்டன் மக்களுக்குரைப்பானாம். அதன்பின் நான்தான் அப்பாவத்தை என் பரம்பரையிலேயே ஏற்றிருக்கிறேன். எதற்காக உனக்காகத்தான்..
இதோ உலகின் முதல் துளி என் உள்ளங்கையில் கூலாங்கல்லாய்.. நேற்றைய மழை, அதற்கு முந்தைய நாள் மழை, போன வாரத்து மழை, போன மாதத்து மழை, போன வருடத்து மழை, போன நூற்றாண்டு மழை, ஏசு சிலுவையில் அறையப்பட்ட அன்று பெய்த மழை, புத்தனுக்கு முன்பான மழை, இப்படி அத்தனை மழைகளிலும் இல்லாத ஒன்று இன்று இருக்கக் கூடுமென்றுணர்கிறேன்..
சென்ற கோடைகாலத்து மைய நாளொன்றில் நீதான் சொன்னாய் இந்த மலையில் அந்த மழை தொடும் நாள் நான் உன்னைக் காதலித்திருப்பேன் என்று.. அன்றும் மழை தான்.. உன்னையும் என்னையும் மட்டும் நனைத்த கோடை மழை.. அன்று தொட்டு இன்று வரை நீ வாயில் போட்டு என் கையில் கொடுத்த கூலாங்கல்லும் நான் அமர்ந்திருக்கும் பாறாங்கல்லும் தான் துணையெனக்கு..
வானம் ஒரு மசக்கைக்காரியைப் போல் திடுமென சோர்கிறது.. மேகம் ஒரு நிறைமாதக் கர்ப்பிணியாய் இங்கும் அங்கும் கருமை கொண்டலைகிறது.. ஒரு பிரசவக்காரியின் அலறல் சத்தத்தை இடி நினைவு படுத்திச் செல்கிறது.. அந்தோ பனிக்குடம் உடைந்ததைப் போல் மழை கொட்டுகிறது.. சரிந்து விழுந்த சிசுவின் ரத்தமாய் என் கைகளில் மழைத்துளி பிசுபிசுக்கிறது.. பச்சைப் பிள்ளையை துடைத்த துணியாய் மழையோடு சேர்ந்த மண்வாசம் கவுச்சி வீசுகிறது.. முதன்முறையில் சேயின் முகம் பார்த்த தாயின் கண்ணொளியாய் மின்னல் வெட்டிச் செல்கிறது..
நிசப்தம் பெரு நிசப்தம் இரைச்சலைக் காட்டிலும் கொடுமை பயக்கும் அகலா நிசப்தம். வானில் ஒளியில்லை இடியில்லை கருமேகத்தில் அசைவில்லை மழையில்லை. இனி எப்படி உனக்கும் எனக்கும் இருந்த உறவை இந்த உலகுக்கு எடுத்துரைப்பேன்.. இனி எப்படிப் புலங்கக்கூடும் நமக்குள் நாம் என்ற சொல்.. உன்னையும் என்னையும் இதே மொட்டைப் பாறையில் கலவிகூடப் பார்த்த மழை இனி எப்படிச் சொல்லும் நம் காதலைச் சாட்சி.
கைகளை உயர்த்தி எட்டும் வரைக்கும் நீட்டிப் பார்த்தேன் மழை இல்லை. காற்றைப் பிழிந்து நுகர்ந்து பார்த்தேன் மழை இல்லை. மேகம் சிலதை அசைத்துப் பார்த்தேன் மழை இல்லை. கடலைக் குடித்து துப்பிப் பார்த்தேன் மழை இல்லை. பூமி மீதும் ஏறிப் பார்த்தேன் மழை இல்லை.
மழை இறந்து போனது. பிறந்த சிசு தாய் முகம் காணாமல் இறந்து போனதைப் போல். தாய் பிறந்த சிசுவைக் காணாமல் இறந்து போனதைப் போல். உனக்கும் எனக்கும் இடையில் இருந்த உறவு இறந்து போனதைப் போல். நம் காதல் இறந்து போனதைப் போல். மழை இறந்து போனது.
நான் மட்டும் மொட்டப் பாறையை கண்ணீரால் நனைக்கிறேன். நனைகிறேன்!!
ராய செல்லப்பா அவர்கள் தில்லித் தமிழ்ச் சங்கத்தில் 16-2-1992 அன்று நடைபெற்ற ‘கவியரசு கண்ணதாசன் நினைவுக் கவியரங்கில்’ தலைமையேற்று வாசித்த கவிதையில் அவர் ஊர் ராணிப்பேட்டையைப் பற்றி சொல்லும் வரிகள்!!
ஆறு காடுகள்
அணிவகுத்து நிற்கும்
ஆற்காடு’
அதனருகே
ஓடாமல் நிற்கும் மணலாறு-
‘பாலாறு!’
இக்கரையில் இருந்தது,
இராணிப்பேட்டை
என் ஊர்- பொன் ஊர்.
தெரியாத கதையா
தேசிங்குராஜன் கதை?
செஞ்சி நகரம் –அவன்
செய்த நகரம்.
முரட்டுக் குதிரையை
விரட்டிப் பிடித்து
முடியாட்சி கொண்டான்
தேசிங்கு.
அது, மதியால்!
ஆற்காட்டு நவாப்பின்
ஆயுதங்களின்முன்
அடங்கிப் போனான். அது, விதியால்.
செஞ்சி அழிந்தது,
தேசிங்கின்
தேகம் சிதைந்தது.
ஆளனை இழந்த
பத்தினிப் பெண்ணாள்
அஞ்சிடவில்லை.
ஆற்காட்டு நவாப்பின்
ஆசை மொழிகளில்
மயங்கிடவில்லை.
இருளும் நிலவும்
இணையும் பொழுதில்
கிளம்பினாள் –தன்
உயிரினின்றும் விலகினாள்.
அவளை உண்டது
எரியும் நெருப்பு.
பெண்ணென்றால்
அதற்கு விருப்பு,
அன்றும் கூட!
தேசிங்கின் ராணி
தீர்ந்த கதை கேட்டு
அயர்ந்து போனான்
நவாப்.
முரட்டு நாகத்தை
ஜெயித்த கரங்கள்-ஓர்
முல்லைப் பூவிடமா
தோற்பது?
காற்று அவனுக்கு
ஆறுதல் சொன்னது-விரைவில்
ஆங்கிலர் ஆட்சி
விரியப் போவதும், இவன்
சரியப் போவதும்
காதில் சொன்னது!
அவனுக்குப் புரிந்ததா
காற்றின் மொழி?
ஆங்கிலக் கம்பெனி –இவனை
ஆதரிக்க வருவதாய்ச்
செய்தி அனுப்பிற்று.
தொட்டால் வெடிக்கும்
ஆயுதம் தருவதாய்த்
தொடர்ந்து சொல்லிற்று!
வேலை ஒன்று கோரி
விண்ணப்பமும் செய்தது-
வரி வசூலிக்கும் வேலை!
சாவி இவனிடமே
இருக்கலாம்,
பெட்டிபோதுமாம்
அவர்களுக்கு.
கேட்டதும் பணமும்
கேளிக்கைக்கு மதுவும்
இலவசம்.
ஒப்பினான் நவாப்.
தென் இந்தியாவின்
முதல் துரோகி
அவன் தானோ?
காலம் அவனை
விரைந்து மறந்தது.
கம்பெனியும் கூட.
ஆற்காடு,
இன்றும் ஆற்காடே.
தீயில் குளித்த
செஞ்சி ராணியின்
தேகச் சாம்பல்கள்
பாலாற்று மணலில் படர்ந்தன.
இல்லாமல் போன
இராணியின் நினைவில்
எழுந்ததே,
‘இராணிப்பேட்டை’.
என்னூர்,
என் பொன்னூர்.
***
கேட்டு வாங்கிப் பதிவிட்ட பல்சுவைப் பதிவுகள் ..2
உமா பாலு அவர்களின் கை வண்ணத்தில் வந்தவை இந்த வண்ணப் படங்கள்! அருமையாக இருக்கின்றன! அவர் கதை கவிதை மட்டுமல்ல, படங்கள் வரைவதிலும் சிறந்தவர் என்பதை நிரூபிக்கின்றன இவை! அதனால இவற்றைக் கேட்டு வாங்கி பிரசுரிக்கிறோம்.
கேட்டு வாங்கிப் பதிவிட்ட பல்சுவைப் பதிவுகள் ..3
குழந்தைப் பாடல்கள் எழுதுவதில் மட்டுமல்ல பல சிறந்த கவிதைகளைப் படைத்து வருகிறார் இலத்தூர் கி. சங்கரநாராயணன் அவர்கள். அவருடைய ‘பால்’ என்ற கவிதையைக் கேட்டு வாங்கி பிரசுரிக்கிறோம்.
பால் !
பாலின் உள்ளே பலபொருளாம் பார்க்கும் கண்ணில் தெரியாதாம் பாலே தயிறாய் மோராகும் பாலே வெண்ணெய் நெய்யாகும்
பாலே அல்வா கோவா போல் பல்சுவை இனிப்பாய் மாறிடுமே பாலைத் தந்திடும் மாடுகளைப் பக்குவமாய் நாம் காத்திடுவோம்
“குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.
எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
பார்த்து, கேட்டு மகிழுங்கள் !
இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:
1. பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020 2. அம்மா அப்பா ! – ஜூலை 2020 3. ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020 4. இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020 5. எனது நாடு – செப்டம்பர் 2020 6. காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020 7. செய்திடுவேன் ! – அக்டோபர் 2020 8. மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020 9. நானும் செய்வேன் ! – நவம்பர் 2020 10. அணிலே ! அணிலே ! – நவம்பர் 2020 11. எல்லையில் வீரர் ! – டிசம்பர் 2020 12. பலூன் ! பலூன் ! பலூன் ! – டிசம்பர் 2020 13. ஜன கண மன ! – ஜனவரி 2021 14. ஊருக்குப் போகலாமா ? – ஜனவரி 2021 15. எங்கள் வீட்டு மொட்டை மாடி ! – பிப்ரவரி 2021 16. பட்டம் விடலாமா ? – பிப்ரவரி 2021 17. சாமி என்னை காப்பாத்து ! – மார்ச் 2021 18. கடற்கரை போகலாம் ! – மார்ச் 2021 19. பிறந்த நாள் ! – ஏப்ரல் 2021 20. வேப்ப மரம் ! – ஏப்ரல் 2021 21. பஸ்ஸில் போகலாம் – மே 2021 22. சிட்டுக் குருவி – மே 2021 23. ஆகாய விமானம் – ஜூன் 2021 24. எங்கள் வீட்டுத் தென்னை மரம் – ஜூன் 2021 25. பாட்டி – கதை சொல்லு – ஜூலை 2021 26. வீட்டுக்கு வா ! – ஜூலை 2021 27. தா தீ தோம் நம் ! – ஆகஸ்ட் 2021 28. விளையாடலாம் ! – ஆகஸ்ட் 2021 29. மழையே வா ! – செப்டம்பர் 2021 30. பாரதிக்கு பாப்பா சொன்னது ! – செப்டம்பர் 2021 31. தோட்டம் போடலாமா ? – அக்டோபர் 2021 32. வள்ளுவர் தாத்தா ! – அக்டோபர் 2021 33. தமிழ் ! – நவம்பர் 2021 34. பாப்பாவுக்கு பப்பாளி ! – நவம்பர் 2021 35. கைக்கடிகாரம் ! – டிசம்பர் 2021 36. ஓடுது பார் ! – டிசம்பர் 2021 37. கவிஞன் ஆவேன் ! – ஜனவரி 2022 38. என்ன செய்யப் போகிறாய் ? – ஜனவரி 2022 39. பார் பார் மெட்ரோ பார் ! – பிப்ரவரி 2022 40. நேதாஜி ! நேதாஜி ! – பிப்ரவரி 2022 41. என்ன மரம் ! – மார்ச் 2022 42. சைக்கிள் ! – மார்ச் 2022 43. காந்தி தாத்தா – ஏப்ரல் 2022 44. சிறகுகள் இருந்தால்…… – ஏப்ரல் 2022 45. தோட்டத்தில் காய்கறி – மே 2022 46. இந்தியாவும் தமிழ்நாடும் ! – மே 2022 47. மழை வருது ! – ஜூன் 2022 48. சுற்றிப் பார்க்கலாமா ? – ஜூன் 2022
திருப்பனந்தாள் ஸ்ரீகாசிமடத்தில் ஆண்டுதோறும் குமரகுருபர சுவாமிகளுக்கு விழா எடுப்பார்கள். 1937- ஆம்ஆண்டு நடைபெற்ற விழாவிற்கு உ.வே.சா போயிருந்தார்.
அந்தமடத்தில் மாடுகளைப் பாதுகாத்துப் பராமரிக்க ஓர் இடையனை நியமித்திருந்தனர். மாடுகளைப்பற்றித் தான்அறியாதவற்றை அறிந்து கொள்ளலாம் என்று அவனிடம் உ.வே.சா பேச்சுக்கொடுத்தார்.
அவன் மாடுகளின் வகைகள், மாடுகளைப் பிடிக்கும் முறைகள், சுருக்குப்போட்டுக் காளைகளை அடக்குதல், ஆகியனவற்றைக் கூறினான். பிறகு மாடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டுபோவதைப் பற்றிப் பேச்சு திரும்பியது.
அவன், “ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்குக் காட்டுப்புறங்களுக்கு ஓட்டிக்கொண்டு போவோம். ஆடுகள் தின்ன மரக்கிளைகளை வெட்டுவோம். அப்படி வெட்டுகையில் கிளை முழுவதும் துண்டித்து விழாமல் முறிந்து தொங்கும்படி வெட்டுவோம். ஆடுகள் அதில் முன்னங்காலை வைத்துக்கொண்டு தழைகளைத் தின்னும்” என்றான்.
”ஏன் அடியோடு வெட்டிப் போட்டால் என்ன?” என்று கேட்டார் உ.வே.சா.
”அப்படி வெட்டிவிட்டால் அந்தக்கிளை பிறகு பயன்படாமல் போய்விடும். நாங்கள் வெட்டும் கிளை இன்னும் மரத்தோடு ஒட்டிக்கொண்டிருப்பதால் மறுபடியும் தழைக்கும்” என்று அவன் பதில் கூறினான்.
’இடையன் எறிந்த மரம் முழுவதும் அறாமல் அரைகுறையாக உயிர் வைத்துக்கொண்டிருக்கும்’ எனும் எண்ணம் அவருக்குள் உருவானது.
பட்டென்று அவருக்குத்தாம் முதல்முதல் பதிப்பித்த சீவகசிந்தாமணியின் 1914-ஆம் பாடல் நினைவுக்கு வந்தது.
அந்தப்பாடல் இதுதான்:
”கெடலருங் குரைய கொற்றம் கெடப்பிறந் ததுவுமன்றி
நடலையுளடிகள் வைக நட்புடையவர்கள் நைய
இடைமகன் கொன்ற இன்னாமரத்தினேன் தந்த துன்பக்
கடலகத்தழுந்த வேண்டா களைகவிக் கவலை”
அதில் சீவகன் தன்தாயிடம் “ என்தந்தை மரணமடைந்து யான்பிறந்தேன். நீயும் மனம் வருந்த, நண்பர்களும் மனம் வருந்த இடையன் வெட்டிய இன்னாமரம் போல இருந்தேன்” என்று கூறுகிறான்.
இதற்குநச்சினார்க்கினியர்“உயிருடன் இருந்தேனாய்ப் பகையை வென்றேனும் அல்லேன். உயிரையும் நீத்தேன் அல்லேன்” என்று கருதி ’மரத்தினேன்’ என்று உரை எழுதுகிறார்.
உயிரையும் விடாமல் தொங்கிக் கொண்டிருக்கும் மரக்கிளை வேறு இலக்கியங்களில் வருவதும் அவர்க்குத் தோன்றியது.
பெரியதிருமொழியில் திருமங்கையாழ்வார் ‘இடையன் எறிந்த மரம்’ என்னும் தொடரைப் பயன்படுத்தி உள்ளதை அவர் நினைத்துப் பார்த்தார்.
”படைநின்ற பைந்தாமரை யோடணிநீலம்
மடைநின்ற லரும்வய லாலிமணாளா
இடையன் எறிந்தமரமே ஒத்திராமே
அடைய அருள்வாய் எனக்குன்அருளே”
திருமங்கையாழ்வார் திருவாலித் திருநகரியில் உள்ள பெருமாளை நோக்கி
”ஆலிமணாளனே! நான் இன்னும் உன் அருளைப் பெறவில்லையே எனும் ஏக்கத்தால் மனம் அழிந்தும், பெறுவோம் என்ற நம்பிக்கையால் உயிர் வைத்துக்கொண்டும் இடையன் எறிந்த மரம்போல நிற்கிறேனே” என்கிறார்.
பழமொழி நானூறு என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நூலில் உள்ள ஒரு பாடலும் அவருக்கு நினைவில் தோன்றியது.
”அடையப் பயின்றார்கொல் ஆற்றுவராக் கேட்டால்
உடையதொன் றில்லாமைஒட்டிந்—–படைபெற்[று]
அடைய அமர்த்தகட் பைந்தொடி அஃதால்
இடையன் எறிந்த மரம்.
என்ற பாடலிலும் இடையன் எறிந்த மரம் உவமை கூறியிருப்பதை அவர் எண்ணிப் பார்த்தார்.
உ.வே.சா அந்த இடையனிடம் “அவ்வளவு ஜாக்கிரதையாக வெட்டி விழச் செய்வது கஷ்டமல்லவா?” என்று கேட்டார்.
அவனோ “அது கைப்பழக்கம்; இல்லாவிட்டால் பழமொழி வருமா?” என்று கேட்டான் பதிலுக்கு.
””என்ன பழமொழி?” என்று அவர் கேட்டார்.
”அதாங்க; இடையன் வெட்டு அறாவெட்டு என்ற பழமொழியைத்தான் சொல்கிறேன். என்றான் அவன்.
இந்த நிகழ்வைக் குறிப்பிடும் உ.வே.சா “அந்த உபமானத்தின் கருத்தை ஆயிரம் வார்த்தைகளால் விரித்து உணர்த்தப் புகுவதைவிட
“இடையன் வெட்டு அறாவெட்டு” என்ற சூத்திரத்தை மாத்திரம் சொல்லி நிறுத்தினால் போதும்” என்று எழுதுவது பழமொழிகளின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துகிறது.
என் பையன் கார்த்திக் ‘அம்மா, ப்ரீத்தி, வருண், எனக்கு தஜிகிஸ்தானுக்கு மாற்றலாகி வந்திருக்கிறது’ என்று கூவிக் கொண்டே வந்தான். ‘எதுக்கடா தடிக்கி விழுந்து கொண்டு வருகிறாய்’ என அம்மா வினாவினாள். ‘தடி இல்லைம்மா, தஜிகிஸ்தான் என்று சொன்னேன்’ என்றான். ‘ஆங் அது எங்கே இருக்கு!’ ‘ரஷ்யாம்மா’. ‘இப்ப அங்கே சண்டையாமே! அங்கே ஏன் நீ போகிறாய்’ என்று அப்பாவித்தனமாகக் கேட்டேன் ஆர்மியில் வேலை செய்யும் ஆபிசரிடம். இந்தக் கேள்வியையே பிறகு எல்லோரும் என்னிடம் கேட்டார்கள். கழகஸ்தான், கிர்கிஸ்தான் என்று தெரிந்தவர்களுக்கு இந்த தஜிகிஸ்தான் கொஞ்சம் புதிதாகத்தான் தெரிகிறது. ‘என்னம்மா நீ இப்படி என்னிடம் கேட்கிறாய். மேலும் எத்தனை டெஸ்ட், இன்டர்வியூ, அதற்கப்புறம்தானே வெளிநாட்டு வேலை கிடைத்திருக்கிறது’ என்று என்னை சமாதானப்படுத்தினான். இதற்காக அடிக்கடி டெல்லி சென்று வந்தான். பொங்கல் கழிந்த பின் கிளம்பி விட்டான். நானும், என் மருமகள் ப்ரீத்தி, பேரன் வருண் மூவரும் லீவில் அங்கே சென்றோம். நீங்கள் எத்தனை பேர்கள் அங்கே சென்றிருப்பீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் பார்த்து மகிழ்ந்த தஜிகிஸ்தானைப் பற்றிச் சொல்லவில்லை என்றால் எனது மனம் சங்கடப்படும், உங்களுடையதும்தான்!
சுத்தம், தண்ணீர்: தஜிகிஸ்தான் விமான நிலையம் மிகவும் சிறியது. எப்போதும் போல இறங்கினவுடனே வாஷ்ரூம் செல்லப் போன எங்களை கார்த்திக் தடுத்து விட்டான். சுத்தமான தண்ணீருக்குப் பஞ்சமில்லாத நாட்டில் எந்த இடத்திலும் வாஷ்ரூமில் தண்ணீர் கிடையவே கிடையாது. ஆனால் குளிக்கும் இடத்திலும், வாஷ்பேசினிலும் எங்கேயும், எப்போதும் குளிர் நீரும், சுடு தண்ணீரும் வரும். நாங்கள் ஒரு இராத்திரி ஒரு ஹோட்டலில் தங்கினோம். அங்கும் ரூமீல் தண்ணீர் பாட்டில் வைக்கப்படவில்லை. நல்ல வேளை நாங்கள் எடுத்துக் கொண்டு சென்றோம். இரவில் வீட்டைச் சுத்தப்படுத்துவது போல தினமும் ஒரு லாரியிலிருந்து பைப்பில் தண்ணீர் பீய்ச்சியடிக்க ரோடு பூராவும் சுத்தம் செய்கிறார்கள். எவ்ளோ பெரிய ரோடாக இருந்தாலும் சரி. ஆனால் வாஷ்ரூமில் ஏன் இப்படி, புரியவில்லை, பிடிக்கவில்லை. இந்த ஒன்றைத் தவிர இந்த நாடு பல விதத்திலும் சுவர்கபூமி தான். எல்லா இடமும் சுத்தம், சுத்தம், சுத்தம். அத்தனை சுத்தம். பாலிதீன் அதிகம் உபயோகிக்கும் நாடு. ஆனால் ஒரு பையோ, குப்பையோ எங்கேயும் பார்க்க முடிவதில்லை. அங்கே எப்படி குப்பைகளைக் களைகிறார்கள் என்று இப்போது வரை எங்களுக்குப் புரியவில்லை. அதைத் தெரிந்து கொண்டு எல்லா நாடுகளும் கடைப்பிடித்தால் நன்றாக இருக்கும் அல்லவா!
எங்கும் பசுமை: தண்ணீர் பிரச்சனை இல்லாததால் எல்லா இடமும் பசுமையாக இருக்கிறது. நகரத்திற்கு நடுவிலேயும் மரங்களைப் பார்க்கலாம். இது அதிசயமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது. சென்னையில் கிண்டி ராஜ்பவன் அருகில் இப்படி சில மரங்களைப் பார்க்கலாம். அது கூட இப்போது அழிந்து போகின்றன என்று எனக்குத் தோன்றுகிறது. இவ்வளவு செழிப்பான நாடு வேறு ஏதாவது உண்டா என்று தெரியவில்லை!
பூக்கள்: நிறைய குட்டி குட்டி கலர் கலர் பூக்களுடன் ரோஜாத் தோட்டம். பெரியதாக. ஆனால் வாசமில்லா மலரிது! நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் இரண்டு மரங்கள் அழகாக எங்களை வரவேற்பது போல வளைந்து இருந்தன.
பழ மரங்கள்: அப்பப்பா, நான் ஒன்றும் உலகம் சுற்றும் வாலிபி (வாலிபனது பெண் பால்) அல்ல. ஆனால் நான் இப்போது குறிப்பிடும் மாதிரி ரோடில் சாதாரணமாக கைக்கெட்டும் தூரத்தில் பழங்களைத் தாங்கிய மரங்கள் இருக்குமா என்று தெரிந்தால் தயவு செய்து சொல்லுங்கள். செர்ரி (என்ன இனிப்பு), பச்சை ஆப்பிள், வால்நட், ஆப்ரிகாட், திராட்சை, மல்பெரி (இரண்டு வகை). இவைகளை அப்படியேப் பறித்து சாப்பிடலாம். மே-ஜூனில் எங்கும் செர்ரி. அங்கு இருப்பவர்கள் இந்த செர்ரியை கொதிக்கும் தண்ணீரில் போட்டு வடிகட்டி சர்க்கரை போட்டு குடிக்கிறார்கள். நாங்கள் உடல் நலம் கருதி சர்க்கரை சேர்க்காமல் குடித்தோம். எந்த ஒரு செயற்கை எருவோ, கலரோ சேர்க்காத பழங்கள். கண்ணைப் பறிக்கும் கொத்து கொத்து திராட்சை. இதில் என்ன விசேஷம் என்றால் எல்லோரது வீட்டிலும் இத்தனை மரங்களும் இருக்கின்றன. அவர்கள் வீட்டிற்குப் போனால் அவர்களேத் தயாரித்த நான் என்கிற ரொட்டி, பிரட், கேக் (வித விதமான கேக்குகள்) அப்பறம் இந்தப் பழங்கள் தருகிறார்கள். சில சமயம் அவர்கள் சிறிது சோம்பேறிகளோ என்று எண்ண வைக்கிற அளவிற்கு பெரிய பெரிய தடிமனான நான் (ரொட்டி) செய்கிறார்கள் அல்லது கடையில் வாங்குகிறார்கள் அதோடு இந்த ஜூஸ், ஜாம் என்று தங்களது சாப்பாட்டை முடித்துக் கொள்ளுகிறார்கள். வித விதமான தேன் கிடைக்கிறது. எலுமிச்சைத் தோலில் செய்த ஜாம் எல்லோருக்கும் பிடித்திருந்தது.
உணவு: உணவைப் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டு விட்டேன். இதைத் தவிர சாப்டி என்கிற கோன் ஐஸ்கிரீம் நிறைய சாப்பிடுகிறார்கள். மேலும் இனிப்பு, சாக்லேட் இவைகளுக்கு கணக்கே கிடையாது. யாரையாவது பார்த்தாலோ அல்லது கல்யாணம் சொல்ல, குழந்தை பிறந்தால் என்றோ உடனே கை நிறைய சாக்லேட் தருகிறார்கள். இதனால் இவர்கள் யாருக்கும் எல்லா சொந்தப் பற்களும் இருக்காது. பல்லைத் தட்டி கையில் வைத்திருப்பார்கள் போலும்! ஜகஜகவென்று ஜொலிக்கும் தங்கப் பற்கள்தான். ஆனால் இவர்களுக்கு அதைப் பற்றி கவலை கிடையாது. கடைகளிலும் சாக்லேட் விதவிதமாக குவியல் குவியலாக உள்ளது. எனக்கு அதைப் பார்த்து தலை சுற்றியது. அவைகளை அப்படி பார்க்கும்போது சாப்பிடும் ஆசையே அற்று விட்டது. இன்னொன்று அசைவ உணவு. இங்கு அது சாதாரணம். ஹோட்டலுக்குப் போகும் போது நாங்கள் ஏதாவது எடுத்துக் கொண்டு போய் விடுவோம். பால் சேர்க்காமல் ‘தஜிகி டீ’ என்று அடிக்கடி குடிக்கிறார்கள். இதில் ரோஜா இலை, புதினா என்று சில நல்ல மூலிகைகளையும் சேர்க்கிறார்கள்.
தட்ப வெட்ப நிலை: இத்தனை மரங்கள் இருப்பதாலா, மக்கள் தொகை குறைவாக இருப்பதாலா, சுற்றிலும் மலைகள் சூழ்ந்திருப்பதாலா எப்படியோ அங்கு எப்போதும் ஒரு குளிர்ந்த நிலை இருக்கிறது. பென்சிலால் படம் வரைந்த மாதிரி மலைகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றன. இதனால் எந்த நேரமும் காலாற நடக்க ஆசையாக இருக்கும்.
பூகம்பம்: நில நடுக்கம் அடிக்கடி ஏற்படும் நாடு இது. ஜூன் 2 ஆம் தேதி பதினொன்று மணிக்கு நாங்கள் எல்லோரும் படுத்த பிறகு தட தடவென்று கட்டில் அடியில் சப்தம். பயந்து வெளியில் வந்து பார்த்தால் 5.38 ரிக்டர் அளவில் நில நடுக்கம் என்று தெரிந்தது. அப்பப்பா இப்போது நினைத்தாலும் குலை நடுங்குகிறது.
வாகனங்கள்: மக்கள் தொகை குறைவாக இருப்பதாலும், பஸ், கார், சைக்கிள் மட்டும் தான் இருப்பதாலும், அதுவும் சீராகச் செல்வதாலும், அவற்றின் இயங்கும் சப்தமோ, ஹார்ன் சப்தமோ இல்லாததாலும், மக்களது, வாகனங்களது அடர்த்தியான கூட்டம் இல்லாததாலும் மிகவும் அமைதியான நாடாக இருக்கிறது. வாழ்க்கை முறை மிகவும் எளிமையாக இருக்கிறது. பணக்காரான நாடாக இல்லாவிட்டாலும் அவசியம் கருதி எல்லோரிடமும் கார் இருக்கிறது. மொத்தமாக வியாபாரம் நடக்கும் இடங்களுக்கு காரில் வந்து டிக்கி முழுவதும் சாமான்களை வாங்கிச் செல்வது சர்வ சாதாரண நிகழ்ச்சியாகும்.
மனிதர்கள்: இத்தனை சர்க்கரை சாப்பிடுவதால் பற்கள் கெட்டுப் போகலாம். ஆனால் மனிதர்களது உடம்பும், மனசும் மிகவும் மென்மையானது. சிவந்த மென்மைத் தோல், நல்ல உள்ளம். பயமில்லாமல் இரவில் வெளியில் செல்ல முடியும். எந்த நாட்டில் பெண்கள் இரவில் சுதந்திரமாகச் செல்ல முடியுமோ அது தான் நன்நாடு, அது இந்த நாடு. தெரியாதவர்களாக இருந்தாலும் வணக்கம் சொல்லுகிறார்கள். சிரித்த முகத்துடன் கை ஆட்டுவார்கள். இந்திய நாட்டு மக்களை மிகவும் மரியாதையாக நடத்துவார்கள்.
மின்சாரமும், விளக்குகளும்: இரவில் சுதந்திரமாகச் செல்ல இன்னொரு காரணமும் உண்டு. மின்சாரம் தேவைக்கு மேல் உற்பத்தி செய்வதால் இரவில் எங்கு நோக்கினும் வண்ண வண்ண கலரிலும், டிசைனிலும் விளக்குகள் எரிகின்றன. சில இடங்களில் நடை பாதைகளில் கல்யாணத்திற்குப் பந்தல் போட்ட மாதிரி இரு பக்கமும் விளக்குகள் எரிகின்றன. அதன் நடுவில் நடந்து செல்வதே ஒரு தனி ஆனந்தம். அதனால் இந்த நாடு தூங்கா நாடாக இருக்கிறது. ஆம், இரவு எத்தனை மணி ஆனாலும் மக்கள் வெளியில் வந்து குழந்தைகளை விளையாட விட்டு தாமும் உலாவி விட்டுச் செல்கின்றனர். எலெக்ட்ரிக் சைக்கிள் வாடகைக்கு எடுத்து ஓட்டுகின்றனர், நடை பயிற்சி செய்கின்றனர்.
முக்கிய இடங்கள்: சோமானி ஸ்குயர் மிகவும் முக்கியமான இடம் (இந்த இடத்தில் அமெரிக்காவிலுள்ள லிபெர்டி சிலை மாதிரி ஒரு சிலை இருக்கிறது). இந்த இடத்தில் ஒரு தியேட்டரும் இருக்கிறது. அங்கே கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். ம்யூசியம், லேக் என்று பொழுதுபோக்கு இடங்கள் நிறைய இருக்கின்றன. இங்கெல்லாம் இரவில் வண்ண விளக்குகளின் அடியில் நடை பயிலுவது மனத்திற்கு ரம்யமாக இருக்கும். மொத்த வியாபாரம் நடக்கும் இடங்களும் நான்கு ஐந்து இருக்கின்றன. எல்லா இடத்திலேயும் பிரெஸிடெண்ட் சிலை இருக்கின்றன. அவர்கள் அவரைக் கடவுளாகப் பார்க்கின்றனர். நிறைய இடங்களில் அவரது உருவப்படங்கள் பெரியதாக வைக்கப்பட்டுள்ளன.
ஆப்பாக்களும், ஆக்காக்களும்: நாங்கள் விமான நிலையத்தில் இறங்கியவுடன் கார்த்திக் காரில் எங்களை அழைத்துச் செல்லும்போது டிரைவரை ‘ஆக்கா’ என்று விளித்துக் கொண்டே வந்தான். இதென்னது இவரை ‘அக்கா’ என்று நீட்டிக் கூப்பிடுகிறானே என்று யோசித்தோம். எங்கள் இடத்துக்குப் போனவுடன் ‘அம்மா இங்கே வேலை செய்யும் ‘ஆப்பாக்கள்’ உங்களைப் பார்க்க வந்திருக்கின்றனர்’ என்றான். சரி வேலை செய்பவர்களை ‘ஆப்பா’ என்று சொல்கிறான் என்று நினைத்தேன். பிறகுதான் புரிந்தது எல்லா ஆண்களையும் ‘ஆக்கா’ என்றும் எல்லா பெண்களையும் ‘ஆப்பா’ என்றும் எல்லோரும் எல்லா இடத்திலும் கூப்பிடுகிறார்கள் என்று. இனம் மாறி விட்டதோ!
நாணயம்: இங்கு உபயோகப்படுத்தப்படும் நாணயம் “சோமானி”. 1 சோமானி சுமார் 7 ரூபாயாகும். மொத்த வியாபார கடைகளில் நன்கு பேரம் பேசி வாங்கலாம். அவர்களும் இந்தியர்கள், சுற்றுல்லாப் பயணி, நிறைய வாங்குபவர்கள் என்று குறைத்துக் கொடுப்பார்கள்.
மொழியும் முழியும்: அங்கு பேசும் மொழி தஜிகி. நமக்கு அது புரியாது. ருஷ்ஷியனும் பேசுவார்கள். தஜிகி மொழியில் ஒன்று இரண்டு வார்த்தைகள் கற்றுக் கொண்டு நாங்கள் கடைக்குச் செல்லுவோம். ஒரு முறை கார்த்தியும், ப்ரீத்தியும் வருணுக்கு டிராயிங் பேப்பர் வாங்கச் சென்றனர். வரைந்து காட்டி, கோடு போட்டுக் காட்டியும் டிராயிங் பேப்பரைப் புரிய வைக்க முடியவில்லை. அது எங்கும் கண்ணில் தட்டுப் படாததால் வாங்க மிகவும் கஷ்டப்பட்டனர். கடைசியில் ஒரு கடையில் அதைப் பார்த்து எடுத்த போது கடைக்காரன் ‘நீங்கள் முதலிலேயே வெள்ளைப் பேப்பர் என்று சொல்லியிருக்கலாமே’ என்ற போது அழுகையும் சிரிப்பும் கலந்து வந்தது.
படிப்பு: தஜிகிஸ்தானில் மருத்துவ படிப்பதற்கான கல்லூரி உள்ளது. இது நல்ல தரமான கல்வியை குறைந்த செலவில் தருகிறது. கேரளா, தமிழ் நாடு, ஆந்திரா ஆகிய இடங்களிலிருந்து மாணவர்கள் சென்று படிக்கிறார்கள். டெல்லியிலிருந்து தஜிகிஸ்தான் செல்ல நேர் விமான சேவை இல்லாத நேரங்களில் துபாய், கத்தார் வழியாகச் செல்லலாம்.
ரசித்தல்: அதீத பகட்டோ, ஆடம்பரமோ, மாட மாளிகையோ இல்லாமல் எளிய வாழ்க்கையை வாழும் இவர்கள் அதனை ரசிக்கிறார்கள். ஆபரணங்களும் அதிகம் இல்லை. சாதாரணமான ஒன்று இரண்டு அணிகலங்கள்தான். இவர்களது காதல் இனிப்பு மேல் தான். இரவிலும் குடும்பத்தோடு வெளியில் சென்று பொழுதைக் கழிக்கின்றனர்.
வெளி நாடுகளுக்குச் செல்பவர்கள் இந்த தஜிகிஸ்தானையும் தங்களது பட்டியலில் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். அந்த மென்மையான குளிர்ந்த சூழல், ஆடம்பரமில்லாத அமைதியான, சுத்தமான சூழ்நிலை, கள்ளங் கபடமற்ற மென்மையான சாதாரணமான மனிதர்கள், மனித நேயங்கள், சுத்தமான சுற்றுப்புரம், பச்சைப்பசலேன்ற சுவையும் சுகாதாருமுமான கனி தரும் மரங்கள், படம் வரைந்தாற் போல மலைகள் இவை எல்லாவற்றையும் கொண்ட தஜிகிஸ்தானை விட்டு வர மனமே இல்லை.
லீவு முடிந்து விட்டது. திரும்ப வர வேண்டுமே! வாழ்க்கை இங்கேதானே! தாய் நாட்டை மறக்க, மறுக்க முடியுமா!
பள்ளிக்கூட நாட்களில் வெள்ளிக்கிழமையோ, புதன்கிழமையோ மதியம் உண்ட களைப்பு தீர, ‘மாரல் சயின்ஸ்’ பீரியட் ஒன்று இருக்கும். அந்த வயதில், கதையில் இருக்கும் சுவாரஸ்யம் அது சொல்லும் நீதி போதனையில் இருக்காது!
சாதிகள் இல்லையடி பாப்பா, எம்மதமும் சம்மதம், ஆள்பவன் நீதி வழுவாமல் இருக்க வேண்டும், அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், ஆலயம் தொழுவது சாலவும் நன்று போன்ற அறிவுரைகளை சிறு கதைகள் மூலம் சொல்லிக்கொடுத்தார்கள்! கற்றுக்கொண்டவர்களுக்கு இப்போது வயது அறுபதைத் தாண்டியிருக்கும் – பின்னாட்களில் வந்த தலைமுறைக்கு நீதிபோதனைகள் அவசியம் இல்லை என முடிவு செய்து, அந்த வகுப்புகளையே தூக்கி விட்டார்கள்! இழப்பு குழந்தைகளுக்குத்தான். நல்ல சிறுகதைகளைக் கேட்பதும், அதனால் உந்தப்பட்டு, பின்னர் நல்ல புத்தகங்களை வாசிப்பதும் வழக்கொழிந்து விட்டன. சிரிப்புடனும், சிந்தனையுடனும் வளர்ந்த குழந்தைகள், இன்று அந்த வாய்ப்பே இல்லாமல் கையில் செல்லுடனும், பையில் ‘லாப் டாப்’ உடனும் சுற்றி வருகின்றன!
குட்டிக் கதைகள் வாசிப்பது எப்போதுமே சுவாரஸ்யமானது. ஶ்ரீராமகிருஷ்ணர் சொன்ன கதைகள், தெனாலிராமன் கதைகள், முல்லாவின் கதைகள், ஜென் தத்துவக் கதைகள், தென்கச்சி வழங்கும் நீதிக் கதைகள், நாடோடிக் கதைகள், சின்ன அண்ணாமலை சிரிப்புக் கதைகள், தேவனின் சின்னஞ்சிறு சிறுகதைகள் இப்படித் தமிழ் மொழியில் ஏராளமான கதைத் தொகுப்புகள் காணக் கிடைக்கின்றன. தாத்தா, பாட்டிகளுக்கும், பெற்றோருக்கும் வீட்டில் குழந்தைகளுடன் கதைக்க நேரமில்லை. குறைந்த் பட்சம், இப்படிப்பட்ட புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தையாவது ஏற்படுத்த முயற்சிக்கலாம் என்று தோன்றுகின்றது.
சில குட்டிக் கதைகளைப் பார்க்கலாம்!
வாழ்க்கையில் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த ஏழை பக்தர் ஒருவர், இறைவனுடன் நேரில் பேசும் ஒரு பெரியவரிடம், “எனக்கு ஏன் கஷ்டத்திற்கு மேல் கஷ்டமாகக் கொடுக்கிறார் கடவுள்? நேற்று என்னுடைய சிறிய குடிசையும் இடிந்து விழுந்துவிட்டது. இப்போது தங்குவதற்குக் கூட இடமில்லை. நான் என்ன தவறு செய்தேன்?” என்று இறைவனிடம் கேட்டுச் சொல்லச் சொல்கிறார். இதைக் கேட்ட இறைவன், பெரியவரிடம், ‘எனக்கு ஒரு செங்கல் கொண்டுவந்து தரவேண்டும்’ என்கிறார். பெரியவரும் பக்கத்து ஊர் சென்று, நல்ல கட்டடங்களை விட்டு, இடிந்து போய் விழுகின்ற நிலையில் இருக்கும் ஒரு கட்டடத்திலிருந்து ஒரு செங்கல்லை எடுத்து வருகிறார். இறைவன், ‘ஏன் அங்கிருந்த நல்ல கட்டடங்களில் இருந்து எடுக்கவில்லை?’ என்று கேட்கிறார். அதற்குப் பெரியவர், ‘அந்தக் கட்டடங்கள் நல்ல நிலையில் உள்ளன. இடிந்த வீட்டிலிருந்து எடுத்தது நல்லதாகப் போயிற்று. இப்போது அங்கே ஒரு புதிய வீடு கட்டுவார்கள்’ என்கிறார். அப்போது இறைவன், “அந்த பக்தனுக்கு அதிகமான கஷ்டங்களைக் கொடுத்ததும் இதற்காகத்தான். அவனுக்கு வைராக்கியம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகத்தான்” என்று சொல்கிறார்.
“துன்பத்தைக் கண்டு துவளக் கூடாது. துன்பங்கள் மனிதனைப் பக்குவப் படுத்துகின்றன” என்ற கருத்தை வலியுறுத்தும் கதை இது!
(தென்கச்சி வழங்கும் நீதிக்கதைகள் – தொகுதி – 1. வானதி பதிப்பகம்).
அதில் ஒரு கதை
மலிவான விலையில் கழுதை!
ஒவ்வொரு வாரமும் ஒரு கழுதையை சந்தையில் மிகக் குறைந்த விலைக்கே விற்கிறார் முல்லா. வழக்கமாக உடன் வரும் கழுதை வியாபாரி, “முல்லா, நான் கழுதைக்கு வேண்டிய தீவனத்தைத் திருடிக்கொண்டு வந்து போடுகிறேன். ஆனாலும் நீ விற்கும் குறைந்த விலைக்கு என்னால் விற்க முடியவில்லையே? அது உனக்கு மட்டும் எப்படி சாத்தியமாகிறது?” என்று கேட்கிறான். அதற்கு முல்லா, “ப்பு… இது ரொம்ப சுலபம். நீ தீவனப் பொருளை மட்டும்தான் திருடுகிறாய். நான் கழுதையையே திருடிக்கொண்டு வருகிறேன். அதனால்தான் என்னால் உன்னைவிட மலிவான விலைக்கு விற்க முடிகிறது!” என்றார்! (சிந்திக்க, சிரிக்க முல்லாவின் கதைகள் – நர்மதா பதிப்பகம்)
கிணற்றுத் தவளை.
கிணற்றிலேயே பிறந்து, அங்கேயே வளர்ந்த ஒரு தவளை, நீண்ட காலமாக வாழ்ந்து வந்தது. சமுத்திரத்தில் வாழ்ந்த வேறொரு புதிய தவளை ஒன்று அந்தக் கிணற்றில் வந்து குதித்தது.
தன் கால்களை அகல நீட்டி, “நீ சொல்லும் சமுத்திரம் இவ்வளவு பெரியதாக இருக்குமோ?” என்றது.
“அது இன்னமும் எவ்வளவோ பெரியது” – கடல் தவளை.
இதைக் கேட்ட கிணற்றுத் தவளை, கிணற்றினுள் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்குத் தாண்டிக் குதித்து,”உன் கடல் இவ்வளவு பெரியதாக இருக்குமா?” என்றது.
“நண்பா! கிணற்றைக் கடலுக்கு எப்படி ஒப்பிட முடியும்?” என்றது கடல் தவளை.
இதை நம்பாத கிணற்றுத் தவளை, “இப்படி இருப்பதற்கு எந்தக் காலத்திலும் வழியில்லை. என் கிணற்றைக் காட்டிலும் பெரியது ஒன்று ஏது? இவன் பொய்யன். இவனை இங்கிருந்து விரட்டிவிட வேண்டும்” என்று நினைத்ததாம்!
விரிந்த நோக்கம் இல்லாதவனின் விஷயமும் இப்படிப்பட்டதுதான். அவன் தனது கருத்தோ, அனுபூதியோ சிறந்ததென்றும், அதைவிடவும் சிறந்த கருத்தோ, அனுபூதியோ இருக்க முடியாது என்றும் நினைக்கின்றான்!
(ஶ்ரீராமகிருஷ்ணர் சொன்ன கதைகள் – ஶ்ரீராமகிருஷ்ணா மடம், சென்னை – 600004).
அந்தக் கதைகள் காட்டும் வாழ்வின் நிதர்சனங்கள் சுவாரஸ்யமானவை – பின்பற்றத் தக்கவை!
குவிகம் ஒலிச்சித்திரம் என்ற புதிய பகுதியை மே ஒன்றாம் தேதி முதல் துவங்கியுள்ளோம் ! அவற்றை உங்களுக்காகக் கீழே தந்துள்ளோம்.
கேட்டு ரசித்து உங்கள் கருத்துகளை எழுதுங்கள்! ஒவ்வொரு வாரமும் ஞாயிறு மாலை 6.15 மணிக்குக் குவிகம் நிகழ்வில் வெளியிடப்படும்.
spotify இல் குவிகம் ஒலிச்சித்திரம் என்று தேடினால் எல்லா எபிசோட்களும் உங்களுக்குக் கேட்கக் கிடைக்கும்
நீங்களும் இதில் பங்கு பெறலாம் ! உங்கள் குரலில் நல்ல ஆடியோ தரத்துடன் 4 நிமிடத்துக்குள் உங்கள் கதை/கவிதை/தகவல் போன்றவற்றை ஒலிப்பதிவு செய்து kuvikampodcast@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.
வாட்ஸ் அப்பில் 9442525191 என்ற எண்ணுக்கும் அனுப்பலாம்.
நீங்கள் மிகவும் சுவைத்துப் படித்த கேள்வி-பதில் பகுதி எந்தப் பத்திரிகையில் வந்தது ? ஏன்?
”கல்கண்டு” என்ற பத்திரிகையில் அதன் ஆசிரியர் தமிழ்வாணனின் “கேள்வி-பதில்” பகுதிதான் நான் சிறு வயதிலிருந்தே சுவைத்துப் படித்தது. அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் , முக்கியமான காரணம் அப்பகுதியில் எதைப்பற்றிய கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம். பதில் கிடைக்கும். வரலாறு, இலக்கியம், அறிவியல் , ஆன்மீகம், மருத்துவம், சுயமுன்னேற்றம், கவுன்சலிங் என்று பலவிதமான கேள்விகள் வரும் . அவற்றிற்கு அவர் பதில் சொல்லும் பாங்கே தனி அழகு.
உதாரணத்திற்கு ஒன்று –
கேள்வி : ஐயா ! எனது இடது கையில் ஆறு விரல்கள் உள்ளன. நான் ஆபரேஷன் செய்து கொள்ளலாமா?
ஆபரேஷன் செய்து கொள்ளலாம். ஆனால் அதற்கு முன் ஒருமுறை எண்ணிப்பார்க்கவும்.
2.கீர்த்திவாசன் – பெருங்களத்தூர்.
இராயப்பேட்டை முனிவர் என யாரைச் சொல்கிறார்கள் ?
திரு.வி.க. அவர்களுக்கே இப்பெயர் உரியது.
இல்லறத்தார் நல்லறம் காட்டும் தன் தலைவர் என்றனர். பெண்கள் எங்கள் அரண் – காப்பு என்றனர். துறவோர் எங்கள் ராயப்பேட்டை முனிவர் என்றனர். “ இப்படி எல்லாரும் ஒரே முகமாகப்போற்றப் பெற்ற ஒரு மனிதரை இதுவரை நாம் கண்டதில்லை. இனியும் காண்போமா என்பதும் தெரியவில்லை.
இன்னும் எத்தனையோ நினைவுகள் என் முன் வருகின்றன. இராஜாஜி, சீனிவாச ஐயங்கார் போன்ற தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள், திலகர், காந்தி போன்ற வடநாட்டு அரசியல் தலைவர்கள், ஞானியார், கதிர்வேற் பிள்ளை போன்ற சமயத் தலைவர்கள், அறிவறிந்த தமிழ்ப் புலவர்கள். சைவ, வைணவ, கிறிஸ்தவ, இஸ்லாமிய, பெளத்த, சமணத் தலைவர்கள், வாடியா போன்ற தொழிலாளர், அன்னிபெசன்ட், அசலாம்பிகையார் போன்ற பெண் தலைவர்கள் நாள்தோறும் அவரை நாடியும் தேடியும் வந்தும், கண்டும், கேட்டும், உணர்ந்தும், உணர்த்தியும், வாழ்ந்து காட்டியும் அவருடன் நின்ற நிகழ்ச்சிகள் பல. குள்ளச் சாமியார் என்ற (சண்முகானந்தா) துறவியார் கடைசிக்காலத்தில் அவருடன் கூடவே இருந்தனர். அவர்களுடன் பழகிய நிகழ்ச்சிகள்-பேசிய பேச்சுக்கள்-செயல்கள் பலவற்றை அவரே தம் வாழ்க்கைக் குறிப்பில் காட்டியுள்ளார், காட்டாதன பல.
இவ்வாறு எல்லாரும் எல்லா வகையிலும் போற்றப் பெற்ற வகையில் வாழ்ந்த இராயப்பேட்டை முனிவர் திரு. வி. கலியாண சுந்தரனாருக்கு நாம் நிலைத்த நினைவாலயம் எடுக்கக் கடமைப்பட்டுள்ளோம். ” என்று டாக்டர் மு.வ. குறிப்பிடுகின்றார்.
3.திவ்யா ,சென்னை
தமிழிசைக்கும் இசைத் தமிழுக்கும் வேறுபாடு உண்டா ? இல்லை இரண்டும் ஒரே பொருளைத் தருகிறதா?
இரண்டும் ஒன்றல்ல. தமிழிலே பாடப்படும் எல்லாப் பாடல்களும் தமிழிசை. கர்நாடக , ஹிந்துஸ்தானி ராகங்களில் தமிழில் பாடினால் அது தமிழிசைதான். ஆனால் எப்படி இசைக்க வேண்டும் என்ற இலக்கணத்தைக் கூறும் தமிழ், இசைத்தமிழ். அது மூவகைத் தமிழான இயற்றமிழ், இசைத்தமிழ் , நாடகத்தமிழ் ஆகியவற்றுள் ஒன்று. இசைத்தமிழ் பண் அதன் விரிவு, என்று இசையின் பல கூறுகளைக் கூறுவது. சங்க இலக்கியம் முதல் இவை பற்றிய செய்திகள் பல நூல்களில் உள்ளன. ஆனால் தமிழிசை பற்றி மிகுதியாகக் கூறும் நூல் சிலப்பதிகாரம். சென்ற நூற்றாண்டில் சுவாமி விபுலானந்தரால் படைக்கப்பெற்ற “யாழ் நூல்” தமிழிசை பற்றிய பல தகவல்களைத் தருகின்றது.
“செம்பருத்தி”துரைராஜ்.
வடமொழியிலோ, மற்ற பிற இந்திய மொழிகளிலோ உள்ளதுபோல், க, ச, ட, த, ப எழுத்துக்களுக்கு நான்கு வகைப்பாட்டில் இல்லாமல் ஒரே எழுத்தக இருப்பது சிறப்பானதா, அல்லது சங்கடமானதா?
இதிலே சிறப்பும் ஏதும் இல்லை. தமிழ்ச் சொற்களை ஒலிக்க நான்கு வகைப்பாட்டியல் தேவையில்லை. எனினும் வடமொழிச் சொற்களைத் தமிழில் ஏற்றுக்கொண்டு எழுதும் போது அவை நிச்சயம் தேவைப்படுகிறது. இந்த சிக்கல் பற்றி. மகாகவி பாரதியார் கட்டுரையே எழுதியுள்ளார்.
“தமிழில் எழுத்துக் குறை”, தமிழ் பாஷைக்கு உள்ள குறைகள்” என்று இரண்டு கட்டுரைகள் பாரதியார் எழுதியுள்ளார். இவற்றைத் தேடிக் கண்டுபிடித்து “கலைமகள்” பத்திரிகையில் வெளியிட ( பிப்ரவரி 1941) உதவியவர் பாரதி அன்பர் திரு வி.ஜி, சீநிவாசன்.
பிறமொழிச் சொற்களை உச்சரிக்க தாம் கண்டுபிடித்திருக்கும் குறிப்பு முறையைப் பற்றி இக்கட்டுரைகளில் பாரதியார் பிரஸ்தாபிக்கிறார். ஆனால் அவரது குறிப்புமுறை எங்கும் வெளியிடப் படாததால் நமக்குக் கிடைக்காமல் போய்விட்டது நமது துரதிர்ஷ்டமாகும் என்று பாரதி அறிஞர் ரா.அ. பத்மநாபன் குறிப்பிட்டுள்ளார்.
5.ராஜா திருப்பூர்
கிருஷ்னணைக் கண்ணன் என்று கூறுகிறோம். கண்ணன் என்ற இந்தப் பெயர் எந்த இலக்கியத்தில்முதன்முதலாக வந்தது?
சங்க காலத்திலிருந்தே கண்ணன் வழிபாடு தமிழ்நாட்டில் இருந்துள்ளது.. முல்லைத் திணையின் கடவுளான தெய்வம் மாயோன் என்று அறிகிறோம்.
சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர்குரவை பகுதியில் கண்ணனின் பல லீலைகள் பற்றிப் பாடுகிறார் இளங்கோ அடிகள்.
.நப்பின்னைப் பிராட்டித் திருமணம், கண்ணன் குருந்தொசித்தது, குடக்கூத்தாடியது, ததிபாண்டனுக்கு வீடளித்தது போன்ற வரலாறுகள் வடமொழி இலக்கியங்களில் காணமுடியாது – சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, பழமொழி, ஆழ்வார் அருளிச் செயல்கள், பிள்ளைப் பெருமாள் அய்யங்காரின் அஷ்டப்ரபந்தம் அகியவற்றில் உண்டு.
எந்த இலக்கியத்தில் கண்ணன் என்ற சொல் முதலில் வந்தது என்ற ஆய்வுகள் பற்றி நானறியேன். ஆனால் என்னைப் போன்ற பலர் கண்ணன் என்ற சொல்லை முதலில் அனுபவித்தது ஆழ்வார் திருப்பாசுரங்களில்தான்.
”ஆழிமழைக் கண்ணா” என்று மார்கழிமாதக் காலையில் ஆண்டாள் பாசுரத்தை எம்.எல்.வி குரலில் கேட்டதுதான் முதலில் நானறிந்த இலக்கியக் கண்ணன்.
6.சந்திரசேகர் பாஸ்டன்
பாரதியாரின் செந்தமிழ் நாடென்னும் போதினிலே என்ற பாடல் ஒரு போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றதுஎன்ற ஒரு செய்தி உலவி வருகிறது ! இது உண்மையா?
பாடல் எழுந்த வரலாறு பற்றிப் பலர் பலவிதமாகக் கூறுகிறார்கள்.. பாவேந்தர் பாரதிதாசன் மதுரை தமிழ்ச்சங்கத் தலைவர் பாண்டித்துரைத் தேவரின் வேண்டுகோளின் படி நடத்தப்பட்ட போட்டியில் பாரதியாரை எழுதச் சொல்லித் தானும் நண்பர்களும் வற்புறுத்தியதாகவும், பாரதியார் முதலில் அப்போட்டியில் கலந்துகொள்ள ஒப்புக்கொள்ளவில்லை என்றும் பிறகு தங்களின் வற்புறுத்தலால் எழுதினார் என்றும் எழுதியிருக்கிறார்.
பாரதியின் நண்பர் மண்டயம் சீனிவாசாச்சர்யாரின் புதல்வி யதுகிரி அம்மாள் எழுதிய ‘பாரதி நினைவுகள்’ என்னும் புத்தகத்தில் சென்னத் தமிழ்ச்சங்கம் ஒன்று போட்டியை நடத்தியதாகவும் பாரதியின் பாடலுக்கு மூன்றாம் பரிசு கிடைத்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.
ஆனால் பாரதியைப் போட்டியில் கலந்துகொள்ளச் சொல்லிக் கடிதம் எழுதிய டாக்டர் நாவலர் சோமசுந்தர பாரதியும், போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்ற தமிழறிஞர் அ. மாதவய்யாவும் வேறுவிதமாகச் சொல்கிறார்கள். இரண்டு பேரும் குறிப்பிடுவது ஒன்றே என்பதால் இதையே சரியானதாகக் கருத வாய்ப்புகள் அதிகம். சோமசுந்தபாரதியா பாரதியின் தம்பி விஸ்வநாtதய்யருக்கு 7-3-1944ல் எழுதிய கடிதத்தில் இதைப் பற்றி விளக்கமாக எழுதியிருக்கிறார்.
‘தமிழ் இளைஞர்களுக்கு தேசபக்தியூட்டும் சிறந்த தேசியப் பாடல்களுக்கு இரண்டு பரிசுகள் வழங்கப் போவதாகத் தூத்துக்குடியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் திரு எஸ் வி விசுவநாத ஐயர் பத்திரிகைகளில் விளம்பரம் செய்தார். நாவலர் சோமசுந்தரம் பாரதிக்கு விஸ்வநாதய்யர் ஒரு கடிதம் எழுதி அவருக்குத் தெரிந்த நண்பர்களுக்குத் தெரிவித்துப் போட்டியில் கலந்துகொள்ளுமாறு எழுதும் படி வேண்டினார். அதன்படி சோமசுந்ததர் பாரதி பாரதிக்கும் விவேக பாநு அசிரியர் கந்தசாமிக் கவிராயர்க்கும் கடிதம் எழுதினார். நாவலரின் வேண்டுகோளின் படி பாரதி செந்தமிழ் நாடெனும் போதினிலே என்னும் பாடலை எழுதிப் போட்டிக்கு அனுப்பி வைத்தார்.
போட்டியை விடுங்கள் . பாரதி மறைந்து நூறு ஆண்டுகள் பின்னும் நிற்கும் அப்பாடல் அழியா வரம் பெற்ற பாடலன்றோ!
சுந்தரராஜன் சியேட்டில் சென்னைகோவில்களில் உங்களை மிகவும் ஈர்த்த கோவில் எது?
நான் தி.நகர் எனப்படும் சென்னை மாம்பலம் பகுதியில் பிறந்து வளர்ந்தவன். எங்கள் வீட்டின் அருகே கிரிபித் ரோடில் ( தற்போது மகாராஜபுரம் சந்தானம் சாலை) உள்ள முப்பாத்தம்மன் ஆலயம்தான் என்னை இளவயதிலிருந்தே கவர்ந்த ஆலயம்.. நான் மாம்பலத்தில் வசிக்கின்ற காலம் வரை தினம் அக்கோவிலுக்குச் செல்வேன். பள்ளிக் காலத்தில் தேர்வு நேரங்களில் அம்மனை அருளை நம்பித்தான் எங்கள் மதிப்பெண்கள் இருந்தன. கோவிலிலும் மாணவ மாணவியர் கூட்டம் அலைமோதும்.
அந்தக் கோவில் பிராகாரத்தைச் சுற்றிவரும் போது நான் எழுதிய பாடல்களை “முப்பாத்தம்மன் பதிகம்” என்ற சிறுநூலாக 1972-ல் வெளியிட்டேன். அதுதான் என் முதல் கவிதை நூல்.
ராமமூர்த்திலாஸ்ஏஞ்சலிஸ்
தனித்தமிழ் இயக்கத்தைப் பற்றி உங்கள் கருத்து?
டோட்டல் வேஸ்ட்.. எந்த மொழியும் தனித்தியங்க முடியாது என்பது உலக வரலாறு. தனித்தமிழ் வேண்டும் என்று சொன்ன மறைமலையடிகள் உரைநடையைப் படிப்பது கடினம்.
தனித்தமிழ் மோகத்தில் அக்காலத்தில் ஜி.யூ. போப் போன்றவர்கள் செய்துள்ள மொழிபெயர்ப்பை தமிழ் வளர்த்த சான்றோருள் ஒருவரான பி.ஸ்ரீ. அவர்கள் தனது நூலில் கடுமையாகச் சாடியுள்ளார். பிரிட்டனில் உள்ள “காண்டர்பரி” என்ற இடத்தை “கந்தர்புரி” என்று போப் எழுதியுள்ளதைச் சுட்டிக்காட்டி , இது போன்ற தனித்தமிழ் பித்து தேவையில்லை. பிறமொழி உச்சரிப்பை பொருத்தமான எழுத்துக் குறியீடுகளோடு தமிழில் பயன்படுத்தவேண்டும் என்பதே அவர் கருத்து.
சந்திரமோகன்சென்னை
கம்ப ராமாயணம் போல வில்லி பாரதம் அதிகம் பிரபலமாகவில்லையே! ஏன்?
ஒரு கவிச்சக்கரவர்த்தியோடு வேறு யாரையும் ஒப்பிட முடியாது. கம்பனுக்கு நிகர் கம்பனே
மேலும் . கம்பன் அடிப்பொடி சா. கணேசன் 1939ஏப்ரல் 2, 3 ஆகிய நாள்களில் இரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியார் தலைமையில் காரைக்குடியில் கம்பன் விழாவை நடத்தி, கம்பன் கழகத்தைத் தொடங்கினார். அதுபோல் தமிழகம் எங்கும் கம்பன் கழகம் பல்வேறு ஊர்களில் பலரால் தொடங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான கம்பன் இரசிகர்களை அது உருவாக்கியது. கம்பன் புகழ் காட்டுத்தீயாய்ப் பரவியது.
வில்லிப்புத்தூரார்க்கோ அல்லது அவர் படைத்த பாரதத்திற்கோ இது போன்ற வாய்ப்பு அமையவில்லை. ஆனால் நாட்டுப்புறப் பாடல்களிலும் கூத்துகளிலும் பாரதம் பெரும் வரவேற்பைப் பெற்றது. எனவேதான் எளிய மக்களுக்காக எழுதிய பாரதி “பாஞ்சாலி சபதம்” படைத்தான். இன்றும் புத்தாண்டில் கோவில்களில் புது வருஷப் பஞ்சாங்கம் படிப்பதும், பிறகு பாரதம் படிப்பதுமாகிய மரபு தொடர்கிறது.
10.சூரியநாராயணன், சென்னை.
சிறுகதைக்கும் நாவலுக்கும் என்ன வித்தியாசம் ?
சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த எழுத்தாளர்களில் பலர் சிறுகதை , நாவல் (புதினம்) இரண்டும் படைத்துள்ளனர். பலர் அதன் இலக்கணம் பற்றியும் எழுதியுள்ளனர். நான் அப்படி விளக்கப் போவதில்லை.
சிறுகதை என்பது ஒற்றைப்பழம் போல – வாழைப்பழம், மாம்பழம், போல..
நாவல் என்பது பலாப்பழம் போல பழம் ஒன்றுதான் உள்ளே பல சுளைகள் இருக்கும். ( ஆனால் ஒவ்வொரு சுளையிலும் சுவை மாறுபடும்)
சரி நாவல்பழம் என்றால் என்ன என்கிறீர்களா ? ஒளவையைத்தான் கேட்கவேண்டும்.
ஹெலன் கிரேக்கக் கடவுள் ஜீயசுக்கும் லீடா என்ற பெண்ணுக்கும் பிறந்தவள்தான் பிரபஞ்ச அழகி ஹெலன். ஜீயஸ் கிட்டத்தட்ட நம் இந்திரன் போல. லீடா வேறொருவர் மனைவி. இருந்தபோதிலும் அவள் மீது ஜீயசுக்கு தீராத காதல் வந்துவிட்டது. ஒரு நாளாவது அவளுடன் சுகித்து இருக்கவேண்டும் என்ற தணியாத ஆசை வந்துவிட்டது. ஆசை வெட்கம் அறியாதல்லவா? ஜீயஸ் ஒரு அண்ணப்பறவையில் வடிவில் சென்று லீடாவிடம் கூடினான்.
விளைவு சாதாரணக் குழந்தை போலல்லாமல் லீடா முட்டை இட்டு குஞ்சு பொறித்தாள். அவளே நம் இதிகாசத்தின் நாயகி ஹெலன். அழகு என்றால் சொல்ல முடியாத அழகு,
இப்படிப்பட்ட அழகியை அடைய எண்ணற்றவர் போட்டியிட்டாலும் கடைசியில் கிரேக்கத்தின் முக்கியப் பகுதியான ஸபாரட்டாவின் அரசன் மேனிலயஸ் என்பவனுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. அது வரமல்ல சாபம் என்பது விரைவில் மேனிலசுக்குப் புரிந்தது.
ஸபாரட்டா நகருக்கு வருகிறான் டிராய் நாட்டு இளவரசன் பாரிஸ். அங்கே அவன் கண்ட காட்சி அவன் கண்களில் அப்படியே இருந்துவிட்டது. ஹெலன் என்ற தேவதை அவன் கண் முன்னாள் நின்றபோது அவன் தன்னை மறந்தான். தான் நாட்டை மறந்தான். உலகை மறந்தான்.பார்த்த மாத்திரத்திலே அவள்தான் தன் உயிர் என்ற எண்ணம் அவனுக்கு வந்தது. அவள் மிகவும் பராக்கிரமசாலியான ஸபாரட்டாவின் அரசன் மெனிலயசின் மனைவி என்று அறிந்தபோது அவன் அடைந்த துயரம் அளவே இல்லை. ஆனால் ஆசை அதிகமாகும் போது அவள் அடுத்தவன் மனைவி என்ற எண்ணம் மறைந்து போனது . அவளும் இப்பேர்ப்பட்ட அழகனைக் கிரேக்க சாம்ராஜ்யத்திலேயே கண்டதில்லை. அவள் மனம் ஒரு கணம் தடுமாறியது. அந்தக் கணம் பாரிஸுக்குப் போதுமானதாக இருந்தது. அவளைக் கடத்திக் கொண்டு இலியம் என்ற தன் நாட்டுக்குச் செல்கிறான். அவளை அங்கே சிறை வைக்கிறான்.
இது நம் ராமாயணத்தின் கிரேக்க வடிவம் என்று பலர் கூறுவது காதில் விழுகிறது.
சீதை – ஹெலன்
ராமன் – மெனிலியஸ்
ராவணன் – பாரிஸ்
இலங்கை – இலியம்
அடுத்தவன் மனைவியைக் கடத்திக் கொண்டு செல்லல்தான் இரு இதிகாசங்களுக்கும் மையக் கருத்து.ஆனால் இராமாயணக் கற்பு நெறி வலியுறுத்தப்படாமல் ஹெலேனே விரும்பி பாரிஸ் கூட ஓடிப்போய்விட்டாள் என்றும் ஒரு கிளைக் கதையும் உண்டு,
சீதைக்காக ராமன் ஹனுமான், சுக்ரீவன் , அங்கதன் ஜாம்பவான் போன்றோருடன் படை திரட்டிப் போர் புரிந்து இராவணனை வதம் செய்து சீதையைச் சிறை மீட்பது நம் ராமாயணம்.
இலியட்டிலும் போர் நடக்கிறது. கிரேக்கப்படைகளுக்கும் டிராய் நகர டிரோஜன் படையினருக்கும். ஆனால் மெலிலியஸ் தன் அண்ணன் அகமெம்னனைப் போருக்கு அனுப்புகிறான். அவன்தான் கிரேக்கப் படைகள் அனைத்துக்கும் தளபதி. கிரேக்கப் படை புறப்படுகிறது . அனைத்தும் கப்பற்படை. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கப்பலில் கிரேக்கப்படை புறப்படுகிறது.
கிரேக்கப்படையில் இருக்கும் இன்னொரு மாபெரும் வீரன் அக்கிலியஸ். அவன்தான் கதையின் நாயகன். பொன்னியின் செல்வர் இருக்க வந்தியத்தேவனை கதாநாயகனாக கல்கி படைத்தது போல இங்கே ஆகிகிலீஸ் வீரதீரச் செயல் புரியும் நாயகனாக படைக்கப்பட்டிருக்கிறான். இந்த ஆக்கிலீஸ் நமக்கு முனனரே அறிமுகம் ஆனவன்தான். .தீட்டிஸ் கடல் தேவதைக்கும் பீலியஸ் என்ற மானிடனுக்கும் பிறந்தவன் அக்கிலீஸ் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அவன் குழந்தையாக இருக்கும்போதே இறவாவரம் பெறவேண்டிப் புனிதமான பாதாள தண்ணீரில் அவனைக் காலைப் பிடித்துக் குளுப்பாட்டியவள் அல்லவா அவன் தாய்!
அந்த அக்கிலீஸ் கிரேக்கப்படையின் மாபெரும் தளபதி. அவன் வீரத்தைக்கண்டு மன்னன் மெனிலயஸ் மட்டுமல்ல கிரேக்கப் படைத்தலைவன் அகமெம்னனும் அவன் மீது பொறாமைப் பட்டார்கள். இருந்தாலும் அவர்களுக்கு ஹெலனை மீட்க பலம் வாய்ந்த டிராய் நாட்டுடன் போராட அக்கிலீஸின் உதவி மிகவும் அவசியம் என்பதால் அவனுடைய கோபாவேசத்தைப் பொறுத்துக் கொள்கிறார்கள்.
ஆனால் ஒரு கட்டத்தில் தலைவன் அகமெம்னனுக்கும் அக்கிலீஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு பயங்கரமாக வெடிக்கிறது. அதனால் அக்கிலீஸ் இறுதிக் கட்டத்தில் போரில் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறி படையைவிட்டு வெளியேறுகிறான்.
ஆனால் அக்கிலீஸின் உயிர் நண்பன் பெட்ரோக்குளஸ் போரில் கலந்துகொண்டு டிரோஜன் வீரர்களால் கொல்லப்பட்டான் என்பதை அறிந்ததும் அக்கிலீஸ் வெகுண்டு எழுகிறான்.அவன் சாவுக்குக் காரணமான டிரோஜன் படையின் சேனைத்தலைவன் ஹெக்டர் என்பவனைக் கொள்கிறான். ஹெக்டரின் மரணத்தில் கிரேக்க டிரோஜன் யுத்தம் முடிவடைகிறது.
இது கிரேக்கப் படைகளுக்கும் டிரோஜன் படைகளுக்கும் இடையே நடக்கும் யுத்தம் மட்டுமல்ல. நமது மகாபாரதத்தைப் போல கடவுளர் சிலர் கிரேக்கர்களுக்கு ஆதரவாகவும் சிலர் டிரோஜன் வீரர்களுக்கு ஆதரவாகவும் செயல் பட்டனர். அதனால் இந்த யுத்தத்தின் பரிணாமம் பல வடிவில் பிரதிபலித்தது.
பத்து ஆண்டுகள் நடந்த இந்த யுத்தத்தில் கடைசி ஐம்பது நாட்களில் நடைபெறும் நிகழ்வுகளை விவரிக்கும் நூலே ஹோமர் எழுதிய இலியட் என்ற மகா காவியம்
முக்கியப் பாத்திரங்கள்
(கிரேக்கர்கள்)
அக்கிலீஸ் – தளபதி
அகமெம்னன் – சேனாதிபதி
அஜாக்ஸ் – சின்ன அஜாக்ஸ் , பெரிய அஜாக்ஸ் என்று இருவர் உண்டு.
ஆட்டோமிடன் – அக்கிலீஸின் நண்பன் தேரோட்டி
கல்காஸ் – நடக்கப்போவதை முன்னரே கூறும் சோதிடன்
டயமீடிஸ் – கப்பல் படை உப தலைவன்
யூரிபைலஸ் – கிரேக்கப் படை வீரன்
ஹெலன் – கதாநாயகி இலியட் போரின் காரண கர்த்தா
ஹெர்குலிஸ் – கிரேக்க புராணத்தின் தலை சிறந்த வீரன்
லாபித்துக்கள் –
மெக்கேயான் – படை மருத்துவன்
மெனிலயஸ் – ஸ்பார்ட்டாவின் மன்னன் – ஹெலனின் கணவன்
மெனீட்டியஸ் – பெட்ரோக்குளஸஸின் தந்தை
ஓடிஸியஸ் – ஹோமரின் ஓடிஸி என்ற இதிகாசத்தின் நாயகன்
பெட்ரோக்குளஸ் – அக்கிலீஸின் உயிர் நண்பன்
பீலியஸ் – அக்கிலீஸின் தந்தை
பீனிக்ஸ் – அக்கிலீஸின் ஆசிரியன் -நண்பன்
டிரோஜன்களும் அவர்களது ஆதரவாளர்கள்
ஈனியாஸ் – அப்ரோ டைட்டிஸ் தேவதையின் மகன் – ஹெக்டரின் வலது கை வர்ஜில் எழுதிய ஈனியட் என்ற இதிகாசத்தின் நாயகன்
ஆண்ட்ரோமக்கி – ஹெக்டரின் மனைவி
ஆண்டினார் – டிரோஜன் தலைவன்
பிரிசிஸ் – ஆக்கிலீஸின் அடிமைப் பெண்
கஸ்ஸான்ட்ரா – ஒரு தீர்க்கதரிசி –
க்ரிசிஸ் – அப்பலோலோ கோவில் பூசாரியின் மகள்
டெய்போபஸ் – டிரோஜன் தலைவன்
டோலன் – பணக்கார டிரோஜன் இளைஞன்
ஈட்டியான் – ஆண்ட்ரோமக்கியின் தந்தை
ஹெக்காபி – பிரியமின் மனைவி – ஹெக்டர் – பாரிஸ் – ஹெலீனஸ் இவர்களின் தாய்
ஹெக்டர் – டிரோஜன் படைத் தலைவன்
ஹெலீனஸ் – பிரியமின் மகன்
இடாயூஸ் – பிரியத்தின் அறிவிப்பாளன்
அயலஸ் – பிரியத்தின் தாத்தா
லேமேடன் – ஆரம்பகால டிரோஜன் மன்னன் -பிரியமின் தந்தை
பாஸ்டாரஸ் – டிரோஜானின் ஆதரளவாளன். நம்பிக்கை துரோகி
பாரிஸ் – ஹெலனைக் கடத்திப் போரை உருவஈக்கிய டிரோஜன் இளவரசன்
பிரியம் – டிராயின் வயதான அரசன்
சர்ப்பிடான் – ஜியூஸின் மகன் -டிரோஜன் ஆதரவாளன்
கடவுளர்கள்
அப்ரோடைட்டி – ஜியூஸின் மகள் . ரோமானியர் இவளை வீனஸ் என்று அழைத்தார்கள்
அப்போலோ – ஜியூஸின் மகன் -டிரோஜன் ஆதரவாளன்
ஏரிஸ் – ஜியூஸ்-ஹீரா மகன்
ஆர்டிமிஸ் – ஜீயஸ் லீட்டோ மகள்
ஆதீனி – ஜியூஸின் முதல் மகள் மனித உருவும் மீனின் வாலும் கொண்டவள்
கரொனஸ் – டைட்டன்களின் அரசன்
டெலுஷன் – ஜியுசின் மகள்
அய்லஸ்தியா – ஹீராவின் மகள்
ஃப்யூரிகள் – பாதாள உலகின் கடவுள்கள்
ஹயடிஸ் – கிரெனஸ் -ரியா இவர்களின் மகன்
ஹெபைஸ்டஸ் – ஜியூஸ் -ஹீரா விண் மகன்
டெல்பி – புனிதமான நகரம்
ஒலிம்பஸ் – கைலாய மலை போல ஒரு மலை
ஹீபி – ஜியஸ் -ஹீராவின் மகள்
ஹீரா – கிரெனஸ் -ரியா இவர்களின் மகள் – ஜியூஸின் சகோதரி/மனைவி
வெற்றிகளால் சரித்திரத்தில் இடம் பெற்றவர்கள் சில மன்னர்கள். படைப்புகளால் சரித்திரத்தில் இடம் பெற்றவர்கள் சிலர். இரண்டும் சேர்ந்தால் அவர்கள் சரித்திரத்தில் ஒரு சிகரம் அமைப்பார்கள். ஒருவர் நரசிம்ம பல்லவன் – கடற்கரையில் அழியாத கோலங்களைக் கல்லால் எழுப்பினான்.
இன்றைய நாயகன் – கலையார்வமும், பக்தியும், செல்வமும், வீரமும் நிறைந்த நமது இராஜராஜன் – தஞ்சைப்பெரிய கோவில் எனும் அழியாத ஆலயத்தை உருவாக்கினான். அதைச் சொல்வதற்கு முன் அவனது வெற்றிகளை முழுவதுமாகச் சொல்வோம். நாம் இதுவரை காட்டியதெல்லாம் ஒரு சிறு கோடு தான். இன்று ஒரு ரோடு போடுவோம். அந்த ராஜபாட்டை இதோ.
கி பி: 991 போர்ப்பார்வையைத் தெற்கு நோக்கித்திருப்பினான். இலங்கை!
இலங்கை மன்னன் ஐந்தாம் மகிந்தன் – தனது சேர பாண்டியப் போரில், தனது எதிரிகளுக்கு உதவியதை இராஜராஜன் மறக்கவில்லை. ஈழம் தனக்கு வலுவான எதிரியாக இருக்கும் போது, சேர பாண்டியர்கள் ஈழத்தின் துணையுடன் மீண்டும் மீண்டும் துளிர்த்து வருவர் என்பதை நன்கறிந்திருந்த இராஜராஜன், இராஜேந்திரன் தலைமையில் ஈழப்படையெடுப்பைத் தொடங்கினான். தோல்வியுற்ற மகிந்தன், ஈழத்தின் தென் பகுதியில் மலைப்பிரதேசமான ரோகணத்துக்குச் சென்று ஒளிந்தான். இலங்கையின் தலைநகரம் அனுராதபுரம் – அது வடபகுதியின் நகரம்.
‘இராஜேந்திரா! நரசிம்ம பல்லவனுக்கு ஒரு வாதாபி என்றால், இராஜராஜனுக்கு ஒரு அனுராதபுரம். நீ செய்து விடு” – என்று ஆணையிட்டான். அவ்வளவு தான். இராஜேந்திரன் செயதுவிட்டான். அனுராதபுரம் முற்றிலும் அழிக்கப்பட்டது. தீவின் மையப்பகுதியில் பொலன்னருவா என்ற இடத்தில் புதிய தலைநகரத்தை உருவாக்கினான். அதற்கு, சனநாதமங்கலம் என்று பெயரிட்டான்.தெற்கு ஆட்கொள்ளப்பட்டது.
மேற்கே, குடகு நாட்டில், பாணாசோகம் என்ற இடத்தில் கொங்காள்வ மரபு அரசனைப் போரில் முறியடித்துத் துரத்தினான். அந்தப் போரில் ‘மனிஜன்’ என்ற பெருவீரன் இராஜராஜனுக்குப் பேருதவியாக இருந்தான். அவனை அந்நாட்டுக்கு மன்னனாக்கி அவனை தனக்குக் கீழ் சிற்றரசானாக்கினான். பிறகு, இந்நாள் மைசூர், சேலம், பெல்லாரி பகுதிகளை அடக்கிய அந்நாள் கங்கவாடி, நுளம்பவாடி, தடிகைபாடி, துளுவம் பகுதிகளை இராஜேந்திரன் தலைமையில் சென்ற படைகள் வென்றது.இவ்வாறு, மேற்கும் வசப்பட்டது.
அடுத்த இலக்கு வடக்கு. மேலைச்சாளுக்கிய நாடு. மன்னன் இரண்டாம் தைலபன் மரணத்துக்குப் பின் அவன் மகன் சத்தியாசிரயன் அரசனானான். மேற்கே, கங்கவாடி ராஜ்யங்கள் சோழ ஆதிக்கத்தில் அடங்கியது, மற்றும் ஏதோ சில காரணங்களுக்காக சோழப்படையெடுப்பு நடந்தது.
இராஜேந்திரன் தலைமையில், ஒன்பது லட்சம் வீரர்கள் கொண்ட சோழர் படை புறப்பட்டது. பீஜப்பூர் ஜில்லாவின் தேனூர் அருகே பெரும்போர் நடந்தது. சத்தியாசிரயன் யானை மேல் ஏறிப் போர் புரிந்தான். இராஜேந்திரன் அந்த யானையைக் குத்திக்கொல்ல ‘இராஜமல்லன் முத்தரையன்’ என்ற படைத்தலைவலனைப் பணித்தான். அந்த யானை அவனை மிதித்துக் கொன்றது। இராஜேந்திரன் சோகமடைந்தாலும் கடும் போர் புரிந்து சத்தியாசிரயனை போர்க்களத்தை விட்டு ஓட ஓடத் துரத்தினான். சோழர் படை பெருவெற்றிபெற்றது.
ஒரே போரைப்பற்றி இருதரப்பும் தங்களுக்கு சாதகமாக கல்வெட்டில் பதிவது அரசியலில் சகஜம்.
சாளுக்கியக் கல்வெட்டுகள்: “இராஜேந்திரன் படைகள் நாட்டைச் சூறையாடி, பாழ்படுத்தி, நகரங்களைக் கொளுத்தி, இளங்குழவிகள், மறையோர் என்று பாராமல் கொன்று குவித்து, கன்னியரைக் கைப்பற்றி மனைவியாராகக் கொண்டும், பெரும்பொருளை கவர்ந்தும் சென்றன” என்கிறது. சோழக்கல்வெட்டுகள் தங்கள் அடைந்த வெற்றியை மட்டும் கூறுகிறது.
உண்மை நிலவரம் யாரோ அறிவர்.
வேங்கிநாடு: கிருஷ்ணா, கோதாவரி நதிகளுக்கிடையே விரிந்த ராஜ்யம். கீழைச்சாளுக்கிய மன்னர்கள் ஆண்டு வந்தனர். இரு அரச சகோதரர்களில் மூத்தவன் அம்மராசன்- இளையவன் பாடபன். இருவருக்கும் ஆட்சியின்பால் தகராறு. வேறு வேறு அரசியல் கூட்டணி அமைத்து – ராஜ்யத்தை பாதியாக்கி இருவரும் தனித்தனியே ஆண்டு வந்தனர். முப்பது வருடங்கள் வேங்கியில் குழப்பம் நிலவியது.
மூத்தவன் வழிமுறையில் வந்த இளவரசன் சக்திவர்மன், நாட்டைவிட்டு வந்து இராஜராஜனிடம் அடைக்கலம் புகுந்தான். வேங்கி நாட்டைக் கைப்பற்றும் நாளை எண்ணிக்கொண்டிருந்ததான். அவன் தம்பி விமலாதித்தன் அவனுடன் தஞ்சாவூர் வந்தான்.
அந்த நேரம், இராஜராஜன் சீட்புலி, பாகி நாடு இவற்றை (நெல்லூர் பகுதி) ஆண்ட தெலுங்குச் சோழன் வீமன் மீது படையெடுக்கத் திட்டமிட்டுக் கொண்டிருந்தான்.
சக்திவர்மனை அழைத்து, “சக்திவர்மா! இந்த சீட்புலி, பாகி நாடு இரண்டும் பராந்தக மகாராஜா காலத்தில் சோழவசமிருந்துப் பின்னர் இழக்கப்பட்டது. அதை மீட்பது எனது முதல் கடமை. பிறகு- வேங்கியை வென்று உனக்களிப்போம்” என்று கூறினான். சக்திவர்மன்: “மன்னர் மன்னா! இந்த யுத்ததிற்கு என்னை அனுப்புங்கள். உங்களுக்கு வெற்றி தரும் இந்த படையெடுப்பில் நான் பங்கு பெறவேண்டும்.
இராஜராஜன் மகிழ்ந்தான்.
“பரமன் மழபாடியானன் தலைமையில் செல்லும் பெரும் படையுடன் நீயும் செல்வாயாக! சென்று வா! வென்று வா!” என்றான்.
சக்திவர்மனின் பெருவீரம் காரணமாக அந்தப் படையெடுப்பில் சோழர்கள் வென்று அந்த நாடுகள் சோழ வசமாயின. சக்திவர்மன் மீது இராஜராஜன் பெருமகிழ்ச்சி கொண்டான்.
கி பி 999:
சிலவருடங்களில் பல மாற்றங்கள்.
இராஜராஜன் தன் மகளுக்கு குந்தவி என்று பெயர் வைத்திருந்தான். தன் அக்காவின் மீது அவன் கொண்ட பெருமதிப்புதான் காரணம்! சாளுக்கிய இளவரசன் விமலாதித்தன், வீரத்திலும் அழகிலும் சிறந்திருந்தான். இராஜேந்திரனும், விமலாதித்தனும் நெருங்கிய நண்பராயினர். வேங்கி இளவரசனும், சோழ இளவரசி குந்தவியும், தஞ்சாவூரில் ‘பழகினர்’.
வாசகர்களுக்கு ஒரு கேள்வி:
ஒரு இளவரசனையும், இளவரசியையும் அருகில் வைத்தால் என்ன நடக்கும். நீங்கள் நினைத்தது தான் நடக்கும். அது வெகு சிறப்பாக நடந்தது. காதல்! காதல் இன்பத்தைக் கொடுப்பதோடு, ஏங்கவும் வைக்கும்.
விமலாதித்தன் ‘நானோ சோழரிடம் அடைக்கலம் புகுந்த ஏழை. அவளோ சக்கரவர்த்தித்திருமகள்’ என்று ஏங்கினான். ‘ரோஜா மலரே ராஜகுமாரி’- என்று பாடினான்.
அப்புறம்: ‘ஓடும் மேகங்களே! ஒரு சொல் கேளீரோ” என்று மேகத்திடம் தூது விட்டான். இராஜராஜன் கவனித்தான். பாடல்களை ரசித்தான்! அவன் மனதுக்குள் மழை பொழிந்தது. காதலை அங்கீகரித்தான். இந்த வேங்கி நாட்டு வேங்கைதான் தன் மகளுக்கு நல்ல மணவாளன் என்று முடிவு செய்தான். இருவருக்கும் மணமுடித்தான்.
“இத்துணூண்டு காதல் கதை! அதுக்கு இரண்டு பாட்டு வேற!” என்று வாசகர்கள் முணுமுணுப்பது தெளிவாகக் கேட்கிறது..
என்ன செய்வது? இது சரித்திரம் பேசுவதைச் சொல்லும் தொடர் – ரணகளத்தில் கிளுகிளுப்புக்காக எழுதப்படும் நவீனமல்லவே!
ஆனால், இந்தச் சிறிய காதல் கதை – தமிழகத்தின் சரித்திரத்தைப் பின்னாளில் புரட்டி, மாற்றி எழுதப்போவதை யாரும் அன்று அறியவில்லை. இராஜராஜனும் அறியவில்லை.
எனக்கு சின்ன வயசிலே இருந்தே இந்த சங்கீதம்னா ரெம்ப ஆசைங்க. எங்க தாத்தா கோயில் பேஷ்காரா இருந்தாரா, அடிக்கடி கோயிலுக்குப் போயி இந்த நாதஸ்வர ஓசை கேட்டுக் கேட்டு சங்கீத ஆசை வந்திடுச்சுன்னு நினைக்கிறேன். அதுவும் கோயில் திருவிழா நேரங்கள்லே, சுவாமி எங்க தெருப்பக்கம், திரு உலா வர்றப்போ எல்லாம், நாதஸ்வர ஓசைக்கு தலையாட்டிக்கிட்டு எங்க தாத்தா முன்னாலே நடந்து வருவாரு. அவருக்குத் தெரியாம வீட்டுத் திண்ணை ஓரம் போர்வையை இழுத்துப் போர்த்துக்கிட்டுத் தூங்கப் பார்த்தாலும் , அந்த நாதஸ்வர ஓசையும் தவுலுச் சத்தமும், நம்ம தலையையும் போர்வைக்குள்ளேயே ஆட வச்சிடும். அப்ப பள்ளிக்கூடத்திலே பாட்டு வகுப்பு எல்லாம் இருந்தாலும், பாட்டு சொல்லிக்கொடுத்த ஜெயலட்சுமி டீச்சரோட சந்தன முகத்தையே பார்த்துக்கிட்டு இருக்க தோணுச்சே தவிர, சங்கீதம் உள்ளே ஏறவே இல்லை.
அப்புறம், கல்லூரி எல்லாம் முடிச்சு , வேலைக்குச் சேர்ந்தப்பறம் , இந்த ‘சங்கராபரணம் ‘ படம் வந்து சங்கீத ஆசையை மறுபடி கிளப்பி விட்டுடுச்சு. ‘மானஸ சஞ்சர ரே’ ன்னு மானாவாரியா பாடிக்கிட்டுத் திரிஞ்ச காலம் அது. ‘சங்கரா ‘ ன்னு கத்திக் கூப்பிட்ட குரலுக்கு அந்த ஊரிலே இருக்கிற எல்லா சங்கரன்களும் திரும்பிப் பார்த்தாங்க. ஆனா சங்கீதம் நம்ம பக்கம் திரும்பிப் பார்க்கலைங்க.
அப்புறம் குடும்பத்தைக் காப்பாத்த உருப்படியா வேலையிலே கவனம் செலுத்தி இருந்திட்டு, இப்ப வேலை ஓய்வு பெற்ற பிறகு, நம்ம விருட்சம், குவிகம் குழுமங்கள்லே , நடத்துற மீட்டிங்கள்லே சில பேரு பாடுறதைப் பார்த்ததும் நம்மளும் முயற்சி பண்ணிப் பார்க்கலாமேன்னு , சில சங்கீத குருமார்கள் கிட்டே போய் எனக்கு சங்கீதம் கத்துக் கொடுக்கச் சொல்லிக் கேட்டுப் பார்த்தேன். அதிலே பெரும்பாலான பேரு பெண் சிஷ்யை களுக்குத்தான் சொல்லிக் கொடுக்க ஆர்வம் காட்டுறதாய்ச் தெரிஞ்சது. அவங்களுக்குத் தானே, வளைவு , நெளிவு, அதாவது குரல்லே , வளைவு நெளிவு சரியா வர்றது. அந்த காரணத்தினாலே இருக்கலாம்.
கடைசியா ஒரு அம்மா , எனக்கு சொல்லிக் கொடுக்க சரின்னு சொல்லிட்டு, அவங்க பல் செட்டை எடுத்துச் சரி செஞ்சிட்டு ‘ச ரி ‘ ன்னு ஆரம்பிச்சாங்க. நான் ‘ சாரி ‘ ன்னு சொல்லிட்டு கிளம்பி வந்துட்டேன். அப்புறம் யோசிச்சுப் பார்த்ததில் ஒரு விஷயம் தெரிஞ்சது. இப்பத்தான் எல்லாமே யூடியூபில் சொல்லிக் கொடுக்கிறாங்களே , கத்தரிக்காய் சாம்பாரில் இருந்து, கராத்தே கத்துக்கிறது வரை இருக்கே. அப்படின்னு தேடித் பார்த்தா, எக்கச் சக்கமா கிடைச்சுச்சுங்க. இந்த ‘சாம்பார் ராகத்தை ‘ பத்தி, சாரி, சாமா ராகத்தைப் பத்தி எல்லோரும் பிரமாதமா சொல்றாங்களே, சில எழுத்தாளர்கள், அதை வச்சு கதை எல்லாம் எழுதி இருக்காங்களே, அதை முயற்சி செய்யலாமேன்னு , அந்த ராகத்தில் , ‘சாந்தமு லேக ‘ பாடலை ப்ராக்டிஸ் பண்ணலாமுன்னு யூடியூப்பிலே தேடிப் பார்த்தேன்.
சில வித்துவான்கள், சாந்தமு லேக வை, சாந்தமே இல்லாமல் சத்தமா பாடி இருக்காங்க. சில பேரு , அந்த ஸாமா சாஸ்திரிகளை விடாம, அதாவது , ஸாமா ராகத்தை விடாம ஆலாபனை பண்ணிக்கிட்டு இருக்காங்களே தவிர, சாந்தமு லேக வுக்கு வரவே மாட்டேங்கிறாங்க. நம்மளாலே அந்த அளவு ஆலாபனை எல்லாம் பண்ண முடியாதே, நேரடியா பாட்டுக்கு வந்து முயற்சி பண்ணத்தானே ஆசை. கடைசியிலே ஒரு வழியா நமக்கு ஏத்த மாதிரி, ஒருத்தர் பாடியிருந்தார். அருமையா , சாந்தமா, சிரிச்ச முகத்தோட, இது ரெம்ப ஈஸி தம்பி ‘ங்கிற மாதிரி பாடியிருந்தார்.
அவரோட சேர்ந்து பாடி சாதகம் பண்ண ஆரம்பிச்சேன். என்ன பாதகம் பண்ணினேன்னு தெரியலே . திடீர்னு, வீட்டுக் கதவை யாரோ படபடன்னு தட்டுறாங்க. . ஓடிப் போய்த் திறந்தா, பக்கத்து வீட்டுக்காரர், ‘ சார் , நீங்க சாந்தமு லேக பாடுறதைக் கேட்டு எங்க வீட்டிலே சாந்தமே போயிடுது. கொஞ்சம் மெதுவாப் பாடுங்க. எங்களுக்கு இந்தப் பாட்டு வேணாம் ‘ ன்னு ,சொன்னவுடனே சரின்னு சத்தத்தைத் குறைச்சு வீட்டுக்குள்ளே மட்டும் கேட்கிற மாதிரி பாடினேன். ஆரம்பத்திலே வீட்டம்மா ஒண்ணும் சொல்லலே. ஆனா நான் அந்த ‘ சாந்தமு லேக ‘ வைப் பத்துத் தடவை திருப்பித் திருப்பிப் பாடுனதும் அவங்களாலேயும் பொறுக்க முடியலே.
ஏங்க , இதுக்காக , நான் ரோட்டிலே போயிப் பாட முடியுமா. தெருவிலே எல்லோரோட சாந்தமும் போறது ஒரு பக்கம், நம்மளைப் பிச்சைக்காரன்னு நினைச்சு அவங்கவங்க வீட்டிலே இருக்கிற, பழைய சாதத்தையும் , ஊசிப் போன பதார்த்தங்களையும் , இரக்க உணர்வோடு நமக்கு போட வந்துட்டா , பெரிய பிரச்னையாயிடுமே . பார்க் பக்கம் போயி பாடலாம்னா , வாக்கிங் போறதுக்கு இடைஞ்சலா இருக்குன்னு நியூசென்ஸ் கேசில் போலீசில் பிடிச்சுக் கொடுக்க சான்ஸ் இருக்கு.
வேற வழியில்லாம ரூமுக்குள்ளே போயி கதவைச் சாத்திக்கிட்டு பாட ஆரம்பிச்சேன். ‘சாந்தமு லேக .. ” ,அந்த வித்துவான் செய்யற மாதிரி தோள் உயர்த்தி சிரிப்போடு பாட வர்றது. ஆனா சுருதி தான் சேராமே, வடக்கேயும் தெற்கேயும் போயிட்டு போயிட்டு வர்றது., இதிலே , அவரு , அந்த ‘ க’ வை மட்டும் இழுத்துப் பாடுறதை முயற்சி பண்ணினா, அது ‘ கா, கா’ ன்னு வர்றது. சன்னல் பக்கம் பார்த்தா, ரெண்டு மூணு காக்கை வந்து உட்கார்ந்து என்னையே ‘உர்’ ருன்னு பார்க்குது. ரசிக்குதா, இல்லே கோபப்படுதான்னு ஒண்ணுமே புரியலே. எதுக்கு வம்புன்னு, ஜன்னலையும் சாத்திட்டு , பேனையும் அமத்திட்டு வேர்க்க விறுவிறுக்க சாதகம். பேன் போட்டா, அந்த சத்தம் வேற ‘துர்துர்ன்னு’ தொந்தரவு. ஒருவழியா, சுருதி சேர்ந்து, ‘சாந்தமு லேக, சௌக்யமு லேது ‘ வர்ற நேரத்திலே, ரூம் கதவு தட்டுற சத்தம்.
‘தாத்தா. ஐஸ் க்ரீம் வாங்கிட்டு வந்துருக்கேன். வேணுமா’ . பேத்தியின் குரல். ஐஸ் க்ரீம் சாப்பிட்டா , குரல் போயிடும்னு சொல்றாங்களே, ன்னு ஒரு சந்தேகம். ‘ஐஸ் க்ரீமா, சங்கீதமா, ஐஸ் க்ரீமா, சங்கீதமா’ , மனசுக்குள் ஒரு போராட்டம். அப்புறம் முடிவு, ‘இப்ப என்ன பெரிய குரல் இருக்கு, போறதுக்கு ‘ என்று முடிவு செய்து கதவைத் , திறந்து ஐஸ் க்ரீம் வாங்கி சப்பிச் சப்பிச் சாப்பிட்ட பிறகு மறுபடி கதவைச் சாத்தி படு பயங்கர சாதகம். என்ன ஆச்சர்யம். அந்த ஐஸ்க்ரீம், குரலை , வளுவளுப்பாக ஆக்கி சுருதி பிசகாமல் ஒரு வரி பாடியாச்சு .
தூங்கி எழுந்து, மறுநாள் காலை ஆரம்பித்தால் , அய்யய்யோ, தொண்டை கட்டிக்கிட்டு, ‘சார்ந்தமு லீக்க , சயர்க்க்கமு லோத்து ‘ என்னென்னமோ சத்தம், தொண்டையில் இருந்து. விடுவோமா நாம. யாரு. பிரிட்ஜில் இருந்த மீதி ஐஸ் க்ரீமை எடுத்து சாப்பிட்டு , தொண்டையை மறுபடி வளுவளுப்பாக ஆக்கிக் கொண்டு தொடர்ந்து சாதகம் செய்து ,ஒரு வழியா , ஒரு வலியா , ‘சாந்தமு லேக . சௌக்கியமு லேது , ஸாரஸ தள நயனா, ஆஆஆ ‘ ன்னு பாடி ரெகார்ட் பண்ணியாச்சு. பல்லவி பாடியே, பல்வலி வந்தாச்சு, அனுபல்லவி, சரணம் எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் ‘ ன்னு ரெகார்ட் பண்ணினதை குவிகம் சுந்தரராஜனுக்கு அனுப்பியாச்சு , குவிகம் ஒலிச்சித்திரத்திற்கு.
அவரும் கேட்டுட்டு , வழக்கம் போல் ‘ பிரமாதம் பாரதி ‘ ன்னு சொல்லிட்டு குவிகம் ஒலிச் சித்திரத்திலே சேர்த்திட்டாரு. கேட்கிறவங்க, என்ன சொல்லப் போறாங்கன்னு தெரியலே.
ஆனா, முன்னாலேயே கேட்டுட்ட குவிகம் கிருபானந்தன் மட்டும் கையாலே, ரெண்டு முறை , ரெண்டா , மூணான்னு சரியா தெரியலே, தலையிலே அடிச்சுக்கிட்டார்னு கேள்வி.
இந்த மாதப் பாடலாசிரியர் சங்கீதகலாநிதி பாபநாசம் சிவன்
ராதே உனக்கு கோபம் ஆகாதடி,
மன்மத லீலையை வென்றார் உண்டோ,
வதனமே சந்திர பிம்பமோ,
உனைக் கண்டு மயங்காத பேர்கள் உண்டோ,
என்றெல்லாம் , 40 களில் வெளிவந்த காதல் பாடல்கள் , மற்றும்,
அம்பா மனம் கனிந்து மனம் கனிந்து,
பூமியில் மானிட ஜென்மம்,
சத்வ குண போதன்,
தீன கருணாகரனே நடராஜா,
போன்ற பக்திப் பாடல்களும் , தலைமுறை கடந்தும், இன்றும் ரசிக்கப்படுகின்றன. இப்படி, இசை மற்றும் பாடல் என இரண்டு பொறுப்புக்களிலும், மஹா மேதமை பெற்றவர்தான் திரு பாபநாசம் சிவன் அவர்கள்.
ஏறத்தாழ 70 திரைப்படங்களுக்கு மேலாக,மொத்தமாக 800 பாடல்களை எழுதியுள்ளார்.
கண்ணதாசன் கூறுவார் – ஆண்டாள், மாணிக்கவாசகர், வள்ளலார் ஆகியோரின் பக்திப் பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாத அளவுக்கு இடம் பெற்றதற்குக் காரணம் பக்திச் சுவையின் உருக்கமே. உருக்கமான எந்தப் பாடலும் நம்மை மெய் மறக்கச் செய்கின்றன. அந்த வரிசையில் அழியா இடம் பெற்றவர் பாபநாசம் சிவன்” என்று . பாபநாசம் சிவனுக்கு மிக ஒல்லியான சரீரம் மற்றும் வசதி குறைந்த வாழ்க்கை இந்த விதமான வாழ்க்கைச் சூழலை அனுபவித்தவர்கள் கவிஞர்கள் ஆவார்கள். ஆனால், இவையே மிகுந்திருந்த சிவன், குரல் வளத்துடன் பாடுவது மட்டுமல்லாது, கவி வளத்துடன் பாடல்களைத் தாமே இயற்றிப் பாடியிருக்கிறார். எனவே தான், நூற்றாண்டு கண்ட கர்னாடக இசையுலக அதிசயம் , சிவன் என்று பாராட்டப் படுகிறார்.
தமிழ்நாட்டில், ஒரே திரை அரங்கில் 3 தீபாவளகளைக்கண்ட ஹரிதாஸ் என்ற எம் கே தியாகராஜ பாகவதர் நடித்துப் பாடிய அத்தனை பாடல்களையும் எழுதிய பெருமை திரு சிவன் அவர்களைச் சார்ந்தது.
தஞ்சை மாவட்டம் நன்னிலம் தாலுகாவில், போலகம் என்னும் கிராமத்தில் 1890 ஆம் வருடம், ராமாமிருதம்-யோகாம்பாள் தம்பதிக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். ராமையா என்ற பெயர். (இவரின் சகோதரர் தான், எம்.ஜி.ஆரின் வாழ்க்கைத் துணைவியான ஜானகியின் தந்தை), பாபநாசத்தில் சகோதரருடன் வசித்த ராமையா, கோயிலில் மனம் உருகிப் பாடுவதைப் பார்த்தவர்கள், சிவன் போல இருந்து பாடுகிறார் என்று கூற, ராமைய்யா என்ற பெயர் மறைந்து, பாபநாசம சிவன் என்று மாறிவிட்டது.
திருவனந்தபுரம் , பாலக்காடு என்று சென்றுவிட்டு, அப்புறம், சென்னையில் குடியேறினார். வீணை எஸ் பாலச்சந்தரின் தகப்பனார் சுந்தரம் அய்யர மற்றும், அவரின் மகன்கள் , மகள் ஆகியோர் நடித்த ‘சீதா கல்யாணம்’ என்கிற திரைப்படத்திற்கு தன் முதல் பாடல் இயற்றினார் பாபநாசம் சிவன். ஆனால், இவர் பாடல் எழுதி முதன் முதலில் வெளிவந்த திரைப்படம் ரத்நாவளி.
பாடலாசிரியராக, இசையமைப்பாளராக, ஒரு நடிகராகவும் தமிழ்த் திரையுலகிற்கு , தனது பங்களிப்பினைத் தந்துள்ளார் சிவன்.
1934ல் சினிமாவுக்குப் பாடல் எழுத ஆரம்பித்த பாபநாசம் சிவன் 1950 வரையிலும் தீவிரமாக இயங்கியிருக்கிறார். எம் கே தியாகராஜ பாகவதர், பி யூ சின்னப்பா, ஹொன்னப்ப பாகவதர், டி ஆர் மகாலிங்கம் போன்றோரின் பல படங்களுக்கு பாடல்கள் இயற்றி அவை, மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன. 1936ல் வெளிவந்த எம் கே தியாகராஜ பாகவதர் நடித்த ‘சத்திய சீலன்’ உள்ளிட்ட படங்களுக்கும், இசையமைத்திருக்கிறார். பாடல்கள் அனைத்தும் வெற்றி பெற்றன.
உனைக்கண்டு மயங்காத பேர்களுண்டோ – அசோக்குமார்
பூமியில் மானிட ஜென்மம் அடைந்தும் ஓர் – அசோக்குமார்
மன்மத லீலையை வென்றார் உண்டோ – ஹரிதாஸ்
அன்னையும் தந்தையும் தானே – ஹரிதாஸ்
ராதே உனக்குக் கோபம் ஆகாதடி – சிந்தாமணி
மனமே கணமும் மறவாதே – சாவித்திரி
வதனமே சந்திரபிம்பமோ – சிவகவி
மறைவாய் புதைத்த ஓடு – திருநீலகண்டர்
இவற்றைப்போல் இன்னும் எண்ணற்ற பாடல்கள் – இப் பாடல்களெல்லாம் அக்காலத்தில் தமிழகத்தில் ஒலிக்காத இடமே கிடையாது.
பாயில் கீழே அமர்ந்து கண்களை மூடியபடி பாடிப்பாடி பல்லவியை அமைப்பார். அதற்கேற்ற படி வரிகளை அமைப்பாராம்.
கண் இழந்தால் என்ன
கடவுட்கும் என்ன
கண் இல்லையோ நம்மைக்
காக்கும் தயாளன் என்றும்,
மனமே ஈசன் நாமத்தை
வாழ்த்துவாய் – தினம் வாழ்த்துவாய்
கனவென்னும் வாழ்வில்
கலங்கி விடாதே ,
காதலை மாதரை புகழ்ந்து பாடாதே, என்றும்,
அம்மையப்பா உங்கள் அன்பை மறந்தேன்
அறிவில்லாமலே நன்றி மறந்தேன்
அன்னையும் தந்தையும் தானே
பாரில் அண்ட சராசரம் கண்கண்ட தெய்வம்
தாயினும் கோயில் இங்கே – ஈன்ற
தந்தை சொல் மிக்கதோர் மந்திரம் ஏது. என்றும், எழுதி இருப்பது அழகு.
வதனமே சந்திர பிம்பமோ
மலர்ந்த சரோஜமோ
மின்னும் மோனத் துடி இடையாள
அன்னமோ மடப்பிடி நடையாள
புன்னகை தவள பூங்கொடியாள்
புவன சுந்தரியாள் என்றும்
கவலையை தீர்ப்பது நாட்டியக் கலையே
கணிகையர் கண்களே
மதன்விடும் வலையே
புஜமிரண்டும் மூங்கில் – தளர் நடை அஞ்சி
புருவம் இடையுடன் வளையுமே அஞ்சி என்றும்,
நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு
என் மதி மயங்கினேன் – மூன்று உலகிலும்
மன்மத லீலையை வென்றார் உண்டோ ! என்று எழுதுவார்.
சாரசம் வசீகரக் கண்கள் – சீர் தரும்
முகம் சந்திர பிம்பம் என்றும்
நடை அலங்காரம் கண்டேன்
அன்னப் பெடையும் பின் அடையும்
பொற்கொடியிவள மலரடி என்றும் காதலில் விளையாடி எழுதி இருக்கிறார்.
பாபநாசம் சிவனின் பாடல்கள் இடம் பெற்ற சில முக்கியமான படங்கள்:
அசோக்குமார் – 1941
சாவித்திரி – 1941
மதனகாமராஜன் – 1941
நந்தனார் – 1942
சிவகவி – 1943
ஜகதலப்பிரதாபன் – 1944
மீரா – 1945
வால்மீகி – 1946
குண்டலகேசி – 1947
அபிமன்யு – 1948
ஞானசௌந்தரி – 1948
சக்ரதாரி – 1948
தேவமனோகரி – 1949
ரத்னகுமார் – 1949
அம்பிகாபதி
புதுவாழ்வு
செஞ்சுலட்சுமி – 1958
சீதா கல்யாணம் படத்தில், 22 பாடல்கள், பவளக்கொடி படத்தில் 60 பாடல்கள், அசோக் குமார் படத்தில், 19 பாடல்கள், ஹரிதாஸ் படத்தில் 29 பாடல்கள் என பாடல்கள் தந்தவர் பாபநாசம் சிவன் அவர்கள்..
தன்னுடைய தாயாரைத் தெய்வமாகப் போற்றியவர் பாபநாசம் சிவன். அட்சரம்கூட எழுதவோ படிக்கவோ தெரியாத தன் அன்னை, எப்படி ஆயிரக்கணக்கான பாடல்களைக் கற்றுக்கொண்டார் என்ற வியப்பு சிவனிடம் கடைசிவரை இருந்திருக்கிறது. சங்கீத மும்மூர்த்திகளின் கீர்த்தனைகள் முந்நூறுவரை பாடமாகியிருந்தது அம்மாவுக்கு. க்ஷேத்ரக்ஞர் பதங்களும், கோபாலகிருஷ்ண பாரதி போன்ற பக்த கவிகள் பலரின் பாடல்களும் அவருக்குத் தெரிந்திருந்தன. இவை தவிர, அந்தக் காலத்துப் பெண்களுக்கே உரித்தான கல்யாணப் பரிகாசப் பாடல்களும், நலங்கு, ஊஞ்சல், ஓடம், கும்மி, கோலாட்டம் போன்ற குதித்துப் பாடும் பாடல்களும் அவருக்கு அத்துப்படி!
தனக்கு வாய்த்த இசையறிவுக்கும், ஒருவகைக் குரல் இனிமைக்கும் காரணம், இத்தகைய தாயிடம் கர்ப்பவாசம் செய்யக் கிடைத்த பாக்கியமும் அவருடைய ஆசியும்தான் என்று பூரிப்புடன் கூறிக்கொள்வார் பாபநாசம் சிவன். சிவன் அவர்களின் இரண்டு மகள்கள் – திருமதி நீலா ராமமூர்த்தி மற்றும் திருமதி ருக்மினி ரமணி , இவர்களும் இசை மற்றும் பாடல்கள் என தொடர் பரம்பரையானது.
திருவையாறு ஸப்த ஸ்தான விழாவில் 1912 முதல் 1957 வரையில், 45 ஆண்டுகள் விடாமல் பஜனை நடத்தியிருக்கிறார் சிவன். 19 ஆண்டுகள் நாகையில் ஆடிப்பூர பஜனை நிகழ்த்தியிருக்கிறார் . சென்னையில் நிரந்தரமாகக் குடியேறிய பிறகு தனது இறுதிக் காலம் வரையில் மயிலையில் மார்கழி மாதத்திலும், பங்குனி உத்திரத் திருவிழாவிலும், மகாசிவராத்திரியின் போதும், அறுபத்து மூவர் உற்சவத்திலும் சிவன் நடத்திவந்த பஜனையில் கலந்துகொண்டு மகிழாத வித்வான்களும், ரசிகப் பெருமக்களும் இல்லை. ஆண்டவன் அளித்த திருவருள் அன்றி வேறில்லை’’ என்பார் . மியூசிக் அகாடமியில் ‘சங்கீத கலாநிதி’ விருது பெற்ற வருடம் நிகழ்த்திய தலைமை உரையின் போது, தற்போது சங்கீதம், சம்பாதிக்கும், சாதனமாகிவிட்டது. ஈசுவரார்ப்பணம் என்பது மறைந்துவிட்டது. அதனால் குருபக்தி குறைந்துவிட்டது. முன்காலத்தில் நடைமுறையிலிருந்த குருகுல வாசம் தற்போது அரிதாகிவிட்டது. பலருக்குப் பொறுமையில்லை! எனவே, நல்ல சங்கீதம் மற்றும் இசைப் பாரம்பரியம் வளரவேண்டும் என்றார்.
இவரின் கீர்த்தனைகள் புத்தக உருவில் வெளிவந்திருக்கிறது. சிந்து பைரவி ராகத்தில் இவர் இயற்றி, ஆலத்தூர் சகோதர்களால் பாடப்பட்டு, இசைத்தட்டாக வெளிவந்த பாடல் ‘சந்திரசேகரா ஈசா’. இப்பாடல் இன்றும் கூட பல மேடைகளில் கர்நாடக இசைக் கலைஞர்களால் பாடப்படுகிறது. அதேபோல,
என்ன தவம் செய்தனை யசோதா – காபி
நான் ஒரு விளையாட்டுப் பொம்மையா – நவரச கானடா
கண்ணனை பணி மனமே தினமே
காணக்கண் கோடி வேண்டும்… – காம்போதி
கா வாவா கந்தா வாவா… – வராளி
ஸ்ரீ வள்ளி தேவ சேனாதிபதே… – நடபைரவி
தாமதமேன்… – தோடி
கடைக்கண்… – தோடி
பாமாலைக்கு இணையுண்டோ – சுப்ரமணிய பாரதியே நீ பக்தியுடன் தொடுத்த
கார்த்திகேயா காங்கேயா… – தோடி,
இப்படி, பல பாடல்கள் , இசை உலகம் இருக்கும் வரை , இவர் பெயர் கூறும். திரை உலகில் பாபநாசம் சிவனின் காலம், நினைவில் அகலாத ஒரு பொன் வீடு.
ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம் உச்சரிக்க வேண்டும் என்ற வரிகள், இவருக்கும் பொருந்தும்.
கீழே தந்துள்ள இரண்டு காணொளிகளையும் பாருங்கள். பாநாசம் சிவன் அவர்களின் பெருமை புலப்படும்.
தற்செயலாக யோகா கற்றுக் கொள்ள வகுப்புக்குக் போனபோது, அதில் ஒரு பட்டப்படிப்பு படிக்க சாத்தியக்கூறு இருக்கிறது என்று தெரிந்ததும் ரொம்ப ஆர்வமாக ரெண்டு வருட படிப்புக்குப் பதிவு செய்து முதுகலை பட்டமாக யோகா படிக்க ஆரம்பித்தான் முருகன்.
யோகா என்பது உடலுக்கு மட்டுமல்ல, அது மனத்தையும் வளப்படுத்தும் மனவளக்கலை என்பது படிக்கக் படிக்க புரியவந்ததிலிருந்தே எப்போதும் ஏதோ ஆத்ம விசாரந்தான் அவனுக்குள். எதுக்கு மனிதப் பிறவி? இந்த வாழ்க்கையின் அர்த்தம் என்ன? நம் பிறப்பின் ரகசியம் என்ன? இந்த உலகில் உயிர்களுக்குள் எவ்வாறு தொடர்பு ஏற்படுகிறது? அடுக்கடுக்காகக் கேள்விகள். முக்கியமாக நான் ஏன் பிறந்தேன்? என் பிறப்புக்கென்ன அர்த்தம்?
தியானத்தில் அமர்ந்து சுற்றிலும் இருக்கும் எல்லோரையும், எல்லாவற்றையும் நம்மை அவற்றோடு சம்பந்தப் படுத்திக் கொள்ளாமல் ஒரு மூன்றாம் மனிதப் பார்வையாகப் பார்க்கும்போது நிறைய விஷயங்கள் புலப்பட ஆரம்பித்தன. இவ்வுலகில் வாழும் எல்லா உயிர்களுக்குமே ஏதோ தொடர்பு இருக்கிறது. காரண காரியம் இல்லாமல் இவ்வுலகில் எதுவும் நடப்பதில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.
பெண்களின் பாதுகாப்பிற்கு ஒரு தற்காப்புக் கலை கற்றுக் கொள்வது மிக்க அவசியம் என்று தோன்ற தன் எட்டு வயது மகளை ‘களரி’ வகுப்பில் சேர்த்தான் முருகன். அந்த வகுப்பு தினமும் கடற்கரையில் காலை ஆறு மணிக்கு ஆரம்பித்து ஏழு மணிக்கு முடியும். மகளை வகுப்பில் விட்டு விட்டு வகுப்பு முடிவதற்காக காத்திருக்கும் நேரத்தில் தினமும் கடற்கரையிலேயே யோகா பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்தான். அதிகாலை குளுமையான காற்றும் இதமான கடற்கரை சூழ்நிலையும் மனதிற்கு உற்சாகமாக இருந்தன. அந்த அமைதியான இதமான சூழலில் அவனுக்குள் வழக்கமான ஆத்மவிசாரமும் தேடலும் ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கும்.
களரி வகுப்பு ஆரம்பிக்கும் முன் குழந்தைகளை ஒரு 500 மீட்டர் தூரம் ஓட்டப்பந்தயம் ஓட வைப்பார்கள். கடற்கரை மணலில் குழந்தைகள் உற்சாகமாக ஓடுவார்கள். ஏதாவது குழந்தை வகுப்பிற்கு தாமதமாக வர நேரிட்டால் அந்தக் குழந்தை தனியாக பந்தயம் ஓட வேண்டியிருக்கும். கடற்கரையில் ஆங்காங்கே நாய்கள் ஒரு குழுவாக ஒன்றையொன்று துரத்தி விளையாடிக் கொண்டிருக்கும். அன்று வகுப்பிற்குத் தாமதமாக வந்த ஒரு ஐந்து வயது பெண் குழந்தை தனியாக 500 மீட்டர் தூரம் ஓட ஆரம்பிக்க, அவள் தன்னுடன் விளையாடத்தான் தன்னை நோக்கி ஓடி வருகிறாள் என்று நினைத்து ஒரு கறுப்பு நிற குட்டி நாய் நாலு கால் பாய்ச்சலில் அவளை துரத்த ஆரம்பித்தது. இதைக் கண்ட குழந்தை பயத்தில் அலறி பாய்ந்து ஓட ஆரம்பித்தாள். களரி வகுப்பில் இருந்த ஒரு பெரிய சிறுவன் சட்டென்று பாய்ந்து ஓடி அந்த நாயை விரட்டி அந்தப் பெண்ணை பத்திரமாக திரும்ப வகுப்பிற்குக் கூட்டி வந்தான்.
முருகன் அந்த நாயை உற்று கவனித்தான். இப்பொழுது தன் கும்பலோடு சேர்ந்து கொண்ட கறுப்பு நாய்க்குட்டியும் பதிலுக்கு அவனையே உற்றுப் பார்த்தது. அதன் கண்களில் தென்பட்ட ஒரு தீனமான பாவம் அவனை என்னவோ செய்தது. கழுத்தில் ஒரு பட்டை, யார் வீட்டிலோ வளர்க்கப்பட்ட நாயோ? அதன் சேட்டையை பொறுக்க மாட்டாமல் வெளியே விட்டு விட்டார்களோ? என்னை யாராவது கவனிக்க மாட்டீர்களா? என்பது போல ஒரு பார்வை. ஆத்ம விசாரத்தில் ஆழ்ந்திருந்த அவனுக்கு, அதற்கும் தனக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குமோ என்று தோன்ற ஆரம்பித்தது.
வீட்டிற்கு வந்தாயிற்று. பெண் குளித்து விட்டு ‘ஆன்லைன்’ வகுப்பிற்கு தயாராக, முருகன் கீழே தோட்டத்திற்கு வந்தான். அவன் வீடு தோட்டத்தோடு கூடிய பெரிய தனி வீடு. தினமும் காலையில் சிறிது நேரம் தோட்ட வேலை செய்வது அவனுக்கு வழக்கம். தோட்டத்தில் அன்றாடம் விழும் இலைக் குப்பைகளை வாரி உரக்குழியில் போட்டு விடுவான். தென்னை, மா, பலா மரங்களை சுற்றி கொத்தி விட்டு நீர் பாய்ச்சி விட்டு தோட்ட மூலையில் இருக்கும் கிணற்றருகே வந்தபோது என்னவோ முனகல் சப்தம் கேட்பது போல் இருந்தது. அவர்கள் வீட்டில் கிணற்றின் மேல் ஒரு வலையைப் போட்டு மூடி வைத்திருப்பார்கள். அந்த வலையின் மேல் மூன்று பூனைக்குட்டிகள் தினமும் விளையாடிக் கொண்டிருப்பதை ஒரு வாரமாகப் பார்க்கிறான். இப்பொழுது பூனைக்குட்டிகளையும் காணும். பின்னே எங்கிருந்து முனகல்?
பதட்டத்தோடு ஓடிப் போய் வலையை விலக்கி கிணற்றுக்குள் பார்த்தபோது ஒரு கறுப்பு நிற நாய்க்குட்டி…..அடடா! நாம அதிகாலையில் கடற்கரையில பார்த்த நாய் போல இருக்கே? ஆமா! கழுத்தில அந்தப் பட்டை கூட இருக்கே…… தவறி விழுந்திருக்குமோ? ஒரு வேளை பூனைக்குட்டிகளை துரத்தி விளையாடும்போது விழுந்திருக்கலாம். நாய்க்குட்டி மேலே ஏறும் முயற்சியில் தன் கால் நகங்களால் கிணற்றின் பக்கவாட்டுக் கற்களை பிடித்துக் கொண்டு எம்பப் பார்த்தது. ஊஹூம்! முடியவில்லை. திரும்ப சறுக்கல். திரும்ப நகங்களால் பற்றிக் கொண்டு ஏற முயற்சி. அவனைப் பார்த்ததும் தன் முயற்சியை சற்றே நிறுத்தி விட்டு தீனமாக ஒருமுறை அவன் கண்களையே பார்த்தது. ‘என்னைக் காப்பாற்ற மாட்டியா?’ என்பது போல.
ஆனால் முருகன் கையை உள்ளே விட்டு அதைத் தூக்க முயற்சித்தபோது பயத்தினாலோ என்னவோ தன்னைக் குறுக்கிக் கொண்டு திரும்ப சறுக்கி விழுந்தது. இப்படியே சற்று நேரம் செல்ல, காம்பவுண்ட் சுவர் வழியே இவனைப் பார்த்துக் கொண்டிருந்த அவன் பக்கத்து வீட்டுக்காரர் என்ன விஷயம் என்று விசாரித்து அறிந்தார். “பேசாம தீயணைப்புக்காரங்களுக்கு சொல்லிடுங்க தம்பி. அவங்க கயத்தைப் போட்டு சட்னு தூக்கிடுவாங்க!” என்றார்.
தீயணைப்பு குழு வந்தது. பலவிதமான முடிச்சுகள் போட்டக் கயிற்றை உள்ளே வீசியதும் நாயின் இரு கால்கள் அதில் மாட்டிக் கொண்டது. சற்றும் தாமதிக்காமல் அலேக்காக வெளியே தூக்கிப் போட பாய்ந்து வெளியே ஓடிய நாய் வாசலருகே வந்ததும் சற்றே நின்று, ‘நன்றிப்பா என்னைக் காப்பாத்தினதுக்கு! நல்லா இரு!’ என்று சொல்வது போல அவனை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்து விட்டுப் பிடித்தது ஓட்டம்.
முருகன் அப்படியே வீட்டு ஹாலில் உட்கார்ந்து காலையில் எழுந்ததிலிருந்து நடந்ததை மனதிற்குள் அசை போட்டான்.
அவன் பெண்ணிற்கு களரி வகுப்பு இல்லாவிட்டால் அவன் காலை நேரத்தில் கடற்கரைக்கு செல்ல வாய்ப்பில்லை. அந்த நாயையும் பார்த்திருக்க முடியாது. ‘அந்த நாயை என்னைப் பார்க்க வைத்தது சற்று நேரத்திற்குப் பிறகு அதைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஏற்பட்டட நிகழ்வா?’
ஒரு நாளின் ஆரம்பம் முதல் முடிவு வரை இவ்வுலகில் நடக்கும் செயல்கள் அனைத்தும் ஏதோ திட்டமிடலுக்கு உட்பட்டு நடைபெறுகிறது. நம் ஒவ்வொருவருக்கும் இந்தப் பிறவியில் ஏதோ வேலை இருக்கிறது. அதை நடத்த இறைசக்தி துணை நிற்கிறது என்பதெல்லாம் முருகனுக்குப் புரிய ஆரம்பித்தது.
இந்த மாதிரி நமக்குள்ளேயே தேடித் தேடி அறிந்து கொள்ள முற்படுவதைத் தான் ‘அறிய அறிய கெடுவாருண்டோ’ என்று சொல்லியிருப்பார்களோ? என்று நினைத்தான். இது போல ஆராய்ந்து அறிய தன்னை அறிய முனையும் முயற்சியில் அவனுடன் துணை நிற்கும் இறைசக்தியை மானசீகமாக வணங்கினான்.
(தேவகியிடம் இருந்த பெண் குழந்தையான மாயையின் கால்களைப் பற்றி ஓங்கி அடித்துக் கொல்ல கம்சன் முயன்றான். அக்குழந்தை அவனிடம் இருந்து நழுவி மேலே சென்று துர்க்கையாகக் காட்சி தந்தது…..)
கம்சன் அஞ்சி நிற்றல்
தூண்டிற்பொன் மீனைப் போலும், சுடரெரிகொள் மெழுகைப் போலும், மூண்டபெரும் இடியைக் கேட்டு முடங்கிடுமோர் அரவம் போலும், கூண்டுக்குள் மாட்டிக் கொண்ட கொடியவரிப் புலியைப் போலும், மீண்டெழுந்த மாயை கண்டு மெய்முழுதும் நடுங்க நின்றான்
(தூண்டிற்பொன்- தூண்டிலில் உள்ள இரும்பு முள்)
மாயை கம்சனிடம் கூறுவது
“மோதியே கொல்ல எண்ணி மூடனே, நீயும் என்றன் பாதமே பிடித்த தாலே பரிவுடன் பிழைபொ றுத்தேன்; ஆதியும் வேறி டத்தில், ஆற்றலாய் வளரு கின்றான், சாதலும் அவனால் என்றே சற்றுநீ அறிந்து கொள்வாய்!”
(ஆதி- திருமால்)
மாயை மறைந்து, மண்ணில் பல இடங்களில் பல வடிவம் எடுத்தல்
மறைந்தனள் மாயை, இந்த மண்ணிலே வேறு, வேறு, சிறந்தநல் இடங்கள் தோறும் திகழ்ந்தனள் பெயர்கள் மாறி; அறந்தனைக் காக்க வேண்டி, அவள்பல வடிவம் தாங்கிச் செறிந்திடும் கோவில் கொண்ட திருக்கதை சிலிர்க்கச் செய்யும்.
குறிப்பு: விஷ்ணு துர்க்கை, பத்திரகாளி, விஜயா,வைஷ்ணவி,குமுதா, சண்டிகை, கிருஷ்ணை, மாதவி, கன்னிகை, நாராயணி, சாரதா, அம்பிகா போன்ற பல பெயர்களில் மாயையைப் பல இடங்களில் அடியார்கள் வழிபடுவதை இன்றும் காணலாம்
தேவியைப் போற்றி வேண்டுதல்
( கவிக்கூற்று)
இம்மையும், மறுமை மற்றும் இனிவரும் பிறவி எல்லாம் செம்மையாய் வாழ்வ தற்குத் திருவருள் புரிவோய் போற்றி! வெம்மையாம் வினைகள் நீங்க விதவித வடிவம் கொள்ளும் அம்மையே, அன்பே, போற்றி! ஆட்கொளும் தேவி போற்றி!
சேயெலாம் முகத்தைப் பார்க்கத் தேம்பிடும் வேளை இங்குத் தாயென இடங்கள் தோறும் தந்தனை காட்சி அம்மா! தீயெனத் தீமை யாவும் தீர்த்திட வேண்டும் அம்மா! ஈயென வரங்கள் கேட்டோம் இரங்கிட வேண்டும் அம்மா!
தன் தவற்றை உணர்ந்து வருந்திய கம்சன் தேவகியிடம் கூறுவது
பாங்காக வளர்கின்றான் வேறி டத்தில், பரந்தாமன் என்றவுண்மை அறிந்த தாலே, பூங்காற்றும் புயல்போல வீசு கின்ற போராண்மைப் பெருநாட்டின் மன்னன் கம்சன், தூங்காமல் அச்சத்தால் கலங்கி உள்ளம் துடிதடித்தான், தன்னைக்கொன்(று) உயிரை இங்கு வாங்காமல் விடமாட்டான், அதைத்த டுக்கும் வழியறிய வேண்டுமென எண்ணம் கொண்டான்
பத்து நாள்களுக்குள் பிறந்த குழந்தைகளைக் கொல்ல அமைச்சர்கள் வலியுறுத்தல்
முத்தணிசெய் முடிசூடும் மன்னன் கம்சன் மூண்டவற்றை அமைச்சரிடம் விளக்கிக் கூற, அத்தனையும் கேட்டவரும் அதிர்ச்சி கொண்டார், ஆத்திரத்தால் அறிவிழந்தார், உடனே சொன்னார், “பத்தென்ற நாள்களுக்குள் பிறந்து வாழும், பால்மணமே மாறாத குழந்தை எல்லாம் இத்தரையில் இங்குள்ள ஊர்கள் தேடி, இகலரக்கர் சென்றுடனே கொல்ல வேண்டும்!”
(இகலரக்கர் – பகையுணர்ச்சி/ போர்க்குணம் உடைய அரக்கர்)